News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தீபாவளி கொண்டாட்டம்! சென்னையில் 18,000 போலீசார் குவிப்பு!

சென்னையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை வருகிற 12ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க வணிக வளாகங்கள், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் குவிந்து வருகின்றனர். இதனால் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பல்வேறு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், பொது […]

தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் சொன்ன பதில்!

தி.மு.க.வுடன் கூட்டணியா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சுவாரசியமான பதிலை வழங்கியுள்ளார்.   நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.   சென்னை  எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் உபகரணம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட கமல்ஹாசன் உபகரணத்தை திறந்து வைத்து பேசினார். […]

பிற மாநில ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக அரசு உத்தரவு!

பிற மாநில ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. வருகிற 12ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி ரெயில்களிலும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் தங்களின் பயணத்தை மேற்கொள்ள முன்பதிவு டிக்கெட் வசதி உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகின்றனர். பண்டிகை காலங்களின் போது ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிப்பதாக அடிக்கடி புகார்கள் எழுவதும், அந்த  ஆம்னி பேருந்துகள் பறிமுதல் […]

தொடரும் ஐ.டி.சோதனை! அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் எவ்வளவு கிடைத்தது தெரியுமா?

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வரம் நிலையில் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுப்பணித்துறை அமைச்சரான எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 40 இடங்களில் கடந்த 3ம் தேதி முதல் வருமானவரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். 5வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், ஓட்டல்களிலும், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் கோவையில் உள்ள […]

10 ரூபாய் நாணயத்தை பெற மறுத்தால்…. என்ன நடக்கும் தெரியுமா?

10 ரூபாய் நாணயங்களை பெற மறுப்பது சட்டப்படி குற்றம் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.   கடந்த 2009ம் ஆண்டு 10ரூபாய் நாணயம் இந்திய ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ள போதிலும், மக்கள் சிலர் அவற்றை வாங்க மறுக்கிறார்கள். மேலும் இது போன்ற சம்பவங்கள் பெருமளவில் கிராமப்புறங்களில் நடப்பதாக பொது மக்கள் சிலர் வேதனை தெரிவித்து வருகின்றனர்.   இதெல்லாம் கூட பரவாயில்லை. அரசு பேருந்துகளில் […]

15 ஆண்டுகள் பழைய வாகனங்கள்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

15 ஆண்டுகளுக்கு மேலான அரசு பேருந்துகள் மற்றும் அரசு வாகனங்களின் பதிவு செல்லுபடியாகும் காலத்தை தமிழக அரசு மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.   தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பழைய வாகனங்களை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து மாநிலத்தில் இயங்கி வரும் 15 ஆண்டுகளுக்கு அரசுத்துறையில் இயங்கி வரும் வாகனங்களின் மொத்த விவரங்களை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று […]

விவாகரத்து கோரிய முன்னாள் அமைச்சர்! கணவர் மீது போலீசில் புகார்!

புதுச்சேரியின் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா தனது கணவர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக டி.ஜி.பி.யிடம் புகார் அளித்துள்ளார். புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்து ராஜினாமா செய்தவர் சந்திரபிரியங்கா. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த போதிலும் அவர் தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருவதோடு அரசு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் டி.ஜி.பி. ஸ்ரீனிவாசை சந்தித்த முன்னாள் அமைச்சர் சந்திரபிரியங்கா, தனது கணவர் சண்முகம் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது தன்னுடைய கணவரான சண்முகத்திடம் இருந்து […]

தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!

தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான நவம்பர் 13ம் தேதியை விடுமுறை நாளென்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வருகிற 12ம் தேதி தீபாவளி பண்டிகை வெகு கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை முன்னிட்டு மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி உள்ளனர். இதற்கிடையில் பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர். அதாவது ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வருவதால் அதற்கு மறுநாளான திங்கட்கிழமையை (நவ.13) விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்பதுதான். வெளியூர் செல்லும் […]

தலைமை செயலாளரை திடீரென்று அழைத்து பேசிய ஆளுநர்! தமிழகத்தில் பரபரப்பு!

தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவை, ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மாளிகைக்கு அழைத்து திடீர் சந்திப்பு மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையிலான கருத்து மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான பிரச்சினையை பூதாகரமாக்கியது. இதன் தொடர்ச்சியாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தான் செல்லும் […]

சனாதனம் குறித்து நான் பேசியதில் எந்த தவறும் கிடையாது- அமைச்சர் உதயநிதி உறுதி!

சனாதனம் குறித்து நான் பேசியதில் எந்த தவறும் கிடையாது. எதுவாக இருந்தாலும் சட்டப்படி அதனை சந்திப்போம் என்று அமைச்சர் உதயநிதி மீண்டும் உறுதிபட தெரிவித்தார். தி.மு.க. இளைஞர் அணி சார்பில் தொடங்கப்பட்டுள்ள நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  தொல் திருமாவளவனின் சென்னை அசோக்நகரில் உள்ள அவரது அலுவலகத்திற்கு நேரில் சென்ற அமைச்சர் உதயநிதி அவரிடம் கையெழுத்து பெற்றார். […]