மற்றொரு பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் பொன்முடி!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தற்போது மேலும் ஒரு பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் இன்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்காமல் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்துள்ளார். ஏற்கனவே நடைபெற்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி,தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று பகிரங்கமாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக […]
புதிய கொள்கையை வகுத்து ஜவுளித் தொழிலை காப்பாற்றுங்கள்- எடப்பாடி பழனிசாமி!

புதிய ஜவுளிக் கொள்கையை வகுத்து ஜவுளித் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், ‘‘மின் கட்டணத்தை குறைக்கக் கோரி அமைச்சர்களையும், அரசு உயர் அதிகாரிகளையும், ஜவுளித்துறையினர் சந்தித்து கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் விசைத்தறி மற்றும் ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பினர் சங்கம் கடந்த 5ம் […]
தி.மு.க.வும் நானும் எதற்கு பயப்படமாட்டோம்! எ.வ.வேலு உறுதி!

தி.மு.க.வும், நானும் எதற்கும் பயப்படமாட்டோம் என்று அமைச்சர் எ.வ.வேலு, செய்தியாளர்கள் சந்திப்பின் போது உறுதியாக தெரிவித்தார். பொதுப்பணித்துறை அமைச்சரான எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 40 இடங்களில் கடந்த 3ம் தேதி முதல் வருமானவரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். 5வது நாளாக நேற்று சோதனை நடைபெற்றது. அதன்படி எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், ஓட்டல்களிலும், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அதேபோல் கோவையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினரான மீனா […]
சென்னையில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை! பரபரப்பு தகவல்கள்!

சென்னையில் ஒரே நேரத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை முதல் சென்னையை அடுத்த பள்ளிக்கரணை, படப்பை மற்றும் பெரும்பாக்கம் ஆகிய 3 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து கிடைத்த முதல்கட்ட தகவலின்படி, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கக் கூடிய நபர்கள் மற்றும் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை […]
நாகாலாந்து விவகாரம்! ஆர்.எஸ்.பாரதிக்கு எச்சரிக்கை விடுத்த இல.கணேசன்!

நாய்கறி விவகாரம் குறித்து பேசிய ஆர்.எஸ்.பாரதியை, நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் கடுமையாக விமர்சித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி நாய்க்கறி உண்ணும் நாகாலாந்து மக்களே அங்கே ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை விரட்டி அனுப்பி விட்டதாகவும், அப்படியானால் உப்பு போட்டு உண்ணும் தமிழர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்று பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆர்.எஸ்.பாரதிக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், […]
எ.வ.வேலு ஐ.டி.ரெய்டு! அந்த 2 சூட்கேசில் என்ன இருக்கிறது?

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் 5வது நாளாக சோதனை நடத்தி வரும் நிலையில் அதிர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 3ம் தேதி முதல் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் அருணை பொறியியல் கல்லூரியில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்த தொடங்கினர். பொதுப்பணித்துறை அமைச்சரான எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 40 இடங்களில் கடந்த 3ம் தேதி முதல் வருமானவரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். […]
அறிவாலயத்திற்கு அதிர்ச்சி தந்த பிரபலம்! அ.தி.மு.க.வில் இணைந்தார்!

தி.மு.க. மீனவர் அணியின் முன்னாள் அமைப்பாளரான நசரேத் பசிலியான் தற்போது அ.தி.மு.க.வில் இணைந்து அறிவாலயத்திற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற நெருங்க நெருங்க இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்று கூறும் அளவுக்கு ஆகிவிட்டது அரசியல்களம். ஆளும் கட்சியில் இருந்து அவ்வளவு எளிதில் யாரும் எதிர்க்கட்சிக்கு சென்றுவிடமாட்டார்கள். ஆனால் அதே நேரத்தில் தேர்தல் வரப்போகிறது என்றால் எதுவும் சாத்தியம்தான் என்பதை நிரூபித்துள்ளது இன்று நடந்த மிகப்பெரிய நிகழ்வு. தி.மு.க. மீனவர் அணியின் முன்னாள் அமைப்பாளராக இருந்த […]
மேடையில் விழுந்து விழுந்து சிரித்த பிரியங்கா காந்தி! என்ன நடந்தது தெரியுமா?

மத்தியபிரதேசத்துல நடந்த தேர்தல் பிரசார மேடையில தொண்டர் ஒருத்தர் செய்த செய்கையை பார்த்த பிரியங்கா காந்தி விழுந்து விழுந்து சிரிச்ச வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மத்தியபிரதேசத்திற்கு வருகிற 25ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பிரதான கட்சிகள் தேர்தல் பிரசார களத்தில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் மத்தியபிரதேசம் இந்தூர் நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணி தொலைக்காட்சியில் […]
அ.தி.மு.க. பெயர், கொடியை பயன்படுத்த தடை! சிக்கலில் ஓ.பன்னீர்செல்வம்!

அ.தி.மு.க. பெயர் மற்றும் கொடியை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மற்றும் ஆதரவாளர்கள் இனிமேல் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து விலக்கப்பட்ட நிலையில் அவர் வகித்து வந்த பதவியும் பறிக்கப்பட்டது. இருப்பினும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து அ.தி.மு.க. பெயர், கொடியை பயன்படுத்தி வந்த நிலையில் இது தொடர்பாக உரிமையியல் வழக்கு தொடரப்பட்டது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்று தன்னை ஓ.பன்னீர்செல்வம் கூறி வந்ததால் தொண்டர்கள் இடையே குழப்பத்தை […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ப்ளூ காய்ச்சல்! அமைச்சர் தகவல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ப்ளூ காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அவர் தற்போது மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி ஓய்வில் உள்ளார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை பொது சுகாதாரத்துறை இயக்குனரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் உள்ளிட்ட திட்டங்களை புதுப்பித்து தொடங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பயனாளிகளுக்கு உதவித் தொகை மற்றும் குழந்தை நல பரிசு பெட்டகத்தை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய […]

