ஒரே நாளில் 81 எம்.பி.க்கள் அவுட் – பா.ஜ.க. நாடாளுமன்ற ஜனநாயகம் சூப்பரு

தங்கள் சார்பில் கேள்வி எழுப்புவதற்காகத்தான் எம்.பி.க்களை மக்கள் தேர்வு செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள். நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பக்கூடாது என்பதற்காக ஒரே நாளில் 81 எம்.பி.க்களை சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளது பா.ஜ.க. அரசு. ’நாடாளுமன்றத்தில் இப்படியொரு அராஜகம் எப்போதும் நிகழ்ந்ததில்லை. இந்த நாட்டின் பாதுகாப்பிற்காக போராடுவதுதான் நாங்கள் செய்த குற்றம். மோடி அரசு இந்தியா கூட்டணி கட்சிகளை அச்சுறுத்தி பணியவைக்கலாம் என்று நினைக்கிறது. அது ஒருபோதும் நடக்காது. நாடாளுமன்றத்தில் இருந்து இன்று நீங்கள் எங்களை நீக்கலாம். […]
ரூ.133.21 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா! கோவையில் கோலாகலம்!

கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் ரூ.133.21 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள செம்மொழி பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி கடந்த 2010ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன் பின்னர் அ.தி.மு.க. ஆட்சியில் அமர்ந்த போது இத்திட்டத்தை கைவிட்டது. இந்நிலையில் கடந்த மாதம் (நவம்பர்) நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, கோவையில் செம்மொழி பூங்கா […]
தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்! பாலச்சந்திரன் எச்சரிக்கை!

தென் மாவட்டங்களில் 2நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் ரெட் அலர்ட் என்றும் தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால், தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக […]
பிரதமரை சந்திக்க நேரம் கேட்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

வெள்ள பாதிப்புகள் தொடர்பான நிவாரண நிதி வழங்க வேண்டி பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரம் கோரியுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அதன்படி கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வங்கக்கடலில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பெருமழை வெள்ளத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அதிகன மழை பெய்தது. இதில் ஏற்பட்ட பெரும் சேதத்தை மத்திய அரசு ஆய்வுக்குழுவை அனுப்பி […]
துண்டிக்கப்பட்ட திருச்செந்தூர்! வதந்திகளை தடுக்க அரசு நடவடிக்கை!

திருச்செந்தூரில் கனமழை காரணமாக மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வதந்திகள் பரவாமல் இருக்க நடப்பு நிலவரத்தை ஒலிப்பெருக்கி மூலம் தெரிவிக்க மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தென்மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வரும் கனமழை காரணமாக திருந்செந்தூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் எந்த வாகனமும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிப்போயுள்ளனர். இதனால் பொது […]
WKMA விருது வழங்கும் விழா! தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு!

வேர்ல்டு கராத்தே மாஸ்டர் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். உலகம் முழுவதும் 52 நாடுகளில் உறுப்பினர்களைக் கொண்டு உலகின் தலைசிறந்த கராத்தே மாஸ்டர் சங்கமாக விளங்கி வருவது வேர்ல்டு கராத்தே மாஸ்டர் அசோசியேஷன். கடந்த 4 ஆண்டுகளாக சேவை புரிந்து வரும் இதில் கடந்த 2 ஆண்டுகளாக கராத்தே மாஸ்டர்கள் மற்றும் வீரர்களை கவுரவிக்கும் வகையில் விருது வழங்கும் […]
மக்களுடன் முதல்வர்: 7945 பயனாளிகளுக்கு ரூ.110.51 கோடியில் நலத்திட்ட உதவிகள்!

கோவையில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7945 பயனாளிகளுக்கு ரூ.110.51 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பொதுமக்களின் சேவைகள் பொதுமக்களுக்கு விரைவாக கிடைக்கவும், மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைவாக தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில் ‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.18) கோவை மாவட்டம் என்.என்.ஆர். கல்லூரி வளாகத்தில் […]
செய்தியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை: அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு!

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் தினசரி செய்தித்தாள் பத்திரிகை, செய்தி தொலைக்காட்சிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்களுக்கான மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இந்திய இறையாண்மையின் முக்கிய தூணாக விளங்கும் செய்தித்துறையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். உலக நடப்புகளையும், உள்ளூர் நடப்புகளையும் மக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள உதவும் தினசரி செய்தித்தாள் மற்றும் செய்தி தொலைக்காட்சிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், முதன்மை செய்தியாளர்கள் உள்ளிட்ட பத்திரிகையாளர்களுக்கென்று இன்று […]
அடடே, தமிழகம் மீண்டும் முதல் மாநிலம்… இந்தியா டுடே ஆய்வு ரிப்போர்ட்

இந்தியா டுடே செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியாவின் மொத்த மாநிலங்களின் சிறப்பான செயல்பாடுகளுக்கான பட்டியலில் அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து தமிழகம் 2022 ஆண்டுக்கு முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா டுடே நிறுவனம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், ஸ்டேட் ஆப் ஸ்டேட்ஸ் என்ற பெயரில் மாநிலங்களின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகளை பட்டியலிட்டு அதற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியிட்டுள்ள மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து 5வது ஆண்டாக தமிழகம் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 1, […]
பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி இல்லையாம்..! ஸ்டாலினுக்கு லக் அடிக்குமா..?

சமீபத்தில் நடந்த ஐந்து மாநில தேர்தலில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது. வாக்கு சதவிகிதம் அதிகரித்திருந்தாலும் தோல்விக்குக் காரணம் கூட்டணி வைக்க முடியாமல் போனதுதான் என்று கூறப்படுகிறது. குறிப்பாக மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் இண்டியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மியும், சமாஜ்வாதியும் கேட்ட தொகுதிகளைக் கொடுப்பதற்கு காங்கிரஸ் முன்வரவில்லை. அதனாலே இந்த தோல்வி என்று தெரியவந்துள்ளது. ஆகவே, இனி மாநிலத் தேர்தல் மற்றும் மத்திய தேர்தலில் அனைத்து கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் […]

