News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

மாணவர்கள் மோதல்: சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழப்பு!

கல்லூரி மாணவர்கள் மோதலில் காயமடைந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.   சென்னை மாநில கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த சுந்தர் என்பவருக்கும், பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையில் அடிக்கடி கோஷ்டி மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.   இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 5ம்தேதி) சுந்தர் சென்னை சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் […]

திருப்பூர் வெடி விபத்து: உயிரிழப்பு 3 ஆக அதிகரிப்பு.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிக்குட்பட்ட பெருமாநல்லூர் சாலை அமைத்துள்ளது.  இங்கு பாண்டியன் நகர் சத்யா காலனியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் உள்ள கோவில் விசேஷங்களுக்கு தேவையான பட்டாசு நாட்டு வெடிகளை வீட்டில் இருந்தபடியே தயாரித்து கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.   இந்நிலையில் இன்று (அக்டோபர் 8) மதியம் திடீரென்று கார்த்திக் வீட்டில் இருந்து வெடிசத்தம் கேட்டது. இதில் அவர் வீடு தரைமட்டமாக சேதமடைந்தது. இந்த வெடி விபத்தில் […]

விஜய் கட்சியில் சேர்கிறாரா காளியம்மாள்..? நாம் தமிழர் கட்சியில் அடுத்தடுத்து விலகல்

சீமான் கட்சியில் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் காளியம்மாளுக்கும் சீமானுக்கும் இடையிலான பஞ்சாயத்து முடிவுக்கு வராததால், விஜய் கட்சியில் அவர் இணைய இருப்பதாக பேச்சு அடிகிறது. இதையடுத்து நாம் தமிழர் இயக்கம் கலகலத்துப் போயிருக்கிறது. இது குறித்துப் பேசும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், ‘’காளியம்மாளை பிசிறு என்று சீமான் பேசியதை எங்கள் கட்சியினர் யாருமே ரசிக்கவில்லை. அதன்பிறகு சீமானை காளியம்மாள் சந்தித்த பிறகும் அவர்களுக்குள் இணக்கம் வரவில்லை. காளியம்மாளை […]

தொடர் விடுமுறை: சிறப்பு பேருந்துகளை இயக்கும் தமிழக அரசு!

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.   அக்டோபர் 11ம் தேதி சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையும், அக்டோபர் 12ம் தேதி (சனிக்கிழமை) விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வருவதால் தொடர்ந்து விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைத்துக்கும் விடுமுறை என்பதால், பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.   அந்த வகையில் தமிழக அரசு […]

மெரினா உயிரிழப்பு: காவல்துறை பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்த உள்துறை செயலர்!

மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்சசியை கண்டுகளித்து மயங்கிவிழுந்த பொதுமக்களில் 5 பேர் உயிரிழந்தனர். இது குறித்து காவல்துறை உரிய விளக்கமான பதில் அளிக்க வேண்டும் என்று உள்துறை செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.   மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப்படை நடத்தி விமான சாகசத்தை லட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர். காலை 11 மணிக்கு  முதல் மதியம் 1 மணிவரை நிகழ்ச்சி நடைபெற்றதால் வெயில் காரணமாகவும், கூட்ட நெரிசல் காரணமாகவும் பொதுமக்களில் நூற்றுக்கணக்கானோர் மயங்கி […]

ஆதவ் அர்ஜூனனை வைத்து வி.சி.க. போடும் மாஸ்டர் பிளான்! ஆடிப்போன தி.மு.க.!

தி.மு.க.வுக்கும் அதன் கூட்டணியில் உள்ள முக்கியமான கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையில் கடந்த சில மாதங்களாகவே பனிப்போர் நடைபெறுகிறது என்று தான் சொல்ல வேண்டும். எப்பொழுதில் இருந்து என்று கேட்டால், ஆதவ் அர்ஜூனன் எப்போது வி.சி.க.வில் காலடி எடுத்து வைத்தாரோ அப்போதில் இருந்து என்று சொன்னால் அது மிகையாகாது.   அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக இருந்த நிலையில், சர்ச்சையான வகையில் கருத்து தெரிவித்தார். மேலும் மது ஒழிப்பு மாநாட்டை நடத்தி வி.சி.க.வும் சில உள்குத்து […]

குலத் தொழிலுக்குப் பிறகு ஈஷாவுக்கு ஆதரவாக வானதி சீனிவாசன். அண்ணாமலை இடத்தைப் பிடிக்கிறாரா..?

விஷ்வகர்மா திட்டம் என்பது புதிதாக கைவினைத் தொழில்களைத் தொடங்க ஊக்குவிக்கும் திட்டம் என்று குலத்தொழிலுக்கு ஆதரவாக கூட்டம் போட்டு பேசிய வானதி சீனிவாசனுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் இன்று குற்றம் சாட்டப்பட்டுள்ள ஈஷா மையத்துக்கு ஆதரவாக நேரடியாக களம் இறங்கியிருக்கிறார். ஹெச்.ராஜா அமைதியாக இருக்கும் நிலையில் வானதி சீனிவாசன் தொடர்ந்து சர்ச்சையில் சிக்குவதை அடுத்து, அண்ணாமலை இடத்துக்குப் போட்டியிடுவதாக சொல்லப்படுகிறது. விஸ்வகர்மா யோஜனா திட்டம் மூலம் ஐந்தொழில் செய்பவர்கள் சலவை ,சவரம்,செருப்பு தைக்கும் தொழில் […]

ஜம்மு காஷ்மீர், ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஜே… மகாராஷ்டிராவில் களம் இறங்கிய ராகுல்காந்தி

கடந்த முறை ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலோடு மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலும் இணைத்து நடத்தப்பட்டது. ஆனால், இம்முறை பா.ஜ.க.வின் வசதிக்காக வரும் நவம்பரில் மகாராஷ்டிரா தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஹரியானா, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி தரும் என்று எக்ஸிட் போல் முடிவுகள் காட்டும் நிலையில், அதை கொண்டாடுவதற்குள் மகாராஷ்டிரா தேர்தலுக்கு ராகுல் காந்தி களம் இறங்கியிருக்கிறார். ஏனென்றால், இந்த தேர்தல் வெற்றியே நாடாளுமன்றத்தில் பெரும் தாக்கத்தை உருவாக்கும் என்று சொல்லப்படுகிறது. […]

சேதமடைந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் தங்கக்கொடி மரம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு இன்று (அக்டோபர் 4) கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோற்சவ விழா 9ம் நாட்கள் தொடர்ந்து நடக்கும். அதாவது வரும் 12ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரங்களுடன் கூடிய சிறப்பு வழிபாடு நடக்க உள்ளது.   பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானுக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் […]

விஜய்யை மீண்டும் சீண்டிய தமிழிசை சவுந்தரராஜன்!

தமிழக வெற்றிக்கழகத்தை விஜய் கடந்த பிப்ரவரி மாதம் ஆரம்பித்ததில் இருந்தே பாஜக நிர்வாகி தமிழிசை சவுந்தரராஜன் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதோடு கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்.   விஜய் முதல்முறையாக நீட் குறித்து அறிக்கைவிட்ட போது, அதையும் தமிழிசை விமர்சனம் செய்தார். ஒரு விஷயத்தை பற்றி சரியாக தெரியாமல் அறிக்கை விடாதீர்கள் என்றும் அவருக்கு அரசியல் அனுபவம் இல்லை என்றும் விமர்சித்தார். இது த.வெ.க. தொண்டர்கள் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.   அதைத்தொடர்ந்து பெரியார்திடலுக்கு சென்ற […]