News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தேவர் குருபூஜையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! பசும்பொன் பயணம்!

வருகிற 30ம் தேதி நடைபெற உள்ள முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாளான அக்டோபர் 30 ஆம் தேதி குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 29ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அதைத்தொடர்ந்து அக்டோபர் 30ம் தேதி கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை […]

பங்காரு அடிகளார் மறைவு! பிரதமர் இரங்கல் கடிதம்!

பங்காரு அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் கடிதத்தை பிரதமர் மோடி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் கொடுத்து அனுப்பி ஆறுதல் கூறினார். ஆதிபராக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் கடந்த 19ம் தேதி (அக்டோபர்) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். பங்காரு அடிகளாரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். மேலும் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பங்காரு அடிகளாரின் இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டது. இந்நிலையில் ஆதிபராசக்தி […]

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்! பக்தர்கள் அதிர்ச்சி!

  செங்கல்பட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மாரடைப்பு காரணமாக இன்று (அக். 19) காலமானார்.   மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி அதன் குருவாக செயல்பட்டு வந்து பக்தர்கள் மத்தியில் பிரபலமானவர் பங்காரு அடிகளார். அவருக்கு வயது 82. அதோடு மட்டுமல்லாமல் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.   கடந்த 2019ம் ஆண்டு இந்திய […]

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புதிய மேல்சாந்தியாக பி.என்.மகேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இப்படிப்பட்ட தனித்துவம் வாய்ந்த சபரிமலை ஐயப்பன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்ற ஆண்டுதோறும் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி தேவசம் போர்டு நேர்முகத் தேர்வு நடத்தி இறுதி செய்யப்பட்டவர்களின் பெயர்களுடன், ஐயப்பன் கோவில் கருவறை முன்பு சீட்டு குலுக்கல் முறையில் புதிய மேல் சாந்தியை தேர்வு செய்து வருகிறது. அப்படி […]

ராமேஸ்வரத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சாமி தரிசனம்! வைரல் புகைப்படங்கள்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘லியோ’ திரைப்படத்தின் வெற்றிக்காகவும் சிறப்புக்காட்சி அனுமதி குறித்தும் வழிபாடு நடத்த ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து நாளை மறுநாள் (அக்.19) லியோ திரைப்படம் உலகளவில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்திற்கான 4 மணி சிறப்புக் காட்சிக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.   இருப்பினும் காலை 9 மணிக்காட்சிக்கு பதில் 7 மணி சிறப்புக்காட்சி […]

திருப்பதிக்கு சென்ற லோகேஷ் கனகராஜ்! வைரல் வீடியோ!

  லியோ திரைப்படம் வெற்றியடைய வேண்டிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திருப்பதி சென்றுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   சமீப காலமாகவே புதிதாக வெளிவரக்கூடிய திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என்று ஒட்டுமொத்த படக்குழுவே திருப்பதிக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்கிறார்கள்.   அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் வருகிற 19ம் தேதி உலகளவில் ரிலீசாக உள்ளது. இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்தானதால் ரசிகர்களுடன் சேர்த்து ஒட்டுமொத்த படக்குழுவே […]

திடீரென்று மொட்டையடித்துக் கொண்ட முதலமைச்சரின் மனைவி! முக்கிய பின்னணி!

சட்டமன்ற தேர்தலில் தனது கணவர் சந்திரசேகரராவ் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு தான் அவரது மனைவி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டையடித்து கொண்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. 119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா மாநிலத்திற்கு வருகிற நவம்பர் 30ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இது குறித்து கடந்த 9ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. அதன் எதிரொலியாக நேற்று முன்தினம் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மனைவி ஷோபா […]

தமிழக ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு! நீங்கள் கலந்து கொள்ள வேண்டுமா?

தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெற இருக்கும் நவராத்திரி கொலு நிகழ்ச்சியில் 10 நாட்களில் தலா 150 பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.   நாடு முழுவதும் நவராத்திரி விழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக ஆளுநர் மாளிகையிலும் நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிட பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   அதன்படி வருகிற அக்டோபர் 15ம் தேதி நவராத்தி கொலு விழாவை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து […]

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அக்.17ம் தேதி நடைதிறப்பு!

ஐப்பசி மாத பூஜையை முன்னிட்டு வருகிற அக்டோபர் மாதம் 17ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைதிறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ் மாதங்களில் முதல் 5 நாட்களுக்கு நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி வருகிற ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவிலின் நடை வருகிற 17ம் தேதி திறக்கப்படுகிறது. மாலை 5.30மணியளவில் தந்திரி கண்டாரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன நம்பூதரி நடையை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து குத்துவிளக்கேற்றி தீபராதனையும் […]

முக்கிய கோவிலில் ஆடை கட்டுப்பாடு! எங்கே தெரியுமா?

பூரி ஜெகந்நாதர் கோவிலில் வருகிற ஜனவரி மாதம் 1ம் தேதி பக்தர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது. ஒடிசா மாநிலம் பூரியில் உலகப்புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயம் அமைந்துள்ளது. 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த புராதன கோவிலுக்கு உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலுக்குள் பக்தர்கள் கேமரா, செல்போன் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்லவும், கோவிலில் படம் எடுக்கவும் ஏற்கனவே தடை அமலில் உள்ளது. அந்த வகையில் தற்போது வருகிற ஜனவரி 1ம் தேதி […]