News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

கர்நாடகாவுக்கு புதிய உத்தரவிட்ட காவிரி மேலாண்மை வாரியம்! என்னவென்று தெரியுமா?

தமிழகத்திற்கு 3,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.   காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் இடையே பெரும் போராட்டமே நடைபெற்று வருகிறது. அதன் எதிரொலியாக இன்று கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம், பெங்களூர் மற்றும் மைசூர் நகரங்களில் 144 தடை உத்தரவு என கர்நாடக மாநிலம் ஸ்தம்பித்துப் போயுள்ளது.   இந்த பரபரப்பான சூழ்நிலையில் […]

அக்.1ம் தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

வருகிற அக்டோபர் மாதம் 1ம் தேதி தி.மு.க.மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்ற முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற அக்டோபர் 1ம் தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதேபோல் தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டமும் ஒன்றாக சேர்த்து காணொலி காட்சி வாயிலாக அக்டோபர் மாதம் 1ம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து […]

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில்பாலாஜி! காவல் 7வது முறையாக நீட்டிப்பு!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது காவல் 7வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அல்லி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். செந்தில்பாலாஜி மீது 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பான விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் […]

அவசரமாக கூட்டப்படும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்! முக்கிய பின்னணி!

கர்நாடகாவில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தின் எதிரொலியாக டெல்லியில் இன்று அவசர அவசரமாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது.  தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதன்படி கடந்த 26ம் தேதி பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்ட போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று (செப்.29) கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்தால் அம்மாநிலமே ஸ்தம்பித்து போயுள்ளது. […]

கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்! உச்சகட்ட பதற்றம்!

கர்நாடக மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் பெங்களூரில் மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து நீரை திறந்துவிட அம்மாநிலத்தின் விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 26ம் தேதி (செப்.) பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.  அதற்கு முன்பாகவே பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக பெங்களூரில் அன்று 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. […]

முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிட முயற்சித்த மாணவர்கள்! மணிப்பூரில் பதற்றம்!

மணிப்பூர் முதலமைச்சரின் வீட்டை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் திடீரென்று முற்றுகையிட முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக வெடித்தது. இதன் தொடர்ச்சியாக வன்முறை வெடித்த  நிலையில் நிலைமை கட்டுக்குள் வராததால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவையும் துண்டித்து வைக்கப்பட்ட நிலையில் கடந்த 23ம் தேதி (செப்) […]

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம்- மத்திய சட்ட ஆணையம் ஆதரவு!

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த அறிக்கை மத்திய அரசிடம் சட்ட ஆணையம் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக நம்பத்தகுந்த அரசியல் வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. பிரதமர் மோடியின் கனவுத்திட்டம் என்று சொல்லும் அளவுக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பல்வேறு தரப்பினர் மத்தியில் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. மேலும் தேர்தல் ஆணையம் மற்றும் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகள் கேட்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அதன்படி நாடாளுமன்ற மக்களவையுடன் சேர்த்து […]

2வது நாளாக தொடரும் ஐ.டி. ரெய்டு! பரபரப்பான சென்னை, புதுச்சேரி!

செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு தொடர்பாக இடங்களில் இன்று 2வது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், முக்கிய இடங்களிலும் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று (செப்.27) சென்னை ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் ப்ளெக்ஸ் இந்தியா செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு தொடர்பாக புகார்கள் வந்த நிலையில் இந்த சோதனை […]

‘லியோ’ பட தயாரிப்பு நிறுவனம் காவல்துறைக்கு திடீர் கடிதம்!

‘லியோ’ திரைப்படத்தின் பட தயாரிப்பு நிறுவனம் காவல்துறைக்கு எழுதியுள்ள திடீர் கடிதம் தமிழ் திரையுலகில் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக தயாராக இருக்கும் திரைப்படம் ‘லியோ’. இத்திரைப்படத்தில் மொத்த நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதால் பான் இந்தியா படமாக பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி திரையிட தயாராக உள்ள நிலையில் இத்திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா வருகிற செப்.30ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் […]

பதற்றம் நிறைந்த மாநிலமாக ‘மணிப்பூர்’ அறிவிப்பு! ஆளுநர் என்ன செய்யப் போகிறார்?

மணிப்பூர் மாநிலத்தை பதற்றம் நிறைந்த மாநிலமாக அம்மாநில உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக வெடித்தது. இதன் தொடர்ச்சியாக வன்முறை வெடித்த  நிலையில் நிலைமை கட்டுக்குள் வராததால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவையும் துண்டித்து வைக்கப்பட்டுள்ளது. பழங்குடியின அந்தஸ்து விவகாரம் தொடர்பாக இரு சமூகத்தினருக்கும் இடையில் கலவரம் மூண்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. […]