இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்! களத்தில் குதித்த அமைச்சர் அன்பில்!

சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உண்ணராவிரத போராட்டத்தை நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களிடம் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் 125 பேர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும் மற்ற இடை நிலை ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு தாங்கள் பட்டினி கிடப்பதாக […]
கர்நாடகாவில் மிலாது நபி ஊர்வலத்தில் கல்வீச்சு! 40 பேர் கைது!

கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் மிலாது நபி ஊர்வலத்தில் திடீரென்று கல்வீசி தாக்குதல் நடத்திய 40 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அங்கு 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் மிலாது நபியை முன்னிட்டு அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலம் சாந்திநகர் ராகிகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் ஊர்வலத்திற்குள் கற்களைவீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் போர்க்களமான அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. அதைத்தொடர்ந்து […]
காந்தி ஜெயந்தி! திருவுருவப் படத்திற்கு புஸ்ஸி ஆனந்த் மலர் தூவி மரியாதை!

மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தியடிகளின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் அவரது திருவுருவ சிலைகளுக்கும், திருவுருவப் படங்களுக்கும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அரசு அருங்காட்சியக […]
சிறைக்கு உள்ளே சந்திரபாபு நாயுடு! வெளியே மனைவி, மகன் உண்ணாவிரதம்!

சிறையில் இருக்கும் தெலுங்குதேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு சிறைக்கு உள்ளேயும், வெளியே அவரது மனைவி மற்றும் மகனும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள இருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 3ம் தேதி போலீசார் கைது செய்யப்பட்டார். ராஜமுந்திரி சிறையில் […]
கிராமசபை கூட்டத்தில் அனைவரது கருத்தும் முக்கியம்! மு.க.ஸ்டாலின் உறுதி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டங்களை திறந்து வைத்து அனைவரது கருத்தும் முக்கியம் அவை பதிவு செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார். மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள 12,525 கிராமங்களில் கிராமசபை கூட்டஙகள் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்து உரையாற்றினார். அவர் பேசும்போது, ‘‘மக்களாட்சி முதல் மலர்ந்த இடம் கிராமங்கள்தான். திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகுதான் முறையாக […]
7வது நாளாக தொடரும் போராட்டம்! இடைநிலை ஆசிரியர்கள் பிடிவாதம்!

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 125க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் நேற்று 7வது நாளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் 2009 ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை சம்பளமும், அதற்கு பின்னர் நியமிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5,200 அடிப்படை சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட ஊதிய முரண்பாட்டால் 20 […]
தி.மு.க.வில் கூடுதல் சீட்டுக்கு அடிபோட்ட கே.எஸ்.அழகிரி! முக்கிய பின்னணி!

வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் கூடுதலாக சீட் கிடைக்கும் என்று கே.எஸ்.அழகிரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தேசிய அளவில் மட்டுமல்லாது ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல்களத்தை பரபரப்பாக்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி முறிவைத் தொடர்ந்து மத்திய பா.ஜ.க.வின் கூட்டணி யாருடன் என்ற பெரியகேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து கூடுதல் இடங்களில் போட்டியிடும் என்ற பேச்சுகளும் அடிபட்டு […]
9 தமிழக விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசு! முதலமைச்சர் பெருமிதம்!

9 தமிழக இஸ்ரோ விஞ்ஞானிகள் 9 பேருக்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் அவர்களை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இஸ்ரோவில் தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளான முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன், மயில்சாமி, அண்ணாதுரை, வீரமுத்து உள்ளிட்ட 9 பேர் தமிழகத்தின் பெருமையை உலகளவில் கொண்டு சேர்த்துள்ளனர். அவர்களை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவில் தலைமையேற்று பேசிய முதலமைச்சர் […]
காந்தி ஜெயந்தி: முதலமைச்சர், ஆளுநர் மரியாதை மலர் தூவி மரியாதை!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தியின் உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக அரசின் சார்பில் சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியக வளாகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு அருகில் மலர்களால் சூழவைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
அண்ணாமலை நாளை டெல்லி பயணம்! முக்கிய பின்னணி தகவல்கள்!

அ.தி.மு.க. கூட்டணி முடிவுக்கு பின்னர் நாளை அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளது அரசியல் களத்தில் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டி, தேசிய ஜனநாயக கட்சியில் இருந்தும் பா.ஜ.க.வில் இருந்தும் விலகுவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இதேபோல் அண்ணாமலையை அதிமுக கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும் குற்றம்சாட்டினர். இந்நிலையில் அண்ணாமலை நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். […]

