5வது நாளாக தொடரும் ஐ.டி.ரெய்டு! கட்டு கட்டாக பணம் பறிமுதல்?

தி.மு.க. எம்.பி.ஜெகத்ரட்சகன் வீட்டில் 5வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் மத்திய இணை அமைச்சரும், அரக்கோணம் தொகுதி தி.மு.க.எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் வீட்டில் கடந்த 5ம் தேதி முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிகாலை தொடங்கிய சோதனை இன்று 5வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜெகத்ரட்சகன் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் வருமானவரித்துறை அதிகாரிகள் அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், […]
அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி!

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் செந்தில்பாபாஜி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோத பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில்பாலாஜியை கடந்த ஜூன் மாதம் கைது செய்த நிலையில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட போது அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதைத்தொடர்ந்து அவருக்கு அறுவைசிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் அமலாக்கத்துறையினர் மீண்டும் தங்கள் சட்ட நடவடிக்கையை மேற்கொண்டு […]
5 மாநில தேர்தல் தேதி! தேர்தல் ஆணையம் 12 மணிக்கு அறிவிப்பு!

நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று பகல் 12 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. தெலுங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் மிசோரம் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதம் 17ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மற்ற 4 மாநிலங்களுக்குமான பதவிக்காலம் வருகிற ஜனவரி மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் நிறைவடைய […]
மகளிர் உரிமைத் தொகை கேட்டு போராட்டம்! எங்கே தெரியுமா?

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல் மகளிருக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பித்து தேர்வானவர்களான 1.06 கோடி பயனாளர்களின் வங்கிக்கணக்கில் கடந்த மாதம் 15ம் தேதி முதல் 1,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் 30 நாட்களுக்கு […]
அக்.11ம் தேதி முழு அடைப்பு போராட்டம்! டெல்டா மாவட்டங்களில் பதற்றம்!

தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசையும் அதன் அமைப்புகளையும் கண்டித்து வருகிற 11ம் தேதி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவித்துள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தும் கூட அதனை ஏற்க மறுத்து கர்நாடக மாநிலத்தில் பல்வேறு அமைப்பினரும், விவசாய அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம், ரெயில் மறியல், தர்ணா என பல்வேறு […]
பா.ஜக. போஸ்டரில் காங்கிரஸ் தலைவர் புகைப்படம்! குழப்பத்தில் மக்கள்!

ராஜஸ்தானில் அடிக்கப்பட்ட போஸ்டர் ஒன்றில் பா.ஜ.க. தலைவர்களுக்கு மத்தியில் காங்கிரஸ் தலைவர் புகைப்படம் அச்சிடப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் குழம்பிப்போயுள்ளனர். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே தெலுங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இந்த மாநிலங்களில் தேர்தல் வேலைகள் சூடுபிடித்துள்ளன. இதில் 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் 100 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் அங்கு […]
முன்னதாக வழங்கப்பட உள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை! முக்கிய அறிவிப்பு!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இந்த மாதம் முன்னதாகவே வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல் மகளிருக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பித்து தேர்வானவர்களான 1.06 கோடி பயனாளர்களின் வங்கிக்கணக்கில் கடந்த மாதம் 15ம் தேதி முதல் 1,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் 30 நாட்களுக்கு மேல்முறையீடு செய்யலாம் […]
ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ! ஏன் தெரியுமா?

கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர், விவசாயியை எட்டி உதைத்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ. ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2ம் தேதி காந்திஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி செயலாளர் தங்பாண்டியன், தன்னிடம் கேள்வி கேட்ட விவசாயியை காலால் எட்டி உதைத்து பெரும் சர்ச்சை எழுந்தது. இவ்விவகாரத்தை தொட்ர்ந்து தங்பாண்டியன் தலைமறைவாக இருந்தார். அவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடிய நிலையில், கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து தங்பாண்டியனை இடைநீக்கம் செய்வதாக […]
பா.ஜ.க., அ.தி.மு.க. அடிமைக் கூட்டணி! ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பளிச்!

பா.ஜ.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையில் இருந்தது அடிமைக் கூட்டணி என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளிப்படையாக கூறியுள்ளார். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்துக் கொண்டு பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அ.தி.மு.க.பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தமிழகத்தில் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அ.தி.மு.க., பா.ஜ.க.வில் இருந்து விலகியதை போல மேலும் சில கட்சிகள் விலகக் […]
உ.பி.யின் நீர்வாழ் விலங்கு டால்பின்கள்! முதல்வர் அறிவிப்பு

உத்தரபிரதேசத்தின் மாநில நீர்வாழ் விலங்காக டால்பினை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடல்வாழ் உயிரினங்களில் டால்பின்கள் மனிதனுக்கு மிகவும் நெருக்கமான மற்றும் நட்பான உயிரினமாகும். அறிவுத்திறமை கொண்ட டால்பின்கள் மனிதர்களுடன் நட்புடன் பழகுவதில் முதல் இடத்தில் உள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு மாநில பழம், மாநில விலங்கு என தனித்தன்மை உண்டு. அதன்படி உத்தரபிரதேசத்தின் மாநில நீர்விலங்காக டால்பினை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் குளங்கள் மற்றும் நீர்நிலைகளை தூய்மையாக […]

