News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றத்தின் புதிய உறுப்பினர்! முதலமைச்சரிடம் வாழ்த்து!

தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றத்தின் புதிய உறுப்பினரான சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் பொன்னுசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.   சென்னை தலைமை செயலகத்தில் இன்று (டிச.12) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோன் மன்றத்தின் புதிய உறுப்பினரான சட்டமன்ற உறுப்பினர் கே.பொன்னுசாமி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.   அவருடன் புதிய அலுவல் சாரா உறுப்பினர்களான மாறன், ரத்தினசாமி, புஷ்பராணி, பொன்னுசாமி, சரவணன், சாத்துக்குட்டி, மல்லிகா, வீரலட்சுமி, ராஜசேகரன் செல்வம், குணசேகரன், தெய்வம், […]

நாகூர் கந்தூரி விழா! 45 கிலோ சந்தனக்கட்டை வழங்க முதலமைச்சர் அரசாணை வெளியீடு!

நாகூர் தர்கா சந்தனக்கூடு விழாவுக்காக 45 கிலோ சந்தனக்கட்டைகளை எந்தவித கட்டணமும் இன்றி வழங்குவதற்கான அரசாரணையை இன்று (டிச.13) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாகூர் தர்கா நிர்வாகிகளிடம் வழங்கினார்.   உலகப்பிரசித்தி பெற்ற நாகூர் கந்தூரி விழா ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாகூரில் உள்ள நாகூர் ஆண்டவர் எனப்படும் சாகுல் ஹமீது பாதுஷா நாயகத்தின் தர்காவில் கந்தூரி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.   இவ்விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் 45 கிலோ எடை கொண்ட […]

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண நிதி! ரூ.3 கோடி வழங்கிய எம்.ஆர்.எப். நிறுவனம்!

மிக்ஜாம் புயல் பேரிடர் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு எம்.ஆர்.எப். நிறுவனத்தின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.3 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டது.   சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உலுக்கி எடுத்த மிக்ஜாம் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர், மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக காசோலைகளை வழங்கி […]

பெண்களுக்கு எதிரான வன்முறையில் உலகளாவிய போக்குகள்! சர்வதேச மாநாடு!

பெண்களுக்கு எதிரான வன்முறையில் உலகளாவிய போக்குகள்! சர்வதேச மாநாடு! தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையில் உலகளாவிய போக்குகள் என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நடைபெற்றது.   சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், 20 நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேசிய மற்றும் சர்வதேச வல்லுநர்கள் மற்றும் பங்கேற்பார்கள் கலந்து கொண்டனர். மேலும் கனிமொழி கருணாநிதி எம்.பி., அமைச்சர்கள் ரகுபதி, கீதாஜீவன், சமூக நலன் மற்றும் […]

இஸ்லாமியர்கள் விடுதலைக்கு தடையாக இருக்கிறதா தி.மு.க..?

நீண்ட காலமாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை எல்லாம் தி.மு.க. அரசு விடுதலை செய்யவேண்டும் என்பது இஸ்லாமியர்கள் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்துவருகிறது. பல்வேறு காரணங்களால் இந்த பிரச்னை நீண்டுகொண்டே வருகிறது. இந்த உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக எடுத்து வைக்கப்பட்டிருக்கும் வாதம் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.  மூன்று இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி “அரசே விடுதலை செய்ய […]

அப்பன் வீட்டு காசையா கேட்கிறோம்… உதயநிதி பாய்ச்சலுக்கு பா.ஜ.க. ரெய்டு மிரட்டல்

  சனாதனம் பேசி பா.ஜ.க. மட்டுமின்றி காங்கிரஸ் தலைவர்களையும் அலறவிட்ட உதயநிதி, அடுத்தபடியாக மத்திய அமைச்சருக்குப் பதிலடியாக அப்பன் வீட்டு காசையா கேட்கிறோம் என்று பேசியிருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.  அ.தி.மு.க.வின் எடப்பாடி தி.மு.க. அரசை விமர்சனம் செய்ததும், மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசிடம் இருந்து பணம் வாங்கித்தருவதற்கு எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்ய வேண்டும் என்று பேசினார் உதயநிதி. அதேபாணியில் இப்போது மத்திய அமைச்சருக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார்.  மிக்ஜாம் புயல் இடைக்கால நிவாரண […]

மிக்ஜாம் புயல் பேரிடர்! சென்னை புளியந்தோப்பில் ஒன்றியக்குழு ஆய்வு!

மிக்ஜாம் புயல் பேரிடர்! சென்னை புளியந்தோப்பில் ஒன்றியக்குழு ஆய்வு!   மிக்ஜாம் புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையிலான 6 பேர் கொண்ட ஒன்றியக்குழு சென்னை வந்துள்ளது.   இக்குழுவினர் சென்னை புளியந்தோப்பு, திரு.வி.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று சேதங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இக்குழுவில் இவருடன் திமான் சிங், […]

மிக்ஜாம் புயல் நிவாரணப்பணி! கடல்சார் வாரிய நிதியிலிருக்கு ரூ.2 கோடி!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உலுக்கி எடுத்த மிக்ஜாம் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.   அந்த வகையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (டிச.12) பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் […]

கலைஞர் நூற்றாண்டு விழா! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு!

தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெற உள்ள ‘‘கலைஞர் 100’’ விழாவை முன்னிட்டு நடிகர் விஜய்க்கு, தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் நேரில் சென்று அழைப்புவிடுத்துள்ளனர்.   மறைந்த முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க.தலைவருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடிடும் வகையில் திரையுலகினர் ‘‘கலைஞர் 100’’ விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதன்படி டிசம்பர் 24ம் தேதி சென்னை சேப்பக்கத்தில் கலைஞர் 100 விழா நடைபெறும் என்று நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் மிக்ஜாம் புயலால் விழா […]

சுகாதாத் துறை ஐ.சி.யு.வில் இருக்கிறது! அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் இறந்த உடல் அட்டை பெட்டியில் வைத்து கொடுக்கப்பட்ட சம்பவம் குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து அரிசி, மளிகை பொருட்கள், நேப்கின் உள்ளிட்ட 18 வகையான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றை சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் சென்னை கோட்டூர்புரத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்சியில் தென்சென்னை […]