விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் நிறைவேறுகிறதா..? அலறும் மாநிலக் கட்சிகள்

பா.ஜ.க. ஆட்சி அமைத்த காலத்திலிருந்தே ஒரே நாடு ஒரே தேர்தல் வரப்போகிறது என்று சொல்லப்பட்டு வந்தது. இந்த ஆட்சி முடிவடைய இருக்கும் கடைசி சில மாதங்களில் இந்த சட்டத்தை நிறைவேற்றும் முடிவில் மோடி அரசு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான முதல்கட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக நிர்வாக கட்டமைப்பில் சட்ட மாற்றங்களை செய்ய ஏதுவாக பொதுமக்களின் பரிந்துரைகளை பெறுவதற்கான பொது அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. உயர்நிலைக் குழு […]
கலைஞர் நூற்றாண்டு விழா: முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பில் நடத்தப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வருகிற 6ம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா சென்னை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சார்பில் நடைபெற உள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மிக்ஜாம் புயலால் தள்ளிவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கான அழைப்பிதழ்கள் முன்னதாகவே ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட அனைத்து […]
மிக்ஜாம் புயல்: முதலமைச்சரிடம் காசோலை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு!

மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.18) தொடங்கி வைத்தார். தமிழக அரசு கொண்டு வந்துள்ள ‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தின் நோக்கம், பொதுமக்களின் சேவைகள் பொதுமக்களுக்கு விரைவாக கிடைக்கவும், மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைவாக தீர்வு காண வேண்டும் என்பதுதான். அதன்படி இன்று (டிச.18) கோவை மாவட்டம் என்.என்.ஆர். கல்லூரி வளாகத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் கோவை மாநகரட்சி 27 மற்றும் 28வது […]
ஆதிச்சநல்லூர் சைட் மியூசியம்: நேரில் ஆய்வு செய்த கனிமொழி எம்.பி.

பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சீரமைக்கப்பட்ட ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை கனிமொழி எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் பெய்த கனமழை பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு எடுத்த துரித நடவடிக்கையால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழக அரசு, அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி […]
கேப்டன் விஜயகாந்த் மறைவு! வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய சசிகுமார்!

கேப்டன் விஜயகாந்த் கடந்த (2023) டிசம்பர் மாதம் 23ம் தேதி நிமோனியா காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். இதைத்தொடர்ந்து கேப்டனின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திலும், பின்னர் தீவுத்திடலிலும், தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திலும் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சினிமா துறையினர், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். படப்பிடிப்புக்காகவும், சொந்த காரணங்களுக்காகவும் வெளிநாடு சென்றிருந்த நடிகர்கள் சிலர் கேப்டனின் மறைவுக்கு […]
மோடியின் ஆதரவுடன் மிரட்டும் ஓ.பி.எஸ்..! நடுக்கத்தில் எடப்பாடியின் மாஜி மந்திரிகள்

சமீபத்தில் பாரதப்பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். அதன்பிறகு எடப்பாடி மீது ஆவேசமாக தாக்குதல் நடத்தத் தொடங்கியிருக்கிறார். அதோடு பா.ஜ.க.வுடன் இணக்கமாக இருக்கிறோம். தினகரனுடன் கூட்டணியில் இருக்கிறோம் என்றும் தெளிவு படுத்தியிருக்கிறார். அதேநேரம், விரைவில் அண்ணா தி.மு.க. வலுவான கூட்டணியை அறிவிக்கும் என்று எடப்பாடி அறிவித்திருந்தாலும் எந்த ஒரு பெரிய கட்சியும் கூட்டணிக்குத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. பா.ம.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகள் எல்லாமே பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரவே விரும்புகிறார்கள். பூவை ஜெகன்மூர்த்தி, சில துக்கடா இஸ்லாமிய […]
வடகலை தென்கலை காட்டுமிராண்டித்தன மோதல்… அடிதடி, குஸ்தி, கொலை மிரட்டல்…!

வேலை இல்லாத வெட்டிகள், ஜாதிப்பெருமை பேசும் பழமைவாதிகள், ஆணவம் பிடித்தவர்கள் மட்டுமே தங்கள் ஜாதிப் பெருமைக்காக மல்லுக்கட்டுவார்கள் என்று விமர்சனம் செய்வோரின் வாயை அடைக்கச் செய்யும் அளவுக்கு வடகலை, தென்கலை பிரிவினருக்கிடையே நடைபெற்ற அடிதடி விவகாரம் சந்தி சிரிக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தின் பார்வேட்டை திருவிழாவில் வரதராஜபெருமாள் எழுந்தருளும் வைபவம் நடைபெறும். அதன்படி, கண்டருளி பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலையின் மீது எழுந்தருளினார். தேவராஜ சுவாமி பார்வேட்டைக்கு […]
துபாயில் இருந்து திரும்பிய சரத்குமார்! கேப்டன் சமாதியில் அஞ்சலி!

துபாயில் இருந்து திரும்பிய நடிகர் சரத்குமார், கேப்டன் விஜயகாந்தின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியதுடன், சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று கேப்டனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி நிமோனியா காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து கேப்டனின் உடல் சென்னை தீவுத்திடலிலும், தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திலும் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சினிமா துறையினர், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று […]
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் மறைவு! முதலமைச்சர் நேரில் அஞ்சலி!

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் காலமானதை தொடர்ந்து அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மறைந்த கு.க.செல்வம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி விடுத்துள்ளார். அதில், ‘‘வெள்ளந்தியான உள்ளத்துக்கு சொந்தக்காரர் கு.க.செல்வம் என்று கூறிய அவர், புன்சிரிப்பும், வாஞ்சையும் நிறைந்த அவரது பேச்சை இனி கேட்க முடியாது என்று எண்ணும் போது நெஞ்சம் விம்முகிறதாக தெரிவித்திருந்தார். மேலும் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு திமுகவில் தன்னை இணைத்துக் […]
கலைஞர் நூற்றாண்டு விழா இலக்கிய போட்டி: மாணவர்களுக்கு பரிசளித்த அமைச்சர் சேகர்பாபு!

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருக்கோவில்கள் சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டு மற்றும் இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருக்கோயில்கள் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இலக்கியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். சென்னை […]

