அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு முக்கிய எச்சரிக்கை! பின்னணி தகவல்கள்!!

அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி முறிவைத் தொடர்ந்து முதல் முறையாக அ.தி.மு.க. தலைமை அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று (செப்.25) மாலை 3.45 மணிக்கு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதன்படி கூட்டத்தில் தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி நடத்தப்பட்ட கூட்டத்தில் […]
அ.தி.மு.க.& பா.ஜ.க. கூட்டணி முறிவு! அமைச்சர் துரைமுருகன் என்ன சொன்னார் தெரியுமா?

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் இன்று நிருபர்களிடம் காவிரி விவகாரம் குறித்தும் பா.ஜ.க.& அ.தி.மு.க. கூட்டணி முறிவு குறித்தும் பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். சென்னையில் இன்று நிருபர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ‘‘உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டமும், ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடத்த ஆரம்பித்தால் உச்சநீதிமன்றத்தில் தனி அதிகாரம் என்னவாகும் என்பதை கர்நாடக அரசு சிந்திக்க வேண்டும். அதேபோல் இந்த விவகாரத்தை எப்படி கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும் […]
அதிரடி சலுகை அறிவித்த ஐ.ஆர்.சி.டி.சி.! என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வாயிலாக விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளரிடம் சேவை கட்டணம் வசூலிக்கப்படாது என ஐ.ஆர்.சி.டி.சி. அதிரடி சலுகை அறிவித்துள்ளது. நாளை (செப்.27) உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுவதுடன் சேர்த்து ஐ.ஆர்.சி.டி.சி. தோற்றுவிக்கப்பட்ட 24வது தினத்தையும் கொண்டாடுகிறது. இதனை சிறப்பிக்கும் வகையில் ஐ.ஆர்.சி.டி.சி. தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி ‘‘செப்டம்பர் 25 முதல் 27ம் தேதிவரையிலான 3 நாட்களில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச முன்பதிவு […]
ரூ.1,000 கோடியை கடந்த ‘ஜவான்’! அனல் பறக்கும் பாக்ஸ் ஆபிஸ்!

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் இதுவரை 1,000 கோடி ரூபாய் வசூல் புரிந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து பாலிவுட் திரைத்துறையினர் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். கோலிவுட் இயக்குனரான அட்லீ, முதல் முறையாக பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன், நயன்தாரா, விஜய்சேதுபதி, பிரியாமணி, யோகிபாபு என நட்சத்திர பட்டாளமே ஒன்று சேர்ந்து நடித்த ஜவான் திரைப்படம் உலகமெங்கும் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி வெளியானது. இத்திரைப்படத்தை ஷாருக்கானின் மனைவி கவுரி கான் […]
திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு நாள்! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 9 நாட்களாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவ நிறைவு நாளை முன்னிட்டு திரளான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கடந்த 18ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 9 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு பல்வேறு அலங்கார, ஆராதனைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இதனை காண ஒவ்வொரு நாளும் திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். அந்த வகையில் சென்னையில் […]
பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்தார் எடப்பாடி பழனிசாமி! முக்கிய பின்னணி!

மறைந்த தலைவர்களை தொடர்ந்து அவமானப்படுத்தி வந்த அண்ணாமலையை பா.ஜ.க. கண்டிக்கத் தவறியதை கண்டித்து பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியாக இணைந்து கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தர்தல்களை சந்தித்தன. இந்நிலையில் பா.ஜ.க. மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை கடந்த சில நாட்களாக மறைந்த தலைவர்களான அண்ணாதுரை, ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமரியாதையாக பொது வெளியில் பேசியுள்ளார். இது குறித்து அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு […]
ஆசிய விளையாட்டு: ஹாக்கி போட்டியில் இந்தியா வெற்றி!

ஆசிய விளையாட்டு போட்டியில் சிங்கப்பூருக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய அணி 16க்கு ஒன்று என்ற கணக்கில் சிங்கப்பூர் அணியை வெற்றி பெற்று பெற்றுள்ளது. சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் 9வது ஆசிய விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் (செப்.23) கோலாகலமாக ஆரம்பமானது. இப்போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2 தங்கம், 3 வெள்ளி, […]
பெங்களூருவில் 144 தடை உத்தரவு! விஸ்வரூபம் எடுக்கும் காவிரி விவகாரம்!

பெங்களூருவில் இன்று முழு அடைப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அசம்பாவிதங்களை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு& கர்நாடகம் இடையே பலத்த மோதல் நிலவி வருகிறது. தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கடந்த 18ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை கண்டுகொள்ளாத கர்நாடக அரசு, தங்களிடம் […]
கர்நாடகத்திற்கு நாளை லாரிகளை இயக்காதீர்கள்! சம்மேளன தலைவர் எச்சரிக்கை!

கர்நாடகாவிற்கு நாளை லாரிகளை இயக்க வேண்டாம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் திடீரென்று எச்சரிக்கை விடுத்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையிலான எதிர் கருத்துகள் தற்போது மேலும் அதிகரித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து 15 நாட்களுக்குள்ளாக 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீரை திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கர்நாடக அரசுக்கு ஆணையிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் கர்நாடக அரசும், கர்நாடக […]
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் வீண் போகவில்லை! சிக்கினார் பிரிஜ் பூஷன்!

மல்யுத்த வீராங்கனைளை பிரிஜ் பூஷன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உண்மைதான் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவராக பதவி வகித்து வந்தவர் பிரிஜ்பூஷன். இவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இது தொடர்பாக வீராங்கனைகளான சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகத் மற்றும் முன்னணி வீரரான பஜ்ரங் பூனியா உள்ளிட்ட பலர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் மீது போலீசார் […]

