News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

நீட் தேர்வு பயிற்சி மாணவர் தற்கொலை! ராஜஸ்தானில் பரபரப்பு!

நீட் தேர்வு பயிற்சி மாணவர் தோல்வி பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.   ராஜஸ்தானில் மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் தேர்வுகளுக்கு தயாராவதற்கு நீட் தேர்வு மையங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர். அதன்படி லட்சக்கணக்கான மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ளும் போது ஒரு சிலர் அழுத்தம் மற்றும் தோல்வி பயம் காரணமாக தற்கொலை என்ற தவறான முடிவை எடுத்து விடுகின்றனர்.   அந்த வகையில் நீட் தேரவு […]

9.13 லட்சம் புதிய வாக்காளர்கள் விண்ணப்பம்! தேர்தல் ஆணையம் தகவல்!

தமிழகத்தில் புதிதாக 9.13 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களுக்காக கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார விடுமுறை நாட்களில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இதுபோன்று நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் இதுவரை மொத்தம் 9.13 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தலைமை […]

சிக்கலில் குஷ்பு! பட்டியலின பெண்களின் போராட்டம் அறிவிப்பு!

குஷ்பு மன்னிப்பு கேட்கும் வரை ஓயுமாட்டோம் என்று பட்டியலினத்தைச் சேர்ந்த 500 பெண்கள் நாளை நடிகை குஷ்புவின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். நடிகை திரிஷா, மன்சூர் அலிகான் விவகாரத்தில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குரல் கொடுக்காதது ஏன் என்று நெட்டீசன் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த நடிகை குஷ்பு, ‘சேரி’ என்ற வார்த்தையை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. சேரி என்ற […]

சீதை அமர்ந்திருந்த கல்! இலங்கையில் இருந்து இந்தியா வந்து சேர்ந்தது!

இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதை அசோகவனத்தில் அமர்ந்திருந்த கல் தற்போது ராமர் கோவில் வைத்து வழிபடுவதற்காக அரசு மரியாதையுடன் இந்தியா வந்து சேர்ந்தது. இலங்கை மன்னன் ராணவனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதை அங்கிருந்த அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தார். அப்போது சீதை அமர்ந்திருந்ததாக சொல்லப்படும் கல்லை இந்தியாவிற்கு கொண்டு வந்து வழிபட ராமஜென்ம பூமி அறக்கட்டளை முடிவு செய்தது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கும்பாபிஷேக விழா வருகிற (2024) […]

சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை! முதலமைச்சர் திறந்து வைத்தார்!

சென்னை மாநில கல்லூரியில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.   கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் 110வது விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் முன்னாள் இந்திய பிரதமர் வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னையில் சிலை அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.   அதன்படி சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் மதிப்பில் வடிவமைக்கப்பட்ட முன்னாள் […]

கந்துவட்டி கொடுமை! 3 குழந்தைகளைக் கொன்று தம்பதி தற்கொலை!

கர்நாடக மாநிலத்தில் கந்துவட்டி கொடுமை தாங்காத தம்பதி தங்களது 3 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தும்கூர் சதாசிவா நகரைச் சேர்ந்த கரீப்த சாப், தனது மனைவி சுமையா மற்றும் 3 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வந்த கரீப் சாப் போதிய வருமானம் கிடைக்காததால் அக்கம்பக்கத்தினரிடம் 1 லட்சம் ரூபாய் அளவுக்கு மீட்டர் வட்டியில் கடன் வாங்கி இருக்கிறார். […]

அடுத்த 24 மணிநேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுபகுதி! இந்திய வானிலை மையம் தகவல்!

அடுத்த 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.   தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெரிய அளவில் மழை பெய்யாத நிலையில் கடந்த ஒரு வாரமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது.   இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது […]

பிரதமர் மோடி திருப்பதியில் சாமி தரிசனம்! வைரல் புகைப்படங்கள்!

140 கோடி மக்களின் நலன் வேண்டி பிரதமர் மோடி திருப்பதி கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.     பிரதமர் மோடி தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்றிருந்த நிலையில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு நேற்று (நவ.26) இரவு 7.40 மணியளவில் திருப்பதி வந்து சேர்ந்தார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடியை ரேணிகுண்டா விமான நிலையத்தில் நேரில் சென்று வரவேற்றார். […]

மின்சார கம்பியில் சிக்கி பலியான புலி! அதிர்ச்சி தகவல்!

காட்டுப்பன்றிக்கு வைத்த மின்சார கம்பியில் சிக்கிய புலி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து 12 பேரை வனத்துறையினர் கைது செய்த சம்பவம் மத்தியபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. இந்திய தேசிய விலங்கான புலியின் எண்ணிக்கை குறைந்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் புலிகள் தோலுக்காக வேட்டையாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கணக்கெடுப்பின் படி மத்திய பிரதேசத்தில் 785 ஆகவும், கர்நாடகாவில் 563 ஆகவும், உத்தரகண்டில் 560 ஆகவும் உள்ளன. மத்தியபிரதேச மாநிலம் ஷாடோல் மாவட்டத்தில் பாந்தவ்கர் […]

5 வயது சிறுவனுக்கு நடந்த கொடூரம்! உத்தரபிரதேசத்தில் பரபரப்பு!

சிறுத்தைப்புலி தாக்கியதில் 5 வயது சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பலராம்பூர் மாவட்டத்தில் சோஹெல்லா வனப்பகுதிக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த ரித்தேஷ் என்ற 5 வயது சிறுவன் தனது தாத்தாவுடன் காட்டுக்கு சென்றுள்ளான். அப்போது புதர்களுக்குள் மறைந்திருந்த சிறுத்தைப்புலி ஒன்று சிறுவன் ரித்தேஷை கண் இமைக்கும் நேரத்தில் கவ்விக் கொண்டு மின்னலாக பாய்ந்து மறைந்தது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதற்குள் சிறுத்தைப்புலி […]