News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

அமலாக்கத்துறை அதிகாரிகளை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்கிறதா தமிழக அரசு..? சூடு பிடிக்கும் ஜாதி சம்மன் விவகாரம்

எழுதப்படிக்கத் தெரியாத வயதான விவசாயிகள் இருவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் மிரட்டி துன்புறுத்திய குற்றச்சாட்டு குறித்து, தமிழக காவல் துறை விசாரணை தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திவாரியைப் போன்று மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்படும் சூழ்நிலை நிலவுவதாக சொல்லப்படுவதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. பிரதம மந்திரி கிஷான் திட்டத்தில் உதவி பெறும் விவசாயிகளுக்கு ‘ஜாதி’ பெயரை குறிப்பிட்டு சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது டி.ஜி.பி.யிடம் அளித்த […]

திறந்தாச்சு பிரமாண்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்… சென்னையின் போக்குவரத்து நெரிசல் குறையுமா..?

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ. 393.74 கோடி செலவில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிகப் பெரிய பேருந்து முனையங்களுள் ஒன்றான கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இனி, தென் தமிழகம் நோக்கி செல்லும் பேருந்துகள், கோயம்பேட்டில் உள்ள சென்னைப் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்தில் உள்ள புதிய கலைஞர் நூற்றாண்டு […]

ரஜினிக்கு மனசாட்சியே இல்லையா…? தூத்துக்குடி வெள்ளத்தில் பாதித்த மக்களை பார்க்க மனசு வரலையே.. டென்ஷனாகும் ரஜினி ரசிகர்கள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த நேரத்தில் இதற்கென நேரில் வந்து, ‘கூட்டத்தில் சில சமூக விரோதிகள் ஊடுருவியது எனக்குத் தெரியும்’ என்று தேவையே இல்லாமல் கருத்து சொல்லி சலசலப்பு ஏற்படுத்தினார். பின்னர் அவரே விசாரணை ஆணையத்தில் பல்டி அடித்தது வேறு விவகாரம். இந்த நிலையில், வேட்டையன் படப்பிடிப்புக்காக தூத்துக்குடி விமான நிலையத்தில் இறங்கி கன்னியாகுமரி ஏரியாவில் தான் டேரா போட்டிருக்கிறார் ரஜினிகாந்த். தூத்துக்குடி விமானநிலையத்தில் இருந்து வெளியே வந்தவர் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்த்துக்கொண்டுதான் காரில் […]

விஜயகாந்த் சமாதியில் இப்படி பேசலாமா பிரேமலதா..? கடுப்பாகும் கேப்டன் ரசிகர்கள்

பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு மக்கள் கடலலை போன்று கலந்துகொண்ட இறுதிச்சடங்கு நிகழ்வு என்றால், அது கேட்பன் விஜயகாந்த் இறுதி ஊர்வலம் தான். யாரும் கேட்காமலே கேப்டன் விஜயகாந்திற்கு அரசு மரியாதை வழங்கப்பட்டு 72 குண்டுகள் முழங்க உடல் புதைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜயகாந்த் புதைக்கப்பட்டதும் அவரது மனைவியும் தே.மு.தி.க.வின் பொதுச்செயலாளருமான பிரேமலதா பேசிய விவகாரம் பொதுமக்களிடமும் கேப்டன் ரசிகர்களிடமும் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. கேப்டன் அணிந்திருந்த கண்ணாடி, செயினையும் பிரேமலதாவே கழட்டியதை அத்தனை பேரும் […]

என்ன மனுஷன்யா விஜயகாந்த்… 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்னு அஞ்சலி செலுத்துறாங்க…

அப்துல் கலாம் மறைவுக்கு தமிழகம் முழுக்க பெரும் அனுதாபக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த வகையில் உண்மையிலே நெஞ்சம் முழுக்க பாசத்துடனும் நேசத்துடனும் எக்கச்சக்க அபிமானிகள் வந்து குவியும் அளவுக்கு நல்ல மனிதர்களை சம்பாதித்திருக்கிறார் விஜயகாந்த். அவரது உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை தீவுத் திடலில் இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அஞ்சலிக்காக் வைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் அங்கிருந்து பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை […]

ஸ்டாலினுடன் டாக்டர் ராமதாஸ் திடீர் சந்திப்பு… அன்பு மணி சீட்டுக்கு  அச்சாரமா..?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமைச் செயலகத்தில் திடீரென சந்தித்துப் பேசியிருக்கிறார். அவருடன் பா.ம.க.வின் முன்னாள் தலைவர் ஜி.கே.மணி கலந்துகொண்டார். அப்போது முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டார்கள். தமிழகத்தில் ஜாதிரீதியிலான கணக்கெடுப்புக்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை நிறைவேற்றித் தரவேண்டும் என்றும் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்ததாக டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். […]

எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜயகாந்த்துக்குத்தான் கடல் போல் மக்கள் கூட்டம்… இறுதிச் சடங்கில் ஸ்கோர் செய்த தமிழக அரசு

விஜயகாந்த் ஏழெட்டு வருடங்களாகவே உடல் சரியில்லாமல் இருந்து வருகிறார். அவர் சினிமாவில் நடித்து கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. அரசியலில் எதிர்க்கட்சித் தலைவர் என்பது தவிர எந்த பதவியும் கிடையாது. சினிமாவிலும் அவர் காலத்தில் ரஜினி, கமல்ஹாசனுக்கு பின்னே இருந்தாரே தவிர, ஒருபோதும் முதல் நட்சத்திரமாக இருந்ததில்லை. ஆனாலும், அவரது மரண ஊர்வலத்திற்குக் கூடிய கூட்டம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கிவிட்டது. ரஜினிகாந்த் கூறியது போன்று அவர் அரசியல்வாதிகளை திட்டினார், அதிகாரிகளை திட்டினார், பத்திரிகையாளர்களை திட்டினார் என்றால் அவற்றில் […]

தமிழக காங்கிரஸ்க்கு அழகுப் பொண்ணு பவ்யா வந்தாச்சு.. அவுட் ஆகிறாரா கே.எஸ்.அழகிரி?

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி என்பது தி.மு.க.வின் ஜால்ராவாக மட்டுமே இருந்துவருகிறது. இன்றைய அரசியல் சூழலில் வேறு வழியில்லை என்றாலும், கட்சியை வளர்ப்பதற்கு ராகுல் பல்வேறு முயற்சிகள் செய்துவருகிறார். இந்த வகையில், கட்சியின் சார்பில் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அப்படி தமிழகத்திற்கு நியமனம் செய்யப்பட்டிருப்பவர் பவ்யா நரசிம்மமூர்த்தி. கர்நாடகத்தை சேர்ந்த பெங்களூரைச் சேர்ந்தவர். புகழ்பெற்ற எஸ்.எஸ்.ராமையா கல்லூரியில் எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் புகழ்பெற்ற கொலம்பியா பல்கலையும் முதுகலை பட்டம் […]

என்ன மனுஷன்யா விஜயகாந்த்… 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்னு அஞ்சலி செலுத்துறாங்க…

அப்துல் கலாம் மறைவுக்கு தமிழகம் முழுக்க பெரும் அனுதாபக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த வகையில் உண்மையிலே நெஞ்சம் முழுக்க பாசத்துடனும் நேசத்துடனும் எக்கச்சக்க அபிமானிகள் வந்து குவியும் அளவுக்கு நல்ல மனிதர்களை சம்பாதித்திருக்கிறார் விஜயகாந்த். அவரது உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை தீவுத் திடலில் இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அஞ்சலிக்காக் வைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் அங்கிருந்து பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை […]

இரும்பு மனுஷி ஜெயலலிதாவை அலறவிட்ட ஒரே தலைவன் விஜயகாந்த்

அண்ணா தி.மு.க.வை இரும்புக் கோட்டையாக வைத்திருந்த தலைவி ஜெயலலிதாவிடம் பேசுவதற்கு அந்த கட்சியின் தலைவர்கள் மட்டுமின்றி, கூட்டணித் தலைவர்களும், அதிகாரிகளும் ரொம்பவே அச்சப்படுவார்கள். அவர் பேசுவதை மட்டுமே பிறர் கேட்க வேண்டும் என்று நினைப்பார். போயஸ் தோட்டத்தில் அமர்ந்துகொண்டு இங்கிலாந்து ராணி போன்று கட்சியையும் ஆட்சியையும் நடத்தியவர் ஜெயலலிதா. சட்டசபையில் அவருக்கு எதிரே நின்று பேசுவதற்கு விருப்பமில்லாமல் கருணாநிதி கூட அவைக்குப் போகாமல், கையெழுத்துப் போட்டுவிட்டு கிளம்பிவிடுவார். அப்படிப்பட்ட காலத்தில்தான், சட்டசபையில் மிருக பலத்துடன் ஆட்சியில் அமர்ந்து […]