Share via:
இங்கே எல்லாமே டபுளாகத்தான் திரும்ப கிடைக்கும் என்று பாகிஸ்தான் இந்திய கிரிக்கெட் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் பதிலடி கொடுத்துள்ள சம்பவம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திரசேவாக் தனது கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் சமூகவலைதளங்களில் அதிரடி கருத்துகளை பதிவிட்டு டிரெண்டிங்கில் இருக்கிறார்.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் இருந்து அரையிறுக்கு முன்னேறாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெளியேறியதை கிண்டல் செய்யும் வகையில் சேவாக் பதிவிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் தனது எக்ஸ் பதிவை தொடர்ந்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘‘இந்தியா வந்து பிரியாணி சாப்பிட்டீர்களா? எங்க உபசரிப்பு நன்றாக இருந்ததா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் சரி கராச்சிக்கு கிளம்புங்கள் என்று கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார.
சேவாக்கின் இந்த பதிவுக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பல்வேறு ஆதரவு தெரிவித்தாலும், ஒரு சிலர் எதிர்த்தும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.