News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும என்று ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 

அதேபோல் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 20க்கும் மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.

 

இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அம்மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் (அக்.30) மட்டும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link