Share via:
பொதுமக்கள் தலையில் வரி மேல் வரி போட்டு பத்தாண்டு காலமாக பாடாய்படுத்தும்
பாஜக அரசு அடுத்த அதிரடியை இன்று நிகழ்த்தியிருக்கிறது. அதாவது, 2,000 ரூபாய் வரையிலான
யுபிஐ பரிவர்த்தனைகள், ரூபே டெபிட் கார்டுகளுக்கு வங்கிகளோ, சேவை நிறுவனங்களோ எந்தவொரு
கட்டணமும் விதிக்கக் கூடாது என மத்திய அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இப்போது எங்கேயும் எப்போடும் நொடிப்பொழுதில் டிஜிட்டல் முறையில்
பரிவர்த்தனை நடப்பதால் சாமானியார்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களிடமும் யுபிஐ
பரிவர்த்தனை முக்கியப் பங்காற்றுகிறது. சின்னச்சின்ன கடையினரும் யுபிஐ பரிவர்த்தனையை
நம்பி செயலாற்றிவருகிறார்கள்.
யுபிஐ பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான
சர்வர் பராமரிப்பு செலவுகள், அதிகரித்து வரும் பரிவர்த்தனை அளவுகள் ஆகியவற்றை கையாள
வங்கிகளுக்கும், கட்டண சேவை நிறுவனங்களுக்கும் பெரும் செலவாகிறது. இதனால், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு
எம்டிஆர் கட்டணத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என இத்துறையை சேர்ந்த நிறுவனங்கள் தொடர்ந்து
கோரிக்கை விடுத்து வந்தன.
இந்த நிலையில், 2000 ரூபாய்க்கு மேற்பட்ட யுபிஐ வணிக பணப் பரிவர்த்தனைகளுக்கு,
கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின. இதனால் பொதுமக்கள் மத்தியில்
அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வங்கியில் பணம் போட்டாலும் கட்டணம், எடுத்தாலும் கட்டணம்.
இப்போது யுபிஐக்கும் கட்டணம் என்றால் என்ன அர்த்தம் என்று கொதிக்கிறார்கள்.

