Share via:
முதல்வராக ஸ்டாலின் இருந்த வரையிலும் இந்துக்கள் பண்டிகைக்கு எந்த
வாழ்த்து செய்தியும் தரமாட்டார். ஆனால், இஸ்லாமியர், கிறிஸ்தவப் பண்டிகைகளுக்கு மறக்காமல்
வாழ்த்து சொல்வார். ஆனால், விஜய் ஒரு கிறிஸ்தவராக இருந்தாலும், கிருஷ்ண ஜெயிந்திக்கு
வாழ்த்து கூறியது, இந்துக்களிடம் மிகப்பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இன்றைய வாழ்த்து செய்தியில் விஜய், ‘’அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும்
மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது
செயல்பட வேண்டும், தர்மத்தின் வழியில்
மன உறுதியுடனும்
நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின்
உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப்
படைத்திடுவோம்…’’ என்று கூறியிருக்கிறார்.
எம்மதமும் சம்மதம் எனும் வகையில் விஜய் கொடுத்திருக்கும் வாழ்த்துச்செய்தி
இந்துக்களிடம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

