Share via:
பருவமழை குறைவு காரணமாக வெங்காயம் வரத்து குறைந்திருப்பதால், வெளி
மார்க்கெட்டில் 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையிலும் பெரிய வெங்காயம் விற்பனையாகிறது.
இந்த நிலையில், இன்று முதல் நியாய விலை கடைகளில் வெங்காயம் 1 கிலோ – 35 ரூபாய்க்கு
வழங்கும் திட்டத்தை உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் தொடங்கிவைத்தார்.
வெங்காயம் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு விஜய் மேற்கொண்ட முயற்சிக்கு
பொதுமக்கள் நன்றி கூறிவருகிறார்கள். இன்று சென்னை மாநகராட்சியின் 8419 கூட்டுறவு கடைகளில்
35 ரூபாய் விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. முதற்கட்டமாக குடும்பத்திற்கு
1 கிலோ வழங்கப்படுகிறது.
மக்களின் தேவையைப் பொறுத்து அளவை அதிகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்
என்று அமைச்சர் தெரிவித்தார். அதோடு, விரைவில் கிராமங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்
என்றும் உறுதி அளித்திருக்கிறார்.
குறைந்த விலையில் வெங்காயம் கிடைப்பது, பொதுமக்களின் சுமையை குறைப்பதோடு,
வெளிச்சந்தை விலையையும் கட்டுப்படுத்த உதவும். இதேபோல் விலை ஏற்றம் காணும் மற்ற பொருட்கள்
விற்பனையும் தொடரும் என்கிறார்கள்.
சபாஷ் விஜய்

