Share via:
இன்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில், வெற்றி
தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு சென்னை கிண்டியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதலீட்டாளர்கள்
மற்றும் தொழில் துறை தலைவர்கள் பங்கேற்கின்றனர். முதலமைச்சர் முன்னிலையில் பல முக்கிய
தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
தமிழ்நாடு அரசு சார்பில் இன்று நடைபெறும் வெற்றித்
தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு 2026 மூலம் 97 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
கையெழுத்தாக உள்ளது. இதன் மூலம் ₹67,452
கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 1 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும்.
மேலும், ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள்,104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் புதிய
தொழில் முதலீடுகளுக்கான மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாயை தவெக அரசு கடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய தொழில் முதலீடுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த
நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதால், தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள்,
விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் தொழில் கட்டமைப்புகள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த முதலீடுகள் மூலம் நேரடி மற்றும் றைமுக வேலைவாய்ப்புகள்
அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அரசின் தொழில் கொள்கைக்கு முதல் பெரிய
வெற்றித் தொடக்கமாக பார்க்கப்படுகிறது. வேகம் எடுக்கிறது விஜய் ஆட்சி.