Share via:
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள், நேரடியாக விஜய்
கட்சிக்குப் போகப்போகிறார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில்
எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
அப்போதே, எம்.எல்.ஏ. சீட் அல்லது மாவட்டத்தில் ஒரு முக்கிய பதவி
என்று நிபந்தனை வைத்து சேர்ந்ததாக சொல்லப்பட்டது. ஆனால், மயிலாடுதுறை தொகுதியை எதிர்பார்த்த
காளியம்மாளுக்கு சீட் கொடுக்கப்படவில்லை. எனவே அப்செட் மோடில் இருந்தார்.
இந்த நிலையில் நீண்ட காலத்திற்குப் பிறகு காளியம்மாள் கழக செய்தி
தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு, கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் என்ற
பதவியும் காளியம்மாளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் இந்த பதவி கொடுக்கப்பட்டிருந்தால்
மீனவர்கள் வாக்கு வாங்கியிருக்கலாம், இப்போது கொடுப்பது வேஸ்ட் என்கிறார்கள்.
தலையை விட்டு வாலைப் பிடிப்பதுதானே எடப்ப்பாடி ஸ்டைல்.