Share via:
நாட்டில் ஊழல் ஒழியாதா? அரசு அதிகாரிகள் மக்களுக்குப் பயப்படமட்டார்களா
? நேர்மையான நிர்வாகம் கிடைக்காதா என்பது காலம் காலமாக தமிழக மக்கள் எதிர்பார்த்த மாற்றம்.
அந்த மாற்றங்களை எதிர்பார்த்த மக்களுக்கு விடையாக வந்தார் விஜய்.
தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்களை
நிறைவு செய்துள்ளது; மக்களின் நாடித் துடிப்பை அறிந்து புதிய சிந்தனைகளுடன் பல திட்டங்களை
அரசு செயல்படுத்தியுள்ளது என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் புகழ்ந்துள்ளார்.
லஞ்சம் கேட்டால் கொடுக்கதீங்க என்று சொன்ன முதல் முதல்வர் விஜய்
மட்டுமே. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு 100-வது நாளில்
அடியெடுத்து வைத்திருப்பதை முன்னிட்டு, முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில், “தவெக
அரசின் 100 நாள் ஆட்சி என்பது ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி” என்று குறிப்பிட்ட
அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் அரசு நிறைவேற்றிய முக்கியத் திட்டங்களையும், அதற்காக
ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களையும் பட்டியலிட்டுள்ளார். பெண்கள் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண்
சிறப்பு அதிரடிப்படை’ அமைக்கப்பட்டதுடன், அம்மாக்கள் மற்றும் கை குழந்தைகளுக்கான ‘தாய்மாமன்
தங்கமோதிரம்’ திட்டத்திற்காக ரூ.560 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ வாயிலாக
ரூ.1 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள்
ஒழிப்புக்காக 65 சிறப்பு அதிரடிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு
உதவ 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் திட்டத்திற்கு ரூ.812 கோடி
ஒதுக்கப்பட்டது உட்பட 20-க்கும் மேற்பட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதையும் அந்த
வீடியோவில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.