Share via:
பீகாரில் மோடிக்கு எதிராக ராகுல் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிறார்.
இதை தடுப்பதற்கு திடீரென அம்மா செண்டிமெண்ட்டைக் கையில் எடுத்துள்ளார் மோடி. எனது தாயை
அவமதித்த ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் கட்சிகளை நான் மன்னிக்கலாம்; ஆனால் பிஹார்
மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று ஆவேசம் காட்டியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, “ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ்
நடத்திய ஒரு பேரணியில் மறைந்த எனது தாயார் அவமதிக்கப்பட்டுள்ளார். ஒரு அரசியல் மேடையில்
இறந்த எனது தாயார் இப்படி அவமதிக்கப்படுவது கற்பனை செய்து பார்க்க முடியாதது.
அம்மாதான் நமது உலகம். அம்மாதான் நமது சுயமரியாதை. பாரம்பரியம்
நிறைந்த பிஹாரில் எனது தாயார் அவமதிக்கப்பட்டுள்ளார். இந்த அவமதிப்பு எனது தாய்க்கு
மட்டுமானது அல்ல. அவர்கள், இந்த நாட்டின் தாய்மார்கள், சகோதரிகள், மகள்களை அவமதித்துள்ளார்கள்.
இந்த சம்பவத்தைப் பார்த்தும், கேட்டும் பிஹாரின் ஒவ்வொரு தாய்மார்களும் எவ்வளவு மோசமாக
உணர்ந்திருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். என் இதயத்தில் எனக்கு எவ்வளவு வலி இருக்கிறதோ,
அதே அளவு வலியை பிஹார் மக்களும் அனுபவிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.
அரசியலுடன் எந்த தொடர்பும் இல்லாத எனது தாயாரை ராஷ்டிரிய ஜனதா
தளமும் காங்கிரஸும் ஏன் இழுக்க வேண்டும்? ஏன் அவரை தாக்க வேண்டும்? இதுபோன்று பெண்களை
அவமதிப்பவர்கள், பெண்களை பலனீனமானவர்களாகக் கருதும் மனநிலையை வெளிப்படுத்துகிறார்கள்.
எனது தாயை அவமதித்த ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் கட்சிகளை நான் மன்னிக்கலாம்; ஆனால்
பீகார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.” என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
இது குறித்து பேசும் காங்கிரஸ் கட்சியினர், ‘மோடியின் தாயாரை அவதூறு
பேசியவன் உடனடியாகக் கைது செய்யப்பட்டான். ஒரு சாதாரண நபர் அவதூறு செய்தமைக்காக நீலிக்கண்ணீர்
வடிக்கும் பிரதமர் ஜீ யார் யாரை என்னென்ன எப்படி எப்படி பேசினார் என்று பார்ப்போமா…?!
சோனியா காந்தியை, “ஜெர்சி பசு”, “காங்கிரஸ் விதவை” என்றும்; சசி
தரூர் மனைவி சுனந்தா புஷ்கரை, “50 கோடி ரூபாய் காதலி” என்றும்; ரேணுகா சௌத்ரியை “சூர்ப்பனகை”
என்றும்; மம்தா பானர்ஜியை “தீதி-ஓ-தீதி” என்றும்… அழைத்த ஜீக்கு, அதெல்லாம் அவதூறு
என்று தெரியவில்லையா…? மேலும், மணிப்பூரில் இளம் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து
சென்ற சங்கிகளை இதுவரை பிரதமர் கண்டனம் தெரிவித்ததுண்டா…? மேற்படி அவதூறுகளை அந்தக்
கட்சியினர் தேர்தலின் போது இதைச் சொல்லி ஓட்டுப் பிச்சை எடுத்ததுண்டா…? அல்லது இதுபோல்
ஒருமுறையாவது இது மாதிரி நீலிக்கண்ணீர் வடித்திருப்பார்களா…?’’ என்று கேள்வி கேட்கிறார்கள்.
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா.