News

ஸ்டாலினுக்கு 5 வியூக வகுப்பாளர்கள்..? குழப்பத்தில் அமைச்சர்கள்.

Follow Us

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான பரிசு வழங்கும் விழா நடத்திவருகிறார். மூன்றாம் மட்டும் இறுதிக் கட்டத்திற்கான விழா இன்று மாமல்லபுரத்தில் தொடங்கியது.

தவெக தலைவர் விஜய் நேரடியாக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசை வழங்கி வருகிறார். இந்த விழாவின் தொடக்கத்தில் விமான விபத்து குறித்து பேசினார். ‘’அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை என்று கூறிய விஜய் விமான விபத்தில் இறந்தவர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து வழக்கம் போல் மாணவர், மாணவிகள் பெற்றோர் பாராட்டுடன் விருதுகள் வழங்கினார்.

பரிசு அறிவிக்கப்பட்டு விழாவில் பங்கேற்க முடியாதவர்களுக்கென பிரத்யேகமாக ஒரு விருது வழங்கும் விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. அது, இந்த மாதமே நடக்கும் என்று தெரிகிறது. இதையடுத்து விஜய் அடுத்தக்கட்ட அரசியல் பணிகளில் ஈடுபட உள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக விஜய் பிறந்தநாளன்று அரசியல் சுற்றுப்பயணம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய விழாவில் தன்னுடன் படம் எடுக்க விரும்பிய மாணவிகளுக்கு நெருக்கமாக கட்டியணைத்து விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார். கடந்த விழாவில் விஜய்க்கு கண்டனம் தெரிவித்த வேல்முருகனை சீண்டுவதற்காகவே விஜய் இப்படி செய்கிறார் என்று அவரது ரசிகர்கள் குஷியாகிறார்கள். வேல்முருகன் மீண்டும் பாய்வாரா அல்லது பதுங்குவாரா என்பதைப் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link