Share via:
அண்ணாமலையை கைது செய்தால் தமிழகமே பற்றி எரியும் என்று தமிழக பா.ஜ.க.வினர்
தி.மு.க. அரசுக்கு சவால் விட்ட நிலையில், இன்று அண்ணாமலையை கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு தமிழகம் முழுக்க எந்த ரியாக்ஷனும் இல்லை என்பது தமிழக பா.ஜ.க.வினரையே அதிர
வைத்திருக்கிறது.
தொடர்ந்து டாஸ்மாக் அலுவலக முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்ட
நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை, பனையூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து போராட்டத்துக்குப்
புறப்பட்ட நிலையில் அக்கரையில் வைத்து காவல்துறை அவரை கைது செய்தது. அதேபோல் தமிழிசை
உள்ளிட்ட தலைவர்களும் கைது செய்யப்பட்டார்கள்.
இதற்கிடையே, பாஜகவினர் கைதுக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை, “திமுக
அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழக பாஜக சார்பில், இன்று சென்னை
டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். தொடை நடுங்கி திமுக
அரசு, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஆளுநருமான, அக்கா தமிழிசை, மாநிலச்
செயலாளர் வினோஜ் பி. செல்வம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக்
கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.
பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக்
கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு
இருக்கிறீர்கள். ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே,
உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது?. தேதியே அறிவிக்காமல்,
திடீரென்று ஒருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?”
என்று கேட்டுள்ளார்.
அண்ணாமலையை கைது செய்தால் தமிழகம் முழுக்க பெரும் போராட்டம் நடத்தப்படும்
என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருப்பது
புஸ்வாணம் ஆக்கியுள்ளது. அம்புட்டுத்தானா அண்ணாமலைக்கு செல்வாக்கு..?