News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 4 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இன்றும் (செப்.21) மற்றும் நாளையும் (செப்.22) ஆகிய 2 நாட்களில் முதலமைச்சர் தலைமையில் சென்னை மண்டல கள ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த 4 மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய திட்டங்கள் மற்றும் முன்னேற்றம், வளர்ச்சிப் பணிகள் குறித்து அந்தந்த கலெக்டர்களிடம் ஆலோசனை நடத்த உள்ளார். கலெக்டர்களுடன் இணைந்து அரசு உயர் அதிகாரிகளும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வழங்க பள்ளிகல்வி இயக்குனர் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2 நாட்கள் நடைபெறும் இந்த ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் 4 மாவட்டங்களுக்கான வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link