News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், விற்பனையாளர்களை கண்டறிந்து கைது செய்வதற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு போட்டிருக்கிறார். அதன்படி, ‘போதை தடுப்பு நடவடிக்கை’ எடுப்பதற்காக கூடுதல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தனிப்படையினர் கடந்த 21.2.2024 முதல் 27.2.2024 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 பெண்கள் உள்பட 41 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 72.73 கிலோ கஞ்சா, 320 கிராம் கஞ்சா சாக்லேட்கள், 470 வலி நிவாரண மாத்திரைகளுடன் போன், கார் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 2021 முதல் நடப்பாண்டு இதுவரை 1,175 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 2,298 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் சேகரித்து, சட்ட ரீதியாக முடக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 1186 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 21.2.2024 முதல் 27.2.2024 வரையிலான 7 நாட்களில் 21 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

நடப்பாண்டில் ஜனவரி 1 முதல் பிப்ரவரி 27 வரை கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வழக்கில் கைது செய்யப்பட்ட 32 குற்றவாளிகளை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் அடைப்பதற்கு சென்னை பெருநகா காவல் ஆணையாள சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு போட்டு அடைத்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link