News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தஞ்சையில் பழனி மாணிக்கத்திற்குப் பதிலாக முரசொலிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் சண்முகசுந்திரத்திற்குப் பதிலாக கே.ஈஸ்வரசாமிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் சிட்டிங் எம்.பி. பார்த்திபனுக்குப் பதிலாக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளரான செல்வ கணபதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் சிட்டிங் எம்.பி. கெளதம சிகாமணிக்குப் பதிலாக தே.மலையரசனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. பொன்முடி மகனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் அமைச்சர் நேருவின் மகன் அருண் நேருக்கு பெரம்பலூர் தொகுதி கிடைத்துள்ளது.

தென்காசியில் சிட்டிங் எம்.பி. தனுஷ்குமாருக்குப் பதிலாக டாக்டர் ராணியின் பெயர் இடம் பெற்றுள்ளது. தர்மபுரியில் டாக்டர் செந்திலுக்குப் பதிலாக வழக்கறிஞர் மணி நியமிக்கப்பட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link