Share via:
வருகிற 2024ம் ஆண்டு சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் சென்று பார்வையிட்டார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இது குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
உலக முதலீடுகளின் பலன்களை ஒருங்கிணைத்து, வருகிற 2023ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் தமிழக அரசு, உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024ம் ஆண்டு நடைபெற உள்ளது.
இந்நிலையில் இன்று (டிச.22) தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்திற்கு நேரில் சென்று அங்கு நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமை செயலாளரும், ஆணையாளருமான ராதாகிருஷ்ணன், அரசு முதன்மை செயலாளர் அ.சித்திக், பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.