Share via:
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.
அதன்படி சிறப்பு திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளராக பிரதாப் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை செயலாளராக மேகநாத ரெட்டி கூடுதல் பொறுப்பு வகித்திருந்த நிலையில் தற்போது பிரதாப் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை செயலாளராக ஜெயகாந்தன் ஐ.எ.ஏஸ்.சை நியமித்து தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இணை செயலாளராக டி.ரத்னா ஐ.ஏ.எஸ்.நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை இயக்குனராக விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர வளர்ச்சிக்கழக நிர்வாக அலுவலராக காயத்ரி கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.நியமனம் செய்யப்பட்டுள்ளார்.