விடுதலை சிறுத்தைகள் கட்சி உடைப்பு..? திருமா நிர்வாகிகளை வளைக்கும் ஆதவ் அர்ஜூனா

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் நுழைந்ததும் துணைப் பொதுச்செயலாளர் பதவி ஆதவ் அர்ஜூனாவுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து கட்சி நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என்று ஆதவ் அர்ஜூனா கூறிய திட்டத்தை திருமாவளவன் ஏற்றுக்கொண்டார். தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் மாவட்ட செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர்கள், கிளை செயலாளர்கள், ஊடக ஒருங்கிணைப்பாளர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆகியோர் அடங்கிய நிர்வாக குழுவை நியமிக்கும் வேலை ஆதவ் அர்ஜூனாவுக்கு ஒதுக்கப்பட்டது. ஒரு தொகுதிக்கு […]
சபாஷ், சரியான போட்டி. ரிலீஸ் ஆகும் அண்ணாமலை ஃபைல்ஸ்

ஒரு காலத்தில் அண்ணாமலை ஆர்மியில் ஒரு முக்கியப் புள்ளியாக இருந்தவர் திருச்சி சூர்யா. அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்பட்டு எல்லா கட்சியினருடனும் சண்டைக்குப் போய்க்கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்தார். ஆனால், அண்ணாமலை மீண்டும் கட்சிக்குள் சேர்ப்பதாகத் தெரியவில்லை என்றதும், அவருடனே மோதத் தொடங்கிவிட்டார். சமீபத்தில் தி.மு.க. ஃபைல்ஸ் 3 வெளியிடப்படும் என்று அண்ணாமலை அறிவித்திருந்தார். ஆதாரம் இருந்தால் உடனடியாக வெளியிடலாமே எதற்காக தேர்தல் வரை வெயிட் செய்ய […]
ஒருதலை காதல்: சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

காதலை ஏற்காத சிறுமியை வாலிபர் வீடு புகுந்து எரித்துக் கொலை செய்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரபிரதேச மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் நந்திகோட்கூர் நகரில் 17 வயது சிறுமி தனது பாட்டியுடன் உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் வீட்டிற்குள் 21 வயதான ராகவேந்திரா என்ற வாலிபர் அத்துமீறி நுழைந்தார். இவர் களுகோட்லா கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் கடந்த சில ஆண்டுகளாக காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள சமர்லகோட்டாவை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. சிறுமி […]
அண்ணாமலையின் தி.மு.க. ஃபைல்ஸ் 3 ரெடி. அதானிக்கு எஸ்கேப்

vலண்டனில் இருந்து அண்ணாமலை திரும்பிவந்ததும் படுவேகமாக அரசியல் செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அண்ணாமலை என்னவோ அடக்கியே வாசிக்கிறார். அதேநேரம், தேர்தல் நேரத்தில் தி.மு.க. ஃபைல்ஸ் பார்ட் 3 வெளியிடப்படும் என்று அறிவிப்பு செய்திருக்கிறார். இதை தி.மு.க.வினரே கூட கண்டுகொள்ளவில்லை என்பது தான் ஆச்சர்யமான திருப்பம். அண்ணாமலை தமிழக பா.ஜ.க. தலைவராக வந்ததுமே தி.மு.க. அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்தும் ஊழல் ஃபைல்ஸ் வெளியிட்டார். முதல் முறை அவர் வெளியிட்ட ஃபைல் பெரும் பரபரப்பானது. அதையொட்டி […]
விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் தடை… பா.ஜ.க.வுக்கு எதிராகப் போராடுவாரா சீமான்..?

விடுதலைப்புலிகள் இயக்கத்தையே தங்கள் கட்சிக்கு அடையாளமாகப் பயன்படுத்தி வரும் சீமானுக்கு அதிர்ச்சி தரும் வகையில், விடுதலைப் புலிகள் மீதான தடை: மேலும் ஐந்தாண்டுக்கு இந்தியாவில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்துக்கு எதிராக சீமான் போராட்டம் நடத்துவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. இலங்கையில் தமிழா்களுக்குத் தனி ஈழம் வழங்கப் போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் ஏற்கனவே தடை செய்யப்பட்டு இருந்தது. அந்தத் தடை முடிவுக்கு வரவிருந்த வேளையில் மேலும் ஐந்தாண்டுக்குத் தடையை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சு உத்தரவிட்டது. […]
ஜெர்மனியில் நடைபெற்ற தமிழ்நாடு தினக் கொண்டாட்டம்! அமைச்சர்கள் பங்கேற்பு!

உலகில் தமிழர்கள் இல்லாத நாடுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பரவியிருக்கிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு நாட்டிலும் தமிழர்களின் பண்டிகைகள், தமிழ்மொழியின் கொண்டாட்டங்கள் களைகட்டத்தான் செய்கின்றன. இதில் மற்றொரு விசேஷம் என்னவென்றால், தமிழர்களின் கொண்டாட்டங்களில் அந்தந்த நாட்டு மக்களும் கலந்து கொண்டு மகிழ்ச்சியடைவதுதான். அந்த வகையில் ஜெர்மன் நாட்டில் முதல் முறையாக தமிழ்நாடு தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது. ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் நடைபெற்ற தமிழ்நாடு தினக்கொண்டாட்டத்தில் திரளான தமிழர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவினை பிராங்க்பர்ட்டில் […]
ரஜினிகாந்த் இப்படி பேசிட்டாரே… போதையில் இருந்தாரா..?

வட தமிழகத்தைப் புரட்டியெடுத்த ஃபென்சல் புயல் தாக்கம் இன்னமும் மக்கள் மனதிலிருந்து மறையவில்லை. இன்னமும் பல இடங்களில் தண்ணீர் வடியவில்லை. திருவண்ணாமலை நிலச்சரிவில் செத்துப்போன குடும்பத்தினரின் கதறல் ஓயவில்லை. ஆனால், அப்படியொரு விஷயமே தமிழகத்தில் நடந்தது தெரியாமல் ரஜினிகாந்த் இருக்கிறார் என்பது அதிர்ச்சியான தகவல். சென்னை விமான நிலையத்தில் இருந்து கூலி படத்தின் அடுத்தகட்ட சூட்டிங்கிற்கு ஜெயப்பூர் செல்வதற்கு வந்தார் ரஜினிகாந்த். அப்போது அவரிடம் ஃபென்சல் புயல் குறித்தும் திருவண்ணாமலை நிலச்சரிவு மரணம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. […]
புயல் நிவாரண நிதியில் அண்ணாமலை சீட்டிங்..? போட்டுத்தாக்கும் அமைச்சர்

ஃபெஞ்சல் புயல் மற்றும் பருவமழை காரணமாக சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் பெருத்த சேதங்களை சந்தித்து உள்ளன. புயல் பாதிப்புகளுக்கு தமிழ்நாட்டிற்கு உரிய நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது; இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ‘’ஃபெஞ்சல் புயல் பாதிபுக்காக தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ரூ.944 கோடியை ஒதுக்கி உள்ளது’’ என்று நன்றி தெரிவித்திருந்தார். இரண்டே நாளில் நிதி பெற்றுத்தந்த அண்ணாமலை […]
சிங்கப்பூர் விரைவில் அழியும் ; சொன்னது யார் தெரியுமா ?

உலகின் பிரபலமான தொழிலதிபரும் எக்ஸ் தள உரிமையாளருமான எலான் மஸ்க், தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாக சொல்ல கூடியவர். அவர் இரு நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் விரைவில் அழிந்து விடும் என்று சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தினார் . இதை தொடர்ந்து சிங்கப்பூரில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்திருப்பதாக வெளியானத் தகவலை மேற்கோள்காட்டிய எலான் மஸ்க் மரியோ நாவ்பால் என்பவர், சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருப்பது தொடர்பான தகவலை வெளியிட்டிருந்த எக்ஸ் தள […]
விஜய் ஒரு தற்குறி: கடுமையாக விமர்சித்த அமைச்சர் சேகர்பாபு!

சென்னையில் நேற்று (டிசம்பர் 6) சட்ட மேதை அம்பேத்கார் புத்தக வெளியீட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், வி.சிக. துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அம்பேத்கர் புத்தகத்தை விஜய் வெளியிட, அம்பேத்கரின் பேரன் அதனை பெற்றுக் கொண்டார். இதற்கிடையில் நாற்காலியில் அமர்ந்தவாறு வடிவமைக்கப்பட்டிருந்த அம்பேத்கார் சிலையுடன் சேர்ந்து விஜய் எடுத்துக் கொண்ட செல்ஃபிக்கள் இணையத்தில் வைரலானது. விழாவில் மிகவும் ஆக்ரோஷமாக பேசிய […]

