News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ஆவின் பாலகம் குறித்து தமிழக அரசு திடீர் அறிவிப்பு!

ஆவின்பாலகம் 24 மணிநேரமும் தொடர்ந்து இயங்கும் என்று தமிழக அரசு திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த மண்டலம் இன்று (நவம்பர் 26) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில்  நாளை உருவாக உள்ள புயலுக்கு சவுதி அரேபியா ‘பெங்கல்’ என்ற பெயரை பரிந்துரை செய்துள்ளது.   பெங்கல் புயலானது தமிழகத்தை […]

விவசாயிகளை ஏமாற்றினாரா எடப்பாடி பழனிசாமி..? வில்லங்கமாகும் வேளாண் மண்டலம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி அனுப்பவே இல்லை என்று மத்திய அரசு கூறியிருப்பதையடுத்து தமிழகத்தில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. மக்களவையில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி கே.எம். சுதா கேட்ட கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் கொடுத்திருக்கும் பதிலில், ‘’டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை: மத்திய அரசு! 2020-ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்த நிலையில், […]

9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்! கனமழை எச்சரிக்கை எதிரொலி!

சென்னை, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 9  துறைமுகங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற காரணத்திற்காக 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.   வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு  மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் 800 கி.மீட்டர் தூரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. மேலும் சென்னையின் தெற்கு தென்கிழக்கு பகுதியில் 1,050 கி.மீட்டர் தூரத்தில் அந்த காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. […]

பாராளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு! அதானி, மணிப்பூர் விவகார எதிரொலி!

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளியால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (நவம்பர் 25) காலை 11 மணியளவில் தொடங்கியது. கூட்டத்தின் ஆரம்பத்தில் மறைந்த எம்.பி.க்களுக்கு அவை உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.     பின்னர் அவை 12 மணிக்கு கூடிய போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவையில் […]

ஐ’ம் ஸாரி ஐயப்பா இசைவாணி தலைமறைவு..? வைரலாகும் பாடல்

ஆர்ம்ஸ்ட்ராங் விவகாரத்தில் தி.மு.க.வுக்கு சிக்கல் உண்டாக்கிய பா.ரஞ்சித் உருவாக்கியிருக்கும் ஐ’ம் ஸாரி ஐயப்பா பாடலையொட்டி சமுகவலைதளத்தில் நடக்கும் மோதல் பெரும் வைரலாகியுள்ளது. பா.ஜ.க. ஆதரவாளர்கள், ‘’இந்த பாடலுக்கு பா ரஞ்சித் , இசைவாணி இருவரையும் திமுக அரசு கைது செய்யாதது ஏன்? ஐய்யப பக்தர்களை திட்டமிட்டு ஒவ்வொரு வருடமும் இதே மாதங்களில் அவமதிப்பதோடு – மத மோதலைத் தூண்டும் இவர்கள் இருவரும் கைது செய்யாது ஏன்? திமுக ஆசியோடு தான் இது நடக்கிறது’’ என்று கொந்தளிக்கிறார்கள். ஐயப்ப […]

ஜானகி எம்.ஜி.ஆருக்கு எடப்பாடி பழனிசாமி பிரமாண்ட விழா… இணைப்புக்குப் பச்சைக் கொடியா..?

இன்று அண்ணா தி.மு.க. சார்பில் புரட்சித்தலைவியின் துணைவியார் ஜானகி ராமச்சந்திரன் திருவுருவப் படத்தினை திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி, ஜானகி அம்மையார் நூற்றாண்டு விழாவை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்திருக்கிறார். இது இணைப்புக்கு பச்சைக் கொடியா என்ற கேள்வி எழுந்துள்ளது. அண்ணா திமுக வின் பெருமை மிகு அடையாளமான ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகை 1950களில் அதாவது புரட்சித்தலைவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு வி.என்.ஜானகியின் சொந்த உழைப்பில் வாங்கப்பட்டது ஆகும். அவர் தானமாக எழுதிக் கொடுத்த இடமே […]

திருமாவளவனுக்கு இப்படி ஒரு அவமானமா..? நோட்டாவிடம் மெகா தோல்வி

மகாராஷ்டிரா தேர்தலில் ராகுல் காந்தியின் இண்டியா கூட்டணிக்கு எதிராக நான்கு தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய திருமாவளவன், எல்லா தொகுதிகளிலும் நோட்டாவை விட மோசமான வாக்குகள் வாங்கியிருக்கிறார். இண்டியா கூட்டணிக்கு எதிராக வேலை பார்த்த திருமாவளவனே, தலித் ஓட்டுகளை பிரிச்சு காங்கிரஸை தோக்கடிச்சுட்டாங்க என்று இரட்டை வேடம் போட்டிருப்பது குரூர நகைச்சுவையாகியுள்ளது. மகாராஷ்டிரா தேர்தலில் போக்கர்டான் தொகுதியில் 97 வாக்குகள், அவுரங்காபாத் கிழக்கில் 57 வாக்குகள், புலம்பிரி தொகுதியில் 216 வாக்குகள் மற்றும் பிம்பிரி தொகுதியில் 351 வாக்குகள் […]

ரஜினியுடன் சீமான் இரண்டரை மணி நேரம் சந்திப்பு .? சங்கி என்றால் நண்பன் என்று புரியவைத்தாரா..?

என்னை யாராவது சங்கீ என்று சொன்னால் செருப்பைக் கழட்டி அடிப்பேன் என்று சொன்ன நாம் தமிழர் சீமான் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துத் திரும்பியதும், ‘சங்கீ என்றால் நண்பன் என்று அர்த்தம் சொன்னதையும் முடிச்சுப் போடுகிறது மீடியா. வரும் 2026 தேர்தலில் பா.ஜ.க.வுக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக சீமானைப் பயணிக்க வைக்கும் முயற்சி நடப்பதாக பேச்சு எழுந்துள்ளது. அதேநேரம் இது சாதாரண சந்திப்பு என்கிறது நாம் தமிழர் டீம். இது சாதாரண சந்திப்பு என்றால் அங்கே ரவீந்திரன் துரைசாமி […]

தர்ம யுத்தத்திற்கு தயாராகும் கனிமொழி..? 2026 தேர்தல் கணக்கு

உதயநிதி அணியினர் பேச்சுப்போட்டி நடத்தி தமிழகத்தில் பரபரப்பு ஊட்டியது போன்று கனிமொழி வினாடி வினா போட்டி நடத்தி தனி யுத்தத்தைத் தொடங்கியிருக்கிறார். இது உதயநிதியுடன் நேரடிப் போட்டி என்றே பார்க்கப்படுகிறது. கட்சிக்குள் தன்னுடய இருப்பைக் காட்டும் வகையில் பள்ளி மாணவர்களை கருணாநிதி சமாதிக்கு அழத்துச்சென்றுள்ளார். இது குறித்து கனிமொழி, ‘’முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் விதமாக நடத்தப்படும் ‘கலைஞர் 100 வினாடி வினா’ போட்டியில், இன்று நடைபெறும் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற போட்டியாளர்கள் மற்றும் […]

மகாராஷ்டிராவில் மோடிக்கு மெகா வெற்றி, ராகுல் தலைமைக்கு ஆபத்து..?

பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்திருக்கும் வெற்றி மகாராஷ்டிரா மக்கள் கொடுத்திருக்கும் வெற்றி கிடையாது அதானியின் உதவியுடன் தான் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது என உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் என்றாலும், ராகுல்காந்தியின் திட்டமிடல் தோல்வியே இதற்குக் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க, ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித் பவாரின் என்.சி.பி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆளும் மகாயுதி கூட்டணி மற்றும் காங்கிரஸ், சிவசேனா (யு.பி.டி) உள்ளிட்ட எதிர்க்கட்சி கூட்டணியான மஹா […]