News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பெஞ்சல் புயல்: உயிரிழந்த மின் ஊழியர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக உயிரிழந்த மின்சார வாரிய குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பெஞ்சல் புயல் கோரதாண்டவம் ஆடிய நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய […]

நூலிழையில் உயிர் தப்பிய பஞ்சாப் துணை முதலமைச்சர்! பரபரப்பு தகவல்கள்!

பஞ்சாப் துணை முதலமைச்சர் சுக்பீர்சிங் பாதலை மர்ம நபர் ஒருவர் பொற்கோவிலில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் பொற்கோவில் அமைந்துள்ளது. இங்கு அம்மாநிலத்தின் துணை முதலமைச்சரும், சிரோமணி அகாலி தள தலைவருமான சுக்பீர்சிங் பாதல், சீக்கிய மதம் தமக்கு அளித்த தண்டனையை நிறைவேற்றும் வகையில் ஈட்டியுடன் காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை […]

லண்டனில் இது தான் படித்தாரா அண்ணாமலை..? பொன்முடி சேறு சம்பவத்தில் உண்மையில் நடந்தது என்ன..?

மக்களை தி.மு.க.வினர் இனிமேலும் ஏமாற்ற முடியாது. ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் பொங்கி எழுந்துவிட்டார்கள் என்பதற்கு உதாரணமே அமைச்சர் மீது சேறு வீசப்பட்ட சம்பவமே சாட்சி என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தி.மு.க. மீது கடும் தாக்குதல் கொடுத்தார். உடனடியாக பா.ஜ.க.வினர் பலரும், ‘’அமைச்சர் காரில் இருந்தபடியே ஆய்வு மேற்கொண்டதால் கோபமான மக்கள் பொன்முடி மீது சேறு வீசினார்கள் என்று தொடர்ந்து எழுதினார்கள். மேலும், கோபமாக இருக்கும் மக்கள் பொன்முடியின் ஃப்ளக்ஸ்களை கிழித்து எறிவதாகவும் எழுதியிருந்தார்கள். இவை […]

மாமன்னர் விஜய் பனையூர் மாளிகையில் தானம்… அடுத்து ஸ்விக்கி மூலம் நலத்திட்ட உதவிகள்..?

புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடரில் மக்கள் பாதிக்கப்படும் நேரத்தில் நேரடியாக பாதிக்கப்பட்ட இடத்துக்குச் சென்று ஆறுதல் கூறி, நலத்திட்ட உதவிகள் செய்வது தான் மனிதாபிமான அரசியல். ஆனால், புதிதாக அரசியல் களத்திற்கு வந்திருக்கும் நடிகர் விஜய் புத்தம் புது ஸ்டைலில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட சுமார் 300 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை பனையூர் இல்லத்துக்கு வரவழைத்து மழை நிவாரண உதவிகளை வழங்குகியது கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. அதோடு நடிகர் விஜய், ‘’உங்கள இடத்திற்கு வந்தால்..இப்படி சகஜமாக அமர்ந்து […]

ரூ.2 ஆயிரம் நிவாரணம் போதாது! அண்ணாமலை காட்டம்!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் ஆடிய கோர தாண்டவத்தால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் திருவண்ணாமலையில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் மண்ணுக்குள் புகுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.   இதைத்தொடர்ந்து மழை வெள்ள பாதிப்பு பகுதிகளில் மீட்புப்படையினர் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆடு, மாடு, பயிர்கள் என சேதம் அதிகரித்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியே நிவாரணத் தொகையை அறிவித்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட […]

பணய கைதிகள் விடுதலை ; இஸ்ரேளுக்கு ஹமாஸ் அமைப்பு நிபந்தனை

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. மேலும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லபட்ட பணய கைதிகளின்  உடல்களும் மீட்கப்பட்டன .  ஆனால், ஹமாஸ் வசம் இன்னும் 101 பேர் பணய கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேல் […]

சாத்தனூர் அணை திறப்பு: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சேகர்பாபு சவால்!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் ருத்ரதாண்டவம் ஆடிய நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் வெள்ளத்தால் உயிரிழப்பு, வீடுகள் மற்றும் விவசாய நிலங்களின் பயிர்கள் சேதம் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரணங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் சென்னை அறிவாலயத்தில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் […]

வெள்ளப்பகுதிகளில் ஆஜரான அண்ணாமலை… காணாமல் போன விஜய்

விழுப்புரம் மாவட்டத்தில் மிகப்பிரமாண்டமாக மாநாடு நடத்திக் காட்டிய நடிகர் விஜய், தற்போது விழுப்புரம் மாவட்டம் தண்ணீருக்குள் மூழ்கி தடுமாறும் நேரத்தில் வெளியே தலை காட்டாமல் முடங்கிக் கிடப்பது அரசியல் சர்ச்சையாக மாறியிருக்கிறது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் நிவாரணத்தில் ஈடுபட்டு நேரத்தில் விஜய் மட்டும் அமைதியாக இருக்கலாமா என்று அவரது கட்சியினரே சங்கடப்படுகிறார்கள். நான்கு மாவட்டங்களை உலுக்கியெடுத்த புயலுக்கு நடிகர் விஜய், ‘’திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் […]

கால்பந்து போட்டியில் ரசிகர்களுக்கிடையே மோதல் !

கினியா நாட்டின் இரண்டாவது பெரிய நகரான என்சரிகோரில் உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்று நடைபெற்றது. போட்டியை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் கண்டுகளித்துக்கொண்டு இருந்தனர்.போட்டியின்போது நடுவரின் சர்ச்சையான தீர்ப்பு  வழங்கியதாக கூறப்படுகிறது .   இதனால் ஒரு தரப்பு ரசிகர்கள் ஆத்திரமடைந்து கால்பந்து மைதானத்தை ஆக்கிரமித்தனர். இதைக்கண்ட மற்றொரு தரப்பினரும் மைதானத்தில் புகுந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.    இந்த மோதல் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. மைதானம் மட்டுமின்றி, மைதானத்திற்கு வெளியேயும், சாலைகளிலும் ரசிகர்கள் ஒருவரை […]

பெஞ்சல் புயல்: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5ஆயிரம் நிவாரணம்!

பெஞ்சல் புயல் ஆடிவரும் ருத்ரதாண்டவத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் புதுச்சேரி மரக்காணம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்க ஆரம்பித்ததில் இருந்து புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதைத்தொடர்ந்து மீட்புப்படையினர் மழைநீர் சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். இந்நிலையில் மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 […]