News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ஒருதலை காதல்: சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

காதலை ஏற்காத சிறுமியை வாலிபர் வீடு புகுந்து எரித்துக் கொலை செய்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரபிரதேச மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் நந்திகோட்கூர் நகரில் 17 வயது சிறுமி தனது பாட்டியுடன் உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் வீட்டிற்குள் 21 வயதான ராகவேந்திரா என்ற வாலிபர் அத்துமீறி நுழைந்தார். இவர் களுகோட்லா கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் கடந்த சில ஆண்டுகளாக காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள சமர்லகோட்டாவை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. சிறுமி […]

அண்ணாமலையின் தி.மு.க. ஃபைல்ஸ் 3 ரெடி. அதானிக்கு எஸ்கேப்

vலண்டனில் இருந்து அண்ணாமலை திரும்பிவந்ததும் படுவேகமாக அரசியல் செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அண்ணாமலை என்னவோ அடக்கியே வாசிக்கிறார். அதேநேரம், தேர்தல் நேரத்தில் தி.மு.க. ஃபைல்ஸ் பார்ட் 3 வெளியிடப்படும் என்று அறிவிப்பு செய்திருக்கிறார். இதை தி.மு.க.வினரே கூட கண்டுகொள்ளவில்லை என்பது தான் ஆச்சர்யமான திருப்பம். அண்ணாமலை தமிழக பா.ஜ.க. தலைவராக வந்ததுமே தி.மு.க. அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்தும் ஊழல் ஃபைல்ஸ் வெளியிட்டார். முதல் முறை அவர் வெளியிட்ட ஃபைல் பெரும் பரபரப்பானது. அதையொட்டி […]

விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் தடை… பா.ஜ.க.வுக்கு எதிராகப் போராடுவாரா சீமான்..?

விடுதலைப்புலிகள் இயக்கத்தையே தங்கள் கட்சிக்கு அடையாளமாகப் பயன்படுத்தி வரும் சீமானுக்கு அதிர்ச்சி தரும் வகையில், விடுதலைப் புலிகள் மீதான தடை: மேலும் ஐந்தாண்டுக்கு இந்தியாவில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்துக்கு எதிராக சீமான் போராட்டம் நடத்துவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. இலங்கையில் தமிழா்களுக்குத் தனி ஈழம் வழங்கப் போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் ஏற்கனவே தடை செய்யப்பட்டு இருந்தது. அந்தத் தடை முடிவுக்கு வரவிருந்த வேளையில் மேலும் ஐந்தாண்டுக்குத் தடையை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சு உத்தரவிட்டது. […]

ஜெர்மனியில் நடைபெற்ற தமிழ்நாடு தினக் கொண்டாட்டம்! அமைச்சர்கள் பங்கேற்பு!

உலகில் தமிழர்கள் இல்லாத நாடுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பரவியிருக்கிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு நாட்டிலும் தமிழர்களின் பண்டிகைகள், தமிழ்மொழியின் கொண்டாட்டங்கள் களைகட்டத்தான் செய்கின்றன. இதில் மற்றொரு விசேஷம் என்னவென்றால், தமிழர்களின் கொண்டாட்டங்களில் அந்தந்த நாட்டு மக்களும் கலந்து கொண்டு மகிழ்ச்சியடைவதுதான்.   அந்த வகையில் ஜெர்மன் நாட்டில் முதல் முறையாக தமிழ்நாடு தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது. ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் நடைபெற்ற தமிழ்நாடு தினக்கொண்டாட்டத்தில் திரளான தமிழர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவினை பிராங்க்பர்ட்டில் […]

ரஜினிகாந்த் இப்படி பேசிட்டாரே… போதையில் இருந்தாரா..?

வட தமிழகத்தைப் புரட்டியெடுத்த ஃபென்சல் புயல் தாக்கம் இன்னமும் மக்கள் மனதிலிருந்து மறையவில்லை. இன்னமும் பல இடங்களில் தண்ணீர் வடியவில்லை. திருவண்ணாமலை நிலச்சரிவில் செத்துப்போன குடும்பத்தினரின் கதறல் ஓயவில்லை. ஆனால், அப்படியொரு விஷயமே தமிழகத்தில் நடந்தது தெரியாமல் ரஜினிகாந்த் இருக்கிறார் என்பது அதிர்ச்சியான தகவல். சென்னை விமான நிலையத்தில் இருந்து கூலி படத்தின் அடுத்தகட்ட சூட்டிங்கிற்கு ஜெயப்பூர் செல்வதற்கு வந்தார் ரஜினிகாந்த். அப்போது அவரிடம் ஃபென்சல் புயல் குறித்தும் திருவண்ணாமலை நிலச்சரிவு மரணம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. […]

புயல் நிவாரண நிதியில் அண்ணாமலை சீட்டிங்..? போட்டுத்தாக்கும் அமைச்சர்

ஃபெஞ்சல் புயல் மற்றும் பருவமழை காரணமாக சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் பெருத்த சேதங்களை சந்தித்து உள்ளன. புயல் பாதிப்புகளுக்கு தமிழ்நாட்டிற்கு உரிய நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது; இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ‘’ஃபெஞ்சல் புயல் பாதிபுக்காக தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ரூ.944 கோடியை ஒதுக்கி உள்ளது’’ என்று நன்றி தெரிவித்திருந்தார். இரண்டே நாளில் நிதி பெற்றுத்தந்த அண்ணாமலை […]

சிங்கப்பூர் விரைவில் அழியும் ; சொன்னது யார் தெரியுமா ?

உலகின் பிரபலமான தொழிலதிபரும் எக்ஸ் தள உரிமையாளருமான எலான் மஸ்க், தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாக சொல்ல கூடியவர். அவர் இரு நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் விரைவில் அழிந்து விடும் என்று  சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தினார் .   இதை தொடர்ந்து சிங்கப்பூரில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்திருப்பதாக வெளியானத் தகவலை மேற்கோள்காட்டிய எலான் மஸ்க் மரியோ நாவ்பால் என்பவர், சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருப்பது தொடர்பான தகவலை வெளியிட்டிருந்த எக்ஸ் தள […]

விஜய் ஒரு தற்குறி: கடுமையாக விமர்சித்த அமைச்சர் சேகர்பாபு!

சென்னையில் நேற்று (டிசம்பர் 6) சட்ட மேதை அம்பேத்கார் புத்தக வெளியீட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், வி.சிக. துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   அம்பேத்கர் புத்தகத்தை விஜய் வெளியிட, அம்பேத்கரின் பேரன் அதனை பெற்றுக் கொண்டார். இதற்கிடையில் நாற்காலியில் அமர்ந்தவாறு வடிவமைக்கப்பட்டிருந்த அம்பேத்கார் சிலையுடன் சேர்ந்து விஜய் எடுத்துக் கொண்ட செல்ஃபிக்கள் இணையத்தில் வைரலானது.   விழாவில் மிகவும் ஆக்ரோஷமாக பேசிய […]

புஸ்ஸி ஆனந்த் பதவிக்கு ஆபத்து. விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனாவுக்கு வரவேற்பு.  

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா எதிர்பார்த்தபடியே அரசியல் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. இனியும் ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் வைத்திருப்பது திருமாவுக்கு நல்லது இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதே நேரம் அவராகவே கட்சியை விட்டு வெளியேற்றடும் என்ற முடிவில் திருமா இருக்கிறார். இந்த புத்தக விழா என்பது பட்டியலின வாக்குகளை குறிவைத்து நகர்த்தப்பட்ட விழாவாகவே இருக்கிறது. ஆகவே, இப்போது அம்பேத்கர் இயக்கம் ஒன்று புதிதாகத் தொடங்கும் முயற்சியில் இருக்கிறார் ஆதவ். அம்பேத்கர் இயக்கத்துக்கு தமிழகம் முழுக்க […]

ஆதவ் அர்ஜூனாவை வெளியேற்ற திருமா பயப்படுவது ஏன்..? இப்படி ஒரு காரணம் இருக்கிறதா..?

மக்களால் தேர்வு செய்யப்பட்ட தி.மு.க. ஆட்சியை மன்னராட்சி என்றும் பிறப்பால் ஒருவரை முதல் அமைச்சர் ஆக்க முடியாது என்று நேரடியாக ஸ்டாலின், உதயநிதியை குறி வைத்துப் பேசியிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா. ஆகவே, இதற்கு மேலும் ஆதவ் அர்ஜூனாவை துணைப் பொதுச்செயலாளராகவே வைத்துக்கொண்டு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், திமுக கூட்டணியில் விசிக தொடர்கிறது என்றும் 2026 தேர்தலிலும் திமுகவுடன் தான் கூட்டணி என்றும் திருமாவளவன் கூறுவதை முடியாது என்று தி.மு.க.வினர் கடுமையான […]