News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சித்தியுடன் மல்லுக்கட்டும் டிடிவி தினகரன். கொதிநிலையில் சசிகலா

எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை என்று ஒவ்வொரு கூட்டத்திலும் சர்க்கரையாகப் பேசுகிறார் டிடிவி தினகரன். ஆனால், சித்தி சசிகலாவை சந்தித்த ஒரு நிர்வாகியை கட்சியை விட்டே நீக்கியிருக்கிறார் தினகரன். இதையடுத்து என்னப்பா நடக்குது என்று புரியாமல் முக்குலத்தோர் தடுமாறுகிறார்கள். சித்தி என்று பத்திரிகையாளர்களிடம் பாசமாகப் பேசும் தினகரன், நிஜத்தில் எலியும் பூனையுமாக மோதிக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த ஆண்டு பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி குரு பூஜையில் கலந்து கொள்ள சசிகலா வந்த போது, அங்கிருந்து டிடிவி […]

விஜய்க்கு ஆப்பு வைத்த நீதிமன்றம். இவர் ஊழல் இல்லாத ஆட்சி தருவாரா?

ஊழல் இல்லாத ஆட்சி அமைப்பேன் என்று மேடைக்கு மேடை பேசிவரும் நடிகர் விஜய் மூன்று ஊழல் வழக்குகளில் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. அதாவது 2012ம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார் இறக்குமதியில் நுழைவு வரி ஏய்ப்பு, 2017ம் ஆண்டு ரெய்டில் பணம் பறிமுதல், 2020ம் ஆண்டு புலி பட வருமானத்தில் 15 கோடி ரூபாய் மறைத்ததாக குற்றச்சாட்டு. இந்த நிலையில் இன்று புலி திரைப்படம் குறித்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதாவது, 2015-ம் ஆண்டு வெளியான ‘புலி’ […]

ஜோதிமணிக்கு பயப்படுகிறாரா பிரதமர் மோடி…? வெட்கக்கேடு

பிரதமர் பாதுகாப்பாக வரமுடியாத அளவுக்கு இந்திய நாடாளுமன்றம் இருக்கிறது என்று பாஜகவினரே பதறுவதைப் பார்க்கையில், நாட்டு மக்களுக்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழுகிறது. அதேநேரம், நம்மூர் ஜோதிமணியைப் பார்த்து பிரதமர் அஞ்சுகிறார் என்றால், அவருக்கும் பாஜகவுக்கும் இம்புட்டுத்தான் வலிமையா என்ற கேள்வி எழுகிறது. இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘’போட்டியிடும் இடங்களில் எல்லாம் தொடர் தோல்வியைச் சந்தித்ததன் விளைவாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, பாராளுமன்றத்திற்குள் அதற்குப் பழி தீர்க்க முயன்ற […]

சசிகலா, பன்னீர் புதிய இயக்கம்…? 50 தொகுதிகளுக்குக் குறி

சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சியில் கண்டிப்பாக இடம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். எனவே, இனியும் காத்திருப்பதில் பயன் இல்லை என்று சசிகலாவும் பன்னீரும் இணைந்து புதிய இயக்கம் உருவாக்கி 50 தொகுதிகளில் போட்டியிட திட்டமிடுவதாகத் தெரியவந்துள்ளது. டி.டி.வி. தினகரன் பாஜக, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தன்னை இணைத்துக்கொண்டார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கும் – அமமுகவுக்கும் இடையேயான பிரச்சனை அண்ணன்-தம்பி இடையே நடந்தது. திமுகவை வீழ்த்த நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம் என கூறி […]

மம்தாவின் புதிய அவதாரம். தேர்தல் கமிஷன் ஆட்டம் முடிவுக்கு வருமா..?

முதல் அமைச்சராக, அரசியல்வாதியாக மட்டுமே பாஜகவை எதிர்த்துவந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நேற்றைய தினம் கருப்பு கவுன் மாட்டிக்கொண்டு, வழக்கறிஞராக உச்ச நீதிமன்றத்தில் களமிறங்கி தேர்தல் கமிஷனை கதறவிட்டுள்ளார். ஸார் திருத்தத்துக்கு எதிராக தமிழகம், கேரளம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் கடுமையான எதிர்ப்புக்குரல் கொடுத்தன. அதேநேரம், தமிழகத்தில் திமுகவினர் நேரடியாக களத்தில் இறங்கி எஸ்.ஐ.ஆர். சீர்திருத்தத்தில் யாரும் விட்டுப்போகக்கூடாது என்று பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் மம்தா பானர்ஜி உச்சநீதிமன்றக் கதவுகளைத் தட்டியிருக்கிறார். உச்சநீதிமன்றத்தில் […]

நிர்மலா சீதாராமனை புரட்டியெடுத்த கமல்ஹாசன். தமிழுக்கு மரியாதை

தமிழ் படித்தால் பிச்சை கூட எடுக்க முடியாது என்று நாடாளுமன்றத்தில் பேசிய நிர்மலா சீதாராமனுக்கு சரியான நேரத்தில் கடுமையான  பதிலடி கொடுத்துள்ளார் கமல்ஹாசன். “தமிழ் பிச்சை எடுக்க உதவாது, தமிழ் திருடவும் உதவாது, தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான், நீங்கள் ஹிந்தியில் பிச்சை எடுக்கலாமே?’’என்றுமுகத்திலேயே குத்தியிருக்கிறார். நேற்றைய தினம் தனது கன்னிப்பேச்சில் கமல்ஹாசன், ‘’எனது உடனடி கவலை வரவிருக்கும் தேர்தல்கள் பற்றியது. எங்களின் தற்போதைய நிலையை ‘உயிரோடு இருப்பவர்களின் மரண […]

ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு…. ஆட்டம் காணும் என்.டி.ஏ. கூட்டணி

அதிமுக மற்றும் திமுகவில் டாக்டர் ராமதாஸ்க்கு கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டதால், வரும் 2026 தேர்தலில் அவர் புதிய முடிவு ஒன்று எடுக்கப்போவதாகத் தெரியவந்துள்ளது. டாக்டர் ராமதாஸ் முதல் தேர்வு அதிமுகதான். அங்கு அன்பணி ராமதாஸ் இணைந்தாலும், அவருக்கு கொடுக்கப்படும் அதே அளவு தொகுதிகள் தங்களுக்கும் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு வாய்ப்பே இல்லை என்று அதிமுக கதவை அடைத்துவிட்டது.   இதையடுத்து திமுக கூட்டணியில் இணைவதற்கு ஜெகத்ரட்சகன் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இங்கேயும் அன்புமணிக்கு வழங்கப்பட்ட அளவுக்கு […]

அண்ணாமலை ஆவேசத்துக்கு இதுதான் காரணம். பாஜகவுக்குள் பனிப்போர்

தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து தன்னுடைய பவரைக் காட்டுவதற்கு ஆசைப்பட்ட அண்ணாமலையை, ஆறே தொகுதிகளுக்குள் அடக்கி வைத்ததால், ஆவேசமாகி பொறுப்பைத் தூக்கி எறிந்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. தேர்தல் நெருங்கிவிட்டதால் அண்ணாமலையை சமாதானம் செய்வார்களா அல்லது அலட்சியம் செய்வார்களா என்பது புரியாமல் பாஜகவுக்குள் பஞ்சாயத்து நடக்கிறது. அதிமுகவை வம்பிழுத்த காரணத்தாலே அண்ணாமலை மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரன் பதவிக்கு கொண்டுவரப்பட்டார். சமீபத்தில் நடந்த கூட்டணிப் பேச்சுவார்த்தையில் அண்ணாமலைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவிலும் அண்ணாமலை இடம்பெறவில்லை. […]

வழக்குகளை வாபஸ் வாங்குவாரா பன்னீர்..? தினகரன் வில்லங்க ஆலோசனை

எந்த நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைவதற்கு நான் ரெடி என்று பன்னீர் இறங்கிவந்த பிறகும் கெட் அவுட் சொல்லிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், அதிமுக மீது போட்டுள்ள வழக்குகளை வாபஸ் வாங்கிவிட்டால் கண்டிப்பாக எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்று ஆலோசனை கூறியிருக்கிறார் டிடிவி தினகரன். இதுவரை பா.ஜ.க-வின் பேச்சை நம்பியே எல்லா முடிவுகளையும் எடுத்துவந்தார் பன்னீர். ஒருகட்டத்தில் டி.டி.வி.தினகரனின் ஆலோசனைகளைக் கேட்டுத்தான் அ.தி.மு.க உரிமைமீட்புக் குழுவை ஆரம்பித்தார். இப்போது டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் இணைந்தபிறகும் […]

எப்ஸ்டீன் ஆவணங்களில் பிரதமர் மோடி..? அமெரிக்காவுக்கு பூஜ்ஜியம் வரி

அமெரிக்காவை உலுக்கிக் கொண்டிருக்கும் எப்ஸ்டீன் ஆவணங்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் வெளிவந்துள்ளது. இதுகுறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்நிலையில் 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான அமெரிக்க எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பிற பொருட்களை வாங்குவதோடு, ‘அமெரிக்கப் பொருட்களை வாங்குவோம்’ என்ற கொள்கையை மிக உயர்ந்த அளவில் கடைப்பிடிக்கவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இதையடுத்து மேட் இன் இண்டியா கொள்கை என்ன […]