கரையாமல் கரை ஒதுங்கிய விநாயகர் சிலைகள்! ராதாகிருஷ்ணன் பேட்டி!

சென்னை மாநகராட்சி மேயர் இன்று பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசும்போது, ‘‘1,400-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் உள்ளே கரைக்கப்பட்ட நிலையில், சுமார் 50 சிலைகள் கரை ஒதுங்கியுள்ளன. மேலும் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் உள்ளே போகாமல் தடுமாறுகிறது. இதனால் பெரிய சிலைகளை மீண்டும் கடலில் போடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்று கூறினார். மேலும் இரவு பகல் பாராமல் பணியாளர்களும், மீனவர்களும், தன்னார்வலர்களும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். காவல்துறையும் தேவைப்படும் […]
தொடர்ந்து 12 மணி நேரம் எஸ்.பி.பி. பாடல்கள்! ஏசியா புக் உலக சாதனை!

ஏசியா புக் உலக சாதனைக்காக தொடர்ந்து 12 மணிநேரம் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்களை பாடும் நிகழ்ச்சி சென்னையில் தொடங்கியது. மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரையிலும் அவர் பாடிய பாடல்களை ஒரு முறையாவது கேட்டு விடாத பாடிவிடாத மனிதர்களே இருக்க முடியாது. இந்நிலையில் மறைந்த எஸ்பி பாலசுப்ரமணியம் நினைவாக ஏசியா புக் உலக சாதனைக்காக அவர் பாடிய பாடல்களை தொடர்ந்து 12 […]
திருப்பதியில் பக்தி மணம்! ஸ்ரீவாரி சாலகட்லா பிரம்மோற்சவம்!

திருப்பதி பிரம்மோற்சவம் கடந்த செப்.18ம் தேதி தொடங்கிய நிலையில் 9 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருமலை திருப்பதியில் ஏழுமலையான் அடி வைத்த நாளில் படைக்கும் கடவுளான பிரம்மதேவனை அழைத்து உலகநன்மைக்காக தனக்கு விசேஷமான உற்சவங்களை நடத்த உத்தரவிட்டதாக புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ஏற்ற பிரம்ம தேவன், புரட்டாசி மாதத்தில் திருவோணநட்சத்திரம் அன்று நிறைவு பெறும் வகையில் தொடர்ந்து 9 நாட்கள் […]
உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை! எடப்பாடி பழனிசாமி என்ன சொல்லப் போகிறார்?

நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் எடப்பாடி பழனிசாமி ரூ.4,800 கோடி முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் (2016&2021) எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சர் பணியுடன் சேர்த்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகவும் பணியாற்றி வந்தார். அப்போது 4,800 கோடி ரூபாய் அளவுக்கு டெண்ர்கள் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். இதனை கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி 2018ம் ஆண்டு சி.பி.ஐ.க்கு […]
இரண்டாக உடைந்த ஆற்றுப்பாலம்! குஜராத்தில் என்ன நடந்தது?

ஜராத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பைக் மற்றும் லாரியில் சென்ற 10 பேர் துரிதமாக மீட்கப்பட்டதால் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டது. குஜராத் மாநிலம் சுரேந்திரநாத் மாவட்டம் வஸ்தாதி பகுதியில் 40 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த ஆற்றுப்பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பாலத்தை பயன்படுத்தி தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவது வழக்கம். அதேபோல் நேற்று மாலையும் இந்த பாலத்தில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து சென்றது. அப்போது திடீரென்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாலம் இடிந்து […]
முதலமைச்சருடன் அமைச்சர்கள் திடீர் ஆலோசனை! முக்கிய பின்னணி!

மின் கட்டண உயர்வை கண்டித்து தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் எதிரொலியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர். மின் கட்டண உயர்வால் ஏற்படும் பாதிப்பை தமிழக அரசுக்கு தெரிவிக்கும் வகையில் சிறு மற்றும் குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி சென்னை, திருப்பூர், கோவை, நாமக்கல், ஈரோடு, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் சிறு, […]
உத்தரகாண்டில் அதிகாலையில் நிலநடுக்கம்! தெருக்களில் தஞ்சமடைந்த மக்கள்!

வங்கக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இன்று அதிகாலை உத்தரகாண்ட் மாநிலத்தில் உணரப்பட்டதால் அலறியடித்து ஓடிய பொதுமக்கள் தெருக்களில் தஞ்சமடைந்தனர். வங்கக்கடலில் 4.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கண்டறியப்பட்ட நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி என்ற பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் தூக்கத்தில் இருந்து விழித்த மக்கள் அலறியடித்துக் கொண்டு தெருக்களில் குடும்பம் குடும்பமாக தஞ்சமடைந்தனர். ரிக்டர் அளவுகோலில் 3 ஆக நிலநடுக்கம் பதிவானதாக மத்திய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் அதிகாரப்பூர்வமான தனது […]
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி தொடருமா? இன்று முக்கிய முடிவு எடுக்கும் எடப்பாடி!

பா.ஜ.க.வுடனான கூட்டணி தொடருமா? என்பது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தி முடிவுகளை அறிவிக்க உள்ளார். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து மறைந்த தலைவர்களான அண்ணாதுரை, ஜெயலலிதா உள்ளிட்டோர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர்ராஜூ உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து தக்க பதிலடி கொடுத்தனர். இதில் ஜெயக்குமார் மட்டும் கொதித்தெழுந்து இனி […]
கிருஷ்ணகிரியில் அதிரடி காட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! அப்படி என்ன செய்தார்?

அனைத்து துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றுள்ள அமைச்சர் உதயநிதி, கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதி வார்டனை அதிரடியாக சஸ்பெண்டு செய்துள்ளார். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ள அனைத்துத் துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். அதன்படி நேற்று (செப்.24) கிருஷ்ணகிரி மாவட்ட […]
ஏழுமலையான் தரிசனம்! டிசம்பர் மாத டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

டிசம்பர் மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இன்று காலை 10 மணி முதல் இணையத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் தேவஸ்தான் அறிவித்துள்ளது. ஆந்திராவில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் தினசரி எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்கள் என்றால் லட்சக்கணக்கில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க குடும்பத்துடன் புறப்பட்டு விடுகின்றனர். அந்தவகையில் தற்போது திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. எனவே வழக்கத்திற்கும் மாறாக பக்தர்களின் கூட்டம் வெள்ளம் போல் கரைபுரண்டோடுகிறது. […]

