News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ராகுல் அம்பலப்படுத்திய ஓட்டு திருட்டு… அதிரும் ஜனநாயகம்

400 தொகுதிகளை வெல்வோம் என்று வீரவசனம் பேசிய பாஜக, தனிப்பெரும்பான்மை பெறவே முடியாத அளவுக்குத் தடுமாறியது. இந்த வெற்றியும் உண்மை அல்ல, அப்பட்டமான சீட்டிங் என்று ராகுல் காந்தி அம்பலப்படுத்தியிருக்கிறார். காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ராகுல் காந்தி ஐந்து விதமான பாஜக சீட்டிங் குறித்து விலாவாரியாகப் பேசினார். அவர் பேசுகையில், “நமது அரசியலமைப்பின் அடித்தளம், ‘ஒருவருக்கு ஒரு வாக்கு கிடைக்கும்’ என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டதுதான். தேர்தலில் சரியான நபர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்களா? […]

அழையா விருந்தாளி அன்புமணி….? ராமதாஸ் மாநாட்டில் காத்திருக்கும் திகில்

எந்த ஒரு பதவிக்கும் தகுதி இல்லாத சோம்பேறிக் கழுதை தான் அன்புமணி என்று டாக்டர் ராமதாஸ் கொடுத்திருக்கும் பேட்டியும் பூம்புகாரில் நடக்க இருக்கும் மாநாடும் பாமகவுக்குள் கடும் மோதலை உருவாக்கிவருகிறது. இந்த மாநாட்டுக்கு அழையா விருந்தாளியாக அன்புமணி வருகை தருவார் என்று கூறப்படுவது உண்மையான தொண்டர்களை அலற விட்டுள்ளது. பெண்கள் முன்னேற்றம்,. பெண்களுக்கு எதிரான வன்முறை, அரசு பதவிகளில் அதிகாரத்தில் பெண்கள், பெண்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு போன்ற கொள்கைகளை முன்னிறுத்தி பூம்புகாரில் வன்னியர் சங்கம் […]

போலீஸ் கொலைக்கு என்கவுன்டர்..? எக்கச்சக்க சர்ச்சை

உதவி ஆய்வாளரை வெட்டிக் கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிகண்டனை போலீஸார் என்கவுன்டர் செய்திருப்பது மீண்டும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.    திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி அவரது மற்றும் மூத்த மகன் தங்கராஜாவும் மற்றொரு மகனும் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், தந்தை மூர்த்தி, தங்கபாண்டி, மற்றொரு மகன் மணிகண்டன் ஆகிய மூவரும் […]

விஜய் மாநாட்டில் களம் இறங்கும் விஐபிகள். நடிகையும் திமுக முக்கியப் புள்ளியும் சங்கமம்

வரும் ஆகஸ்ட் 21ம் தேதி மதுரையில் விஜய் கட்சியான த.வெக. மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. இந்த மேடையில் மாற்றுக் கட்சியில் இருந்து சங்கமிக்கும் 10 விஐபிகள் மேடை ஏற இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். இந்த பட்டியலில் காளியம்மாள், மருது அழகுராஜ் ஆகியோருடன் திமுக முக்கியப் புள்ளி ஒருவர் இருக்கிறாராம். எப்போது மதுரை மாநாடு என்று பல்வேறு குழப்பங்கள் இருந்தன. இவற்றைத் தீர்க்கும் வகையில் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “மாற்றத்தை நோக்கிய தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் […]

அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை, நடந்தது என்ன..?

தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று இபிஎஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில் காவல் உதவி ஆய்வாளர் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்தத் தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி அவரது மற்றும் மூத்த மகன் தங்கராஜாவும் மற்றொரு மகனும் வேலை செய்து வந்தனர். அவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை […]

கொட்டும் மழை, மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் எடப்பாடி பழனிசாமி… தெற்கில் தாக்குப் பிடிப்பாரா..?

கொங்கு பகுதியில் அதிமுக ரொம்பவே ஸ்ட்ராங்க் என்பது எல்லோருக்கும் தெரியும். அதேநேரம், தெற்கில் படு வீக் என்பார்கள். அதை மாற்றும் வகையில் தெற்குப் பகுதியில் டூர் அடித்துவருகிறார் எடப்பாடி பழனிசாமி. நேற்றைய தினம் அவர் மழையில் நனைந்துகொண்டு பேசியபோதும் மக்கள் கலையாமல் இருந்ததும் ஊனமுற்ற குழந்தைகளுடன் அவர் கலந்துரையாடியதும் மக்களைக் கவர்ந்துள்ளது. ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. நேற்று மாலை திருநெல்வேலி தொகுதிக்குட்பட்ட நெல்லை டவுன் வாகையடி திடல் […]

படிக்கச்செல்லும் தமிழக மாணவர்களை போருக்கு அனுப்பும் ரஷ்யா… துரை வைகோ அதிர்ச்சி தகவல்

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நீண்ட நாட்களாக போர் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து ரஷ்யாவில் படிக்கச் செல்லும் மாணவர்களை, ரஷ்ய நாடு வம்படியாக ராணுவத்தில் சேர்த்து பணிபுரிய அனுப்புவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அப்படி சிக்கியிருக்கும் தமிழ் மாணவரை மீட்கும்படி பிரதமர் மோடியிடம் முறையிட்டிருக்கிறார் துரைவைகோ எம்.பி. ரஷ்யாவுக்குப் படிக்கச் சென்ற மாணவன் கிஷோர் கடந்த 31.07.2025 அன்று அவரது குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தன்னை ஆகஸ்ட் 2 அன்று […]

திமுகவில் இணைகிறாரா பன்னீர்..? பாஜகவுக்கு கெட்ட நேரம்

தமிழகத்தில் கண்மூடித்தனமாக பாஜகவை ஆதரித்துக்கொண்டிருந்த ஒரே நபர் ஓ.பன்னீர்செல்வம். அவரே இப்போது பாஜகவை ஓட ஓட விரட்டிக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் அவர் திமுகவில் இணையப்போவதில்லை என்று கொடுத்திருக்கும் அறிவிப்பு அரசியலை மேலும் பரபரப்பாக்கியுள்ளது. மோடி சந்திப்புக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றதும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு அறிவித்தது. அதோடு தமிழக முதல்வர் ஸ்டாலினை அடுத்தடுத்து மூன்று முறை சந்தித்துப் பேசியிருக்கிறார். திமுகவில் இணையப்போகிறாரா என்ற கேள்விக்குப் […]

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு போட்டியாக களம் இறங்கும் ஹெச்.ராஜா..? நடிப்பில் டெபாசிட் வாங்குவாரா..?

சினிமாவில் நடித்து அதன் பிறகு அரசியலுக்கு வரும் நடிகர்கள் மத்தியில், அரசியலில் இருந்து நடிப்புக்குப் போகிறார் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா. சினிமாவில் ரஜினியை ஓரங்கட்டிவிட்டு சூப்பர் ஸ்டாராக மாறுவாரா என்று பாஜகவினர் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இன்று ஹெச்.ராஜா வெளியிட்டிருக்கும் பதிவில், ‘’கிடுகு திரைப்பட இயக்குனர் சகோதரர் வீரமுருகன்  இயக்கத்தில் நான் நடித்து வெளிவர இருக்கும் கந்தன் மலை திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் போஸ்டரை நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் […]

விஜய்யை சீண்டும் அஜித்… வெளுத்தெடுக்கும் ரசிகர்கள்

கூலி விழாவில் ரஜினி, அகரம் விழாவில் சூர்யா ஆகியோர் மறைமுகமாக நடிகர் விஜய்யை தாக்குதல் கொடுத்த நிலையில், தன்னுடைய 33 ஆண்டு திரையுலக வாழ்வுக்கு நன்றிக் கடிதம் எழுதியிருக்கும் அஜித் நேரடியாகவே விஜய்யை சீண்டியிருக்கிறார். அஜித் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘’உங்களது அன்பை என் சுயலாபத்திற்காகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்தமாட்டேன்’’ என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இது, விஜய்யை வம்புக்கு இழுக்கும் வேலை. அவர் ரசிகர்களை அரசியலுக்குப் பயன்படுத்துவதை வேண்டுமென்றே கிண்டல் செய்கிறார் என்று அவர்ரது ரசிகர்கள் பாய்ந்து பாய்ந்து […]