News

மோடியை வரவேற்பாரா செங்கோட்டையன்..? எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி

Follow Us

விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்..? உதயநிதி பக்கா ஸ்கெட்ச்

விஜய் நாளை நடத்த இருக்கும் பொதுக்குழுக் கூட்ட ஆயத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் நாளை முக்கியமான ஒரு போராட்ட அறிவிப்பு வெளியிடுவார் என்று சொல்லப்படும் நிலையில், விஜய்க்குப் போட்டியாக சிவகார்த்திகேயனை முன்னிறுத்தும் உதயநிதியின் அரசியல் படு விவகாரமாகிறது. சினிமாவில் தன்னுடைய இடத்தை சிவகார்த்திகேயனிடம் விஜய் ஒப்படைப்பது போன்று காட்சி அமைத்ததில் இருந்து அவரது ரசிகர்கள் சிவகார்த்திகேயனை கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் விஜய் கடைசி படத்துடன் சிவகார்த்திகேயன் படத்தை மோத வைக்கிறார் உதயநிதி. தீபாவளிக்கு வெளிவரும் […]

யோகியுடன் ஸ்டாலின் நேரடி மோதல்..? உ.பி. தமிழர்களுக்குச் சிக்கல்..?

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சூடான பதிலடி கொடுத்துள்ள விவகாரத்தையடுத்து இரண்டு மாநிலங்களிலும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், “மொழி என்பது மக்களைப் பிரிக்காமல் ஒன்றிணைக்க வேண்டும். தமிழ் இந்தியாவின் பழமையான மொழிகளில் ஒன்று. மேலும் அதன் வரலாறு சமஸ்கிருதத்தைப் போலவே பழமையானது. காசி தமிழ் சங்கமம் வாரணாசியில் நடக்கிறது. ஒவ்வொரு இந்தியரும் தமிழ் மீது மரியாதை வைத்துள்ள நிலையில், அவர்கள் ஏன் […]

தி.மு.க.வுடன் போஸ்டர் யுத்தம்…. அமித் ஷாவுக்கு ஜால்ரா… பாய்கிறது இபிஎஸ் டீம்

டெல்லியில் அமித் ஷா சந்திப்புக்குப் பிறகும் கூட்டணியை எடப்பாடி பழனிசாமி உறுதிபடுத்தவில்லை. இந்த நிலையில் பா.ஜ.க.வுக்கு ஜால்ரா போடும் வேலையில் அ.தி.மு.க.வின் மாஜி அமைச்சர்கள் இறங்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் இரும்பு மனிதரான இபிஎஸ், இந்தியாவின் இரும்பு மனிதரான அமித்ஷாவும் சந்தித்துக் கொண்டனர் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இது குறித்து பேசும் அ.தி.மு.கவினர், ‘’அமித் ஷா சந்திப்புக்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார். ஏனென்றால் பா.ஜ.க. மீது […]

விஜய்க்கும் சீமானுக்கும் டஃப் போட்டி.? உறுதியாகும் நான்குமுனைப் போட்டி

நடிகர் விஜய்க்கும் அ.தி.மு.க.வுக்கும் கூட்டணி இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நேரத்தில் அமித் ஷாவை சந்தித்து, அந்த பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. இப்போது பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. பயணிப்பதால் விஜய் கட்சியால் கூட்டணி வைக்கவே முடியாது. விஜய் நிலை என்னாகும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இது குறித்து நாம் தமிழர் கட்சியினரிடம் பேசினோம். ‘’எடப்பாடி பழனிசாமி மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொரிவதற்கு […]

அமித் ஷா சந்திப்பு வெற்றி… பேச்சுவார்த்தை தோல்வி…?…? இபிஎஸ் சமாளிப்பு அரசியல்

டெல்லிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் யாரையும் சந்திக்க வரவில்லை என்று சொன்னார். அதன் பிறகு அமித்ஷாவை சந்தித்தார். அப்போது சந்திப்பு குறித்து கேட்டபோது இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுவதாகச் சொன்னார். இன்று, கூட்டணி குறித்துப் பேசவில்லை என்று சமாளித்திருக்கிறார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோள் ஏற்கப்படவில்லை என்ற பேச்சு உலவுகிறது. இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி- மக்கள் பிரச்சனைகளைப் பேசி தீர்வு காண முனையும் […]

செயின் பறிப்புக்கு என்கவுண்டர்… குற்றவாளிகளை அலறவிடும் சென்னை போலீஸ்

சென்னையில் ஒரே நாளில் ஏழு இடங்களில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வட மாநில குற்றவாளிகளை அலறவிட்டுள்ளது சென்னை போலீஸ். நேற்று முதல் செயின் பறிப்பு சம்பவம் சைதாப்பேட்டையில் காலை 6 மணியளவில் பதிவானது. அதனைத் தொடர்ந்து, சில கிலோமீட்டர் சுற்றளவுக்குள் மேலும் ஐந்து சம்பவங்கள் விரைவாக பதிவாயின. உடனடியாக செயல்பட்ட காவல்துறை, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, நகரில் […]

இபிஎஸ் முதல்வர், அண்ணாமலை துணை முதல்வரா..? பா.ஜ.க.வுக்குள் பரபரப்பு

எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு இன்று சென்னை திரும்புகிறார். டெல்லியில் எடப்பாடி பழனிசாமி 8 மணி நேரத்தில் 3 கார்களை மாற்றி மாற்றி பயணித்த விவகாரம் சர்ச்சையாக மாறியிருக்கிறது. அதோடு, கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொண்டாரா என்ற கேள்வி நிலவுகிறது. எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் டெல்லி சென்றால் எடப்பாடி பழனிசாமிக்கு அரசு வாகனம் வழங்கப்படும். அதன்படி டெல்லி விமான நிலையத்திலிருந்து அதிமுக அலுவலகத்திற்கு வர எடப்பாடி பழனிச்சாமி பயன்படுத்தியது அரசு வழங்கிய இன்னோவா கார். அதன் […]

சவுக்கு சங்கர் வீடு தாக்குதலுக்கு செல்வப்பெருந்தகை பதவி பறிப்பு..? வில்லங்க அரசியல்

சவுக்கு சங்கர் வீட்டில் நுழைந்து தாக்குதலுக்கு தலைமை தாங்கிய வாணிஸ்ரீ விஜயகுமார் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர். இங்கு தாக்குதல் நடந்த நேரத்தில் முதல்வரை சந்தித்து வெள்ள நிவாரணத்திற்கு சம்பளத்தை நிதியாக அளித்திருக்கிறார் செல்வப்பெருந்தகை. அதாவது, சவுக்கு சங்கர் வீட்டு தாக்குதல் குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுவது அரசியல் களேபரமாகியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் சவுக்கு சங்கருக்கும் நீண்ட காலமாகவே நேரடி மோதல் நடந்துவருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகையைக் கைது […]

பா.ஜ.க.வில் பார்த்திபன்..? கவர்னரை பாராட்டினால் துரோகியா..?

ஆளும் கட்சியில் யார் இருந்தாலும் அவர்களுக்கு சோப்பு போடுவது போன்று அவ்வப்போது பாராட்டி வருபவர் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன். அவரது சமீபத்திய படங்கள் எதுவுமே ஓடியதில்லை. அதனால் ராதாரவி, சரத்குமார் பாணியில் பார்த்திபனும் பா.ஜ.க.வில் சங்கமம் ஆக இருப்பதாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் கவர்னருடன் ஒரு விழாவில் கலந்துகொண்ட பார்த்திபன், ‘’இந்த நிகழ்ச்சியை யார் நடத்துகிறார்கள் என்பது மிக மிக முக்கியமானது. இங்கு தமிழ் அழகாக மணந்து வருகிறது. தமிழ்நாட்டில் தமிழ் பண்பாட்டை அழகாக பாதுகாக்கிறார் […]

எடப்பாடி பழனிசாமியுடன் சவுக்கு சங்கர் சந்திப்பு..? தனிக் கட்சி ஆலோசனை

vசவுக்கு சங்கர் வீட்டில் நுழைந்து அவரது தாயாரை அச்சுறுத்தியதுடன், ஆங்கே மனிதக் கழிவு உள்ளிட்ட சாக்கடை கழிவுகளைக் கொட்டியுள்ள குரூரச் செயல் தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது. தூய்மைப் பணியாளர்களைச் சவுக்கு சங்கர் இழிவுப்படுத்திப் பேசியதால்தான், அதன் எதிர்வினையாக இது நடந்திருக்கலாமென சொல்லப்படுகிறது என்றாலும் இது சவுக்கு சங்கருக்கு கொடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். ‘’ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள யாரும் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள். உண்மையில் இந்தச் சம்பவம் கொடுமையின் […]