சக திரைநாயகி திரிஷா என்னை மன்னித்துவிடு! மன்சூர் அலிகான் அறிக்கை!

நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில், நடிகை திரிஷா குறித்து மிகவும் ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இதனால் கொதித்தெழுந்த திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்து, மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். மன்சூர் அலிகானின் பேச்சுக்கு திரைத்துறையினர் […]
நடிகர் பிரகாஷ்ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன்! பரபரப்பு தகவல்கள்!

ரூ.100 கோடி பண மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் பிரகாஜூக்கு அமலாக்கத்துறை நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரைப்படங்களில் வில்லன், குணச்சித்திர நடிகர் என பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்றி நடித்து வரும் பிரகாஷ் ராஜூக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரணவ் ஜூவல்லர்ஸ், தங்கநகை முதலீட்டுத் திட்டம் என்ற பெயரில் […]
ராஜஸ்தானில் நாளை சட்டப்பேரவை தேர்தல்! ஓய்ந்தது தேர்தல் பிரசாரம்!

அரசியல் கட்சிகள் தீவிரமாக நடத்திய தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில் ராஜஸ்தானில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஷ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறும் என்று கடந்த மாதம் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில் ஏற்கனவே மிசோரம், சத்தீஷ்கர், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்து விட்ட நிலையில் நாளை (நவ.25) ராஜஸ்தானிலும், வருகிற 30ம் தேதி தெலுங்கானாவிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற […]
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

(தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் ஆங்காங்கே தொடர் மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (நவ.23) தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியது. இந்நிலையில் நீலகிரி, கோவை, தேனி மற்றும் […]
சர்வதேச இசையமைப்பாளரான கதீஜா ரகுமான்! ரசிகர்கள் வாழ்த்து!

சர்வதேச இசையமைப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மகளான கதீஜா ரகுமான் அவதாரம் எடுத்துள்ளது பாராட்டுதல்களை குவித்து வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மகளான கதீஜா ரகுமான் கடந்த 2010ம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தில் இடம்பெற்ற புதிய மனிதா என்ற பாடலில் ஒரு சிறிய பகுதியை பாடியிருந்தார். அதைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன்2 படத்தில் இடம்பெற்ற ‘சின்னஞ்சிறு நிலவே’ என்ற பாடலையும் பாடி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதைத்தொடர்ந்து ‘மின்மினி’ என்ற புதிய படத்தில் இசையமைப்பாளராக […]
2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிக சீட் கேட்போம்! கே.எஸ்.அழகிரி பளிச்!

வரப்போகும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிக சீட் கேட்போம் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் தெரிவித்துள்ளார். வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்தான் தற்போது முழு இந்தியாவின் முழு பேச்சாக உள்ளது. இதைத்தொடர்ந்து தேசிய கட்சிகள் அந்தந்த மாநில கட்சி நிர்வாகிகளிடம் பிரசார யுக்திகளையும், தேர்தல் பணிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி வந்திருந்த […]
திரிஷா விவகாரம்! போலீஸ் நிலையத்தில் ஆஜரான மன்சூர் அலிகான்!

திரிஷா விவகாரம் குறித்து நேரில் ஆஜராக நடிகர் மன்சூர் அலிகான் கால அவகாசம் கேட்டிருந்த நிலையில் இன்று 2.30 மணியளவில் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மீது தென்னிந்திய நடிகர் சங்கம், திரையுலகம் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் என அனைவருமே கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நான் பேசியதை தவறாக சித்தரித்துவிட்டார்கள் என்று கூறிய நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று பிடிவாதமாக […]
உயிர் தப்பிய நடிகர் சூர்யா! ‘கங்குவா’ படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு!

நடிகர் சூர்யா ‘கங்குவா’ படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய நிலையில் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் பாலிவுட் நடிகை இஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ […]
ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனை நிறுத்தம்! டி.டி.வி.தினகரன் கண்டனம்!

ஆவின் நிர்வாகத்தை பெருக்க மாற்று ஏற்பாடுகளை கொண்டு வரும்படியும், பச்சை நிற ஆவின் விற்பனையை உறுதி செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆவின் நிறுவனத்தில் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் விற்பனையை அந்நிறுவனம் திடீரென்று முடிவு செய்துள்ளது அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் […]
தொண்டை வலி சிகிச்சை எடுத்து வருகிறேன்! மன்சூர் அலிகான் போலீசாருக்கு கடிதம்!

நடிகர் தனக்கு தொண்டை வலி இருப்பதால் பேச மிகவும் சிரமமாக இருப்பதால் நாளை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக அனுமதி அளிக்குமாறு ஆயிரம் விளக்கு போலீசாருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில், நடிகை திரிஷா குறித்து மிகவும் ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இதனால் கொதித்தெழுந்த திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்து, மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

