News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள்! நடிகர் சிவக்குமார் வாழ்த்து!

உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு  (நவ.7) நடிகர் சிவக்குமார் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். உலகநாயகனும், மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு நாளை 68வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு திரையுலகினர், ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவக்குமார் விடுத்துள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில் கூறும்போது, ‘‘நடிப்புக் கலையில் அசகாய சூரர்கள் என்று நான் மதித்துப் போற்றுபவர்கள் தமிழ்ச் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியும், உலகநாயகன் […]

பிரதீப் ரெட் கார்டு விவகாரம்! வலுக்கும் கண்டனங்கள்!

பிக்பாஸ் 7ல் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர் பிரதீப்புக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருவதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் வெற்றியாளராக இவர் இருப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டவர் பிரதீப். இவர் ஆட்டத்தின் முதல் நாளில் இருந்தே நான் இப்படித்தான். இப்படித்தான் விளையாடுவேன் பேசுவேன் என்று தனது நிலையில் தீர்க்கமாக இருந்தார். இப்படியிருக்க கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களான, ஜோவிகா, […]

கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற வைஷாலி! யார் தெரியுமா?

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.வைஷாலி கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். நேற்று (நவ.5) நடைபெற்ற மகளிர் பிரிவில் 10வது சுற்றில் வைஷாலி சீனாவின் முன்னாள் வீராங்கனை மகளிர் உலக சாம்பியனான ஜோங்யி டானை எதிர்த்து விளையாடினார். 8 புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்த வைஷாலி, ஜோங்யி டானை வீழ்த்தி அசத்தினார். மேலும் 2,498 ஈலோ லைவ் புள்ளிகளுடன் தொடர்ந்து களத்தில் இருந்த வைஷாலி, மேலும் 2 […]

திசை திருப்பும் முயற்சி! ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்!

அமைச்சர் ஆர்.எஸ்.பாரதி நாகா இன மக்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு இது முற்றிலும் திசை திருப்பும் முயற்சி என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.   தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நாகா இன மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக சமூகவலைதளங்களில் செய்தி நேற்று (நவ.5) தீயாக பரவியது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாகாலாந்து மக்கள் நாய்க்கறி சாப்பிடுபவர் எனவும், மலைவாழ் பழங்குடியினரான […]

டெல்லி காற்றுமாசு! உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை பாதிக்குமா? ஐ.சி.சி. ஆலோசனை!

டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளதை தொடர்ந்து டெல்லியில் வங்கதேசம் இலங்கை இடையிலான உலகக்கோப்பை தொடர் குறித்து நிபுணர்களிடம் ஐ.சி.சி. ஆலோசனை நடத்தி வருகிறது. உலகக்கோப்பை போட்டித் தொடருக்கான இன்றைய ஆட்டத்தில் வங்கதேசம்& இலங்கை அணிகள் மோதுகின்றன. டெல்லியில் நடைபெற உள்ள இந்த போட்டியில் பங்கேற்பதற்கான இருநாட்டு அணிகளும் டெல்லி வந்து சேர்ந்துள்ளனர். டெல்லியில் ஏற்கனவே காற்று மாசு அதிகரித்துள்ளதால் ஐ.சி.சி. வீரர்களின் நலன் குறித்து நிபுணர்களிடம் முக்கிய ஆலோசனை நடத்துகிறது. கடந்த சில வாரங்களாகவே டெல்லியில் […]

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக சோதனை!

தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் இன்று 4வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை அடுத்த  மாத்தூர் வேலுநகர்  பகுதியில் கடந்த 3ம் தேதி வருமானவரித்துறையினர் தி.மு.க. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய அருணை பொறியியல் கல்லூரியில் சோதனை மேற்கொள்ளத் தொடங்கினர். அதன்படி கடந்த 3ம் தேதி காலை தொடங்கிய சோதனையின் போது அருணை பொறியியல் கல்லூரி மற்றும் அமைச்சரின் இல்லம் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். வருமானவரித்துறை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி […]

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல்! 21 வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.   ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் வருகிற இம்மாதம் (நவம்பர்) நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் மற்றும் இதர பிற கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன.   ஒருபுறம் தேர்தல் பிரசாரத்துடன் சேர்த்து தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அதன்படி காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான் மாநிலத்தில் […]

சொத்து குவிப்பு வழக்கு: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பழகன் நேரில் ஆஜர்?

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் அவர் நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் அ.தி.மு.க. அமைப்பு செயலாளராகவும், தருமபுரி மாவட்ட செயலாளராகவும், முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சராகவும் இருந்த போது ரூ.45 கோடி வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 2022ம் ஆண்டு […]

முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு -மருத்துவமனை அறிக்கை

இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  மருத்துவமனையில் அனுமதி.   முதலமைச்சர் மு க ஸ்டாலின்  அவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு என மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவமனை அறிக்கை விடுத்துள்ளது

அபிராமி அபிராமி ராமநாதன் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக ரைடு

அபிராமி மால் உரிமையாளர் ராமநாதனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை. சென்னை பல்வேறு இடங்களில் நடத்தி வரும் வருமான வரித்துறையினர் மால் உரிமையாளர் ராமநாதனிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது