ஆதிச்சநல்லூர் சைட் மியூசியம்: நேரில் ஆய்வு செய்த கனிமொழி எம்.பி.

பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சீரமைக்கப்பட்ட ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை கனிமொழி எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் பெய்த கனமழை பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு எடுத்த துரித நடவடிக்கையால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழக அரசு, அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி […]
கேப்டன் விஜயகாந்த் மறைவு! வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய சசிகுமார்!

கேப்டன் விஜயகாந்த் கடந்த (2023) டிசம்பர் மாதம் 23ம் தேதி நிமோனியா காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். இதைத்தொடர்ந்து கேப்டனின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திலும், பின்னர் தீவுத்திடலிலும், தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திலும் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சினிமா துறையினர், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். படப்பிடிப்புக்காகவும், சொந்த காரணங்களுக்காகவும் வெளிநாடு சென்றிருந்த நடிகர்கள் சிலர் கேப்டனின் மறைவுக்கு […]
மோடியின் ஆதரவுடன் மிரட்டும் ஓ.பி.எஸ்..! நடுக்கத்தில் எடப்பாடியின் மாஜி மந்திரிகள்

சமீபத்தில் பாரதப்பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். அதன்பிறகு எடப்பாடி மீது ஆவேசமாக தாக்குதல் நடத்தத் தொடங்கியிருக்கிறார். அதோடு பா.ஜ.க.வுடன் இணக்கமாக இருக்கிறோம். தினகரனுடன் கூட்டணியில் இருக்கிறோம் என்றும் தெளிவு படுத்தியிருக்கிறார். அதேநேரம், விரைவில் அண்ணா தி.மு.க. வலுவான கூட்டணியை அறிவிக்கும் என்று எடப்பாடி அறிவித்திருந்தாலும் எந்த ஒரு பெரிய கட்சியும் கூட்டணிக்குத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. பா.ம.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகள் எல்லாமே பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரவே விரும்புகிறார்கள். பூவை ஜெகன்மூர்த்தி, சில துக்கடா இஸ்லாமிய […]
ஜீரோ ரன்னுக்கு 6 விக்கெட்… அச்சச்சோ… இந்தியாவின் மோசமான கிரிக்கெட் சாதனை

டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் பேட்டிங் வரிசை அபார பலத்துடன் உள்ளது என்று எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு கடப்பாரையால் அடி கொடுத்திருக்கிறது, தென்னாப்பிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி. இரண்டு டெஸ்ட் கொண்ட தொடரில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. இந்த நிலையில் கேப்டவுனில் இரண்டாவது டெஸ்ட் ஆரம்பமானது. தென்னாப்பிரிக்கா பேட் செய்யத் தொடங்கியதும் இந்தியாவுக்கு ஆரம்பம் அட்டகாசமாக அமைந்தது. ஆம், 55 ரன்களில் தென்னாப்பிரிக்கா சுருண்டு போனது. தென்னாப்பிரிக்க […]
வடகலை தென்கலை காட்டுமிராண்டித்தன மோதல்… அடிதடி, குஸ்தி, கொலை மிரட்டல்…!

வேலை இல்லாத வெட்டிகள், ஜாதிப்பெருமை பேசும் பழமைவாதிகள், ஆணவம் பிடித்தவர்கள் மட்டுமே தங்கள் ஜாதிப் பெருமைக்காக மல்லுக்கட்டுவார்கள் என்று விமர்சனம் செய்வோரின் வாயை அடைக்கச் செய்யும் அளவுக்கு வடகலை, தென்கலை பிரிவினருக்கிடையே நடைபெற்ற அடிதடி விவகாரம் சந்தி சிரிக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தின் பார்வேட்டை திருவிழாவில் வரதராஜபெருமாள் எழுந்தருளும் வைபவம் நடைபெறும். அதன்படி, கண்டருளி பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலையின் மீது எழுந்தருளினார். தேவராஜ சுவாமி பார்வேட்டைக்கு […]
துபாயில் இருந்து திரும்பிய சரத்குமார்! கேப்டன் சமாதியில் அஞ்சலி!

துபாயில் இருந்து திரும்பிய நடிகர் சரத்குமார், கேப்டன் விஜயகாந்தின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியதுடன், சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று கேப்டனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி நிமோனியா காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து கேப்டனின் உடல் சென்னை தீவுத்திடலிலும், தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திலும் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சினிமா துறையினர், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று […]
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் மறைவு! முதலமைச்சர் நேரில் அஞ்சலி!

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் காலமானதை தொடர்ந்து அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மறைந்த கு.க.செல்வம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி விடுத்துள்ளார். அதில், ‘‘வெள்ளந்தியான உள்ளத்துக்கு சொந்தக்காரர் கு.க.செல்வம் என்று கூறிய அவர், புன்சிரிப்பும், வாஞ்சையும் நிறைந்த அவரது பேச்சை இனி கேட்க முடியாது என்று எண்ணும் போது நெஞ்சம் விம்முகிறதாக தெரிவித்திருந்தார். மேலும் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு திமுகவில் தன்னை இணைத்துக் […]
தூத்துக்குடி கனமழை: கனிமொழி எம்.பி. தலைமையில் ஆய்வுக்கூட்டம்!

தூத்துக்குடியில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக மேற்கொள்ள வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று (ஜன.3) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. தென்மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக திருநெல்வேலி, குமரி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்தது. வீட்டிற்குள் புகுந்த வெள்ளநீர் பொதுமக்களின் அனைத்து பொருட்களையும் நாசமடைய செய்ததுடன் பலரின் வீடுகள் மழைவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு மேற்கொண்ட […]
வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள்: ஓ.பன்னீர்செல்வம் மரியாதை!

சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இந்தியாவில் முன்னெடுக்கப்பட்ட சுதந்திர போராட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களுடையது தான். அதிலும் குறிப்பாக ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து உயிர் நீத்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரதீர சாகச செயல்கள் மக்கள் மனதில் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியது. இன்று (ஜன.3) சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய […]
கலைஞர் நூற்றாண்டு விழா இலக்கிய போட்டி: மாணவர்களுக்கு பரிசளித்த அமைச்சர் சேகர்பாபு!

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருக்கோவில்கள் சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டு மற்றும் இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருக்கோயில்கள் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இலக்கியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். சென்னை […]

