News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

கருப்புச் சட்டை, கண்டன ஆர்ப்பாட்டம், சி.பி.ஐ. விசாரணை. எடப்பாடி பழனிசாமி பலமுனைத் தாக்குதல்

எதிர்க்கட்சித் தலைவராக இத்தனை நாட்களும் அமைதியாக இருந்த எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு கடுமையாக எதிர்ப்பு காட்டி போராட்ட குணம் காட்டியிருக்கிறார். கடந்த ஆண்டு கள்ளச்சாராயம் குறித்து எச்சரிக்கை செய்த பிறகும் ஸ்டாலின் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, ராஜினாமா செய்ய வேண்டும் என்று சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன் கண்டனம் தெரிவித்தார். அதேபோல், வரும் 26ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அந்த அறிக்கையில், ‘தமிழ் நாட்டில் கள்ளச்சாராய புழக்கத்தை […]

மர்ம மரணங்கள் பின்னணியில் மாஜி அமைச்சர் அன்பழகன்..?

அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள். கடந்த எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க. ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். கடந்த ஆண்டு இவரது வீடு மற்றும் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் என 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், வருமானத்திற்கு மீறிய சொத்துக்குவிப்பு செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. தற்போது இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து மர்ம மரணங்கள் நிகழ்வதாகவும் அதற்கு மாஜி அமைச்சர் காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், ‘2016-2021ம் […]

திருச்சி சூர்யா, கல்யாணராமன் நீக்கம். அண்ணாமலை கூட்டத்தில் கடும் மோதல்

நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தமிழக பாஜக மாநில மையக்குழு கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அண்ணாமலை ஆதரவாளர் ஒருவரும் எதிர்ப்பாளர் ஒருவரும் கட்டம் கட்டப்பட்டுள்ளனர். இந்த மையக்குழுக் கூட்டத்தில் பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், மகளிர் அணி தேசிய […]

கள்ளச்சாராய சாவுக்குப் போனவர்களும் குடித்து செத்தது எப்படி? அரசு அறிக்கையே காரணமா?

தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கியிருக்கிறது, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள். தமிழக அரசு அலட்சியமாக இந்த விவகாரத்தைக் கையாண்ட காரணத்தாலே மரண எண்ணிக்கை அதிகரித்ததாக கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு அடுத்த கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் அருந்திய சிலர் வயிற்றுவலி, வாந்தி, மயக்கம் என்று மருத்துவமனையில் அட்மிட் ஆனார்கள். மளமளவென மரணங்கள் நிகழத் தொடங்கின. இந்த நிலையில் மாவட்ட கலெக்டராக இருந்த ஷ்ரவன்குமார் இதனை கள்ளச்சாராய மரணம் என்று அறிவிக்காமல், மெத்தனால் குடித்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள். அதனாலே […]

கடலூர் வாக்காளர்களுக்கு சாபம் விட்ட தங்கர் பச்சான்.

முதன்முதலாக தேர்தல் களத்துக்கு வந்து கடலூர் தொகுதியில் தோற்றுப்போனவர் இயக்குனரும் நடிகருமான திடீர் வேட்பாளர் தங்கர் பச்சான். அவர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்ற பெயரில் வேனில் நின்றபடி வாக்காளர்களைத் திட்டித் தீர்த்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் மக்களவைத் தொகுதி பாஜக கூட்டணியில் இருந்த பாமக சார்பில் களமிறக்கப்பட்டவர் இயக்குநர் தங்கர்பச்சான். தேர்தல் பிரச்சாரத்தின் போது, தான் ஜெயிக்கப் போவது உறுதி என்று பேசி வந்த அவர், தேர்தலில் படுதோல்வி அடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் […]

ராகுலுக்கு 54 வயசு. குவிகிறது பிறந்த நாள் வாழ்த்துகள்

பப்பு என்று பிரதமர் மோடியில் இருந்து அத்தனை தலைவர்களும் கேலி செய்துவந்த ராகுல் காந்தி, இன்று இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி இருக்கிறார். ’நாங்கள் விரும்பும் வரையில் தான் மோடி ஆட்சியில் இருக்க முடியும்’ என்று தெறிக்க விடும் ராகுலுக்கு நாடு முழுவதும் இருந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவிகின்றன. ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதற்கு ஒரு தெளிவான சித்தாந்தம் வைத்திருக்கிறார் ராகுல் காந்தி. 30 லட்சம் வேலைகள், ஜாதிவாரி கணக்கெடுப்பு, பெண் முன்னேற்றம், விவசாயிகளுக்கு […]

ராமதாஸ்க்கு மாம்பழம் பஞ்சாயத்து. விக்கிரவாண்டி குழப்பம்

எப்படியாவது மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்றுவிட வேண்டும் என்று ராமதாஸ் மல்லுக்கட்டினாலும் கடந்த தேர்தலில் 4.23 சதவீத வாக்குகளே கிடைத்தன. அதனால், மாநிலக் கட்சி வாய்ப்பு பறிபோய்விட்டது. இதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாம்பழம் சின்னம் கிடைப்பது கேள்விக்குறியாக மாரியுள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி மறைவால் காலியாக உள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிரது. கடந்த 14ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், 21ம் தேதியுடன் […]

60 அரசு கல்லூரிகளில் முதல்வர் இல்லையா..? எப்படி நடக்கும் மாணவர் சேர்க்கை?

மாணவர்களுக்கு ஏராளமான திட்டங்களை அறிமுகப்படுத்தி தினம் தினம் புகைப்படம் போட்டுவரும் தமிழக முதல்வர் ஸ்டாலின், அரசு கல்லூரிகளுக்கு முதல்வர் நியமனத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் கடந்த பல மாதங்களாக காலியாக உள்ளன. அதனால், கல்லூரியின் அன்றாட நிர்வாகமும் மாணவர் சேர்க்கையும் பாதிக்கப்படுகிறது என்று டாக்டர் ராமதாஸ் குரல் கொடுத்திருக்கிறார். இது குறித்து டாக்டர் ராமதாஸ், […]

தமிழகத்தை விட்டு அகதிகளாக வெளியேறும் பரந்தூர் மக்கள்… இது தான் திராவிட மாடலா..?

இந்திய அரசுக்கு சொந்தமாக விமானங்களே இல்லாத நிலையில், பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதில் தி.மு.க. அரசு உறுதியாக இருக்கிறது. பரந்தூர் பகுதியைச் சேர்ந்த அத்தனை உள்ளாட்சி அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த விஷயத்தில் அரசு உறுதியாக இருக்கிறது. எனவே, பரந்தூர் மக்கள் தங்கள் சொந்த இடத்தை விட்டு ஆந்திராவுக்கு அகதியாகச் செல்லும் முடிவு எடுத்திருப்பதாகத் தெரிவது அதிர்ச்சி அளித்துள்ளது. பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வெளியான நாளில் தொடங்கி […]

ராகுல் காந்தி வீட்டில் மூன்று எம்.பி.க்கள். அடுத்து ராபர்ட் வதேராவா?

வாரிசு அரசியலை ஒழித்துக்கட்டுவோம் என்று மோடி முழங்கிக்கொண்டே இருக்கிறார். அவர் சொல்வது சரி என்பதை சுட்டிக் காட்டும் வகையில் ராகுல் காந்தியின் குடும்பத்தில் மூன்றாவது நபராக பிரியங்காவும் எம்.பி. ஆவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுகள் வெளியான 14 நாட்களுக்குள் அவர் ஏதாவது ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும் […]