6 எம்.பி.க்களுக்கு தேர்தல்… திமுக, அதிமுகவில் விஐபிகள் மோதல்

சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அதற்கு முன்பாக ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான ராஜ்யசபா தேர்தல் வரும் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி என்விஎன் சோமு, அதிமுகவின் தம்பிதுரை, தமாகா தலைவர் ஜிகே வாசன் ஆகியோரது பதவிக் காலம் முடிவடைகிறது. இதையடுத்து ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் […]
பிரேமலதா கூட்டணியை முடிவு செய்த ஜக்கி… செம குத்தாட்டம்

கோவை ஈஷா யோகா மையத்தின் சிவராத்திரி விழாவில் முப்படை அதிகாரிகள் கலந்து கொண்டது நாட்டின் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில், பிரேமலதாவின் அரசியல் கூட்டணியை ஜக்கியே முடிவு செய்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஈஷா சிவராத்திரி விழாவில் பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்துகொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அதோடு, முப்படை ராணுவ அதிகாரிகளுக்கு பாரத் பூஷன் […]
இடைக்கால பட்ஜெட்டில் என்ன ஸ்பெஷல்..? திமுக தேர்தலுக்கு கை கொடுக்குமா?

பொதுவாக இடைக்கால பட்ஜெட்டில் பெரிதாக எந்த ஆர்ப்பாட்டமும் இருக்காது. ஆனால், இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் எக்கச்சச்க்க அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. · கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1.31 கோடி மகளிர் பயன்பெற்று வருகின்றனர். சமீபத்தில் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான உரிமைத் தொகை ரூ. 3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 என மொத்தம் ரூ. 5,000 ஒரே தவணையாக மகளிரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. · அரசுப் […]
ஸ்டாலின் காது குத்து விழா… சட்டமன்றத்தில் அதிமுக அதிரடி

நான்கரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்து விழா இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது என்று அதிமுகவினர் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் விழிப்புணர்வு போராட்டம் நடத்தி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்கள் தமிழக சட்டமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட்டை திமுக அரசு தாக்கல் செய்கிறது. இந்நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் இன்று காலை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து சட்டமன்ற வளாகத்துக்கு வெளியே […]
இப்படி சொதப்பிட்டீங்களே ஸ்டாலின். டிஎன்பிஎஸ்சி குளறுபடி

ஹால் டிக்கெட்டில் ஏற்பட்ட குளறுபடிகளால் இன்று நடைபெறவிருந்த குரூப் 2, 2ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. பல ஊர்களில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தவர்கள் பாதியில் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த தேர்வுக்கு தயாராவதற்காக அவர்கள் போட்ட உழைப்பு வீணாகியிருக்கிறது. இன்னொரு முறை தேர்வுக்குத் தயாராக பொருளாதார ரீதியாக, உடலளவில், மனதளவில் நிறைய உழைப்பு தேவைப்படும். பல்லாயிரம் பேரின் நேரம் வீணாகும். எல்லோருடைய ஒரு நாளின் விலையும் ஒன்றல்ல. ஸ்டாலின் அரசின் தவறுக்கு தேர்வர்கள் பாதிக்கப்படுவது அநியாயம் என்று இளைஞர்கள் கொதிக்கிறார்கள். […]
சிறுத்தைகளிடம் கெஞ்சும் திருமா… ராமதாஸ்க்கு பச்சைக் கொடி?

ராமதாஸ் கூட்டணிக்குள் வந்தால் விசிக வெளியேறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீண்டும் மீண்டும் பிரசாரம் செய்துவருவதைக் கண்டு எரிச்சலான திருமாவளவன் இன்று அவரது தொண்டர்களுக்கு அவசரக் கடிதம் எழுதியிருக்கிறார். வன்னியர் சமூக மக்களுக்கு விசிக எதிரானது என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்யாதீங்க என்று கெஞ்சுகிறார். அவரது கடிதத்தில், ‘’தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரசியல்களம் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. ஊடகங்கள் அனலை ஊதி ஆதாரமில்லாத ஊகங்களையெல்லாம் பரபரப்புக்குரிய செய்திகளாக்குவதில் தீவிரம் காட்டிவருகிறது. தேர்தல் குறித்து நமது கட்சி எத்தகைய […]
பிளாக்கில் தவெக விருப்ப மனு விற்பனை..? விஜய் கட்சியில் காமெடி

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் ரசிகர்கள் எண்ணிக்கை வெளிப்படையாகத் தெரியவேண்டும், மிகப்பெரும் கூட்டம் பனையூரில் கூட வேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் கொடுத்த அழைப்பு காரணமாகவே, எக்கச்சக்க ரசிகர்கள் பனையூரில் திரண்டு நின்று அடிதடி சண்டை போட்டு விருப்பமனு வாங்கினார்கள். பனையூரில் தாங்கள் வாங்கிய விருப்பமனுவை பிளாக்கில் சிலர் விற்பனை செய்த விவகாரம் பெரும் பஞ்சாயத்தைக் கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து பேசும் அரசியல் ஆர்வலர்கள், ‘’புஸ்ஸி ஆனந்த் இதிலும் கெத்துக்காட்ட மா.செக்களுக்கு ஆர்டர் போட்டு ஆட்களை வரச்சொல்லி இருக்கார். […]
சித்தியுடன் மல்லுக்கட்டும் டிடிவி தினகரன். கொதிநிலையில் சசிகலா

எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை என்று ஒவ்வொரு கூட்டத்திலும் சர்க்கரையாகப் பேசுகிறார் டிடிவி தினகரன். ஆனால், சித்தி சசிகலாவை சந்தித்த ஒரு நிர்வாகியை கட்சியை விட்டே நீக்கியிருக்கிறார் தினகரன். இதையடுத்து என்னப்பா நடக்குது என்று புரியாமல் முக்குலத்தோர் தடுமாறுகிறார்கள். சித்தி என்று பத்திரிகையாளர்களிடம் பாசமாகப் பேசும் தினகரன், நிஜத்தில் எலியும் பூனையுமாக மோதிக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த ஆண்டு பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி குரு பூஜையில் கலந்து கொள்ள சசிகலா வந்த போது, அங்கிருந்து டிடிவி […]
விஜய்க்கு ஆப்பு வைத்த நீதிமன்றம். இவர் ஊழல் இல்லாத ஆட்சி தருவாரா?

ஊழல் இல்லாத ஆட்சி அமைப்பேன் என்று மேடைக்கு மேடை பேசிவரும் நடிகர் விஜய் மூன்று ஊழல் வழக்குகளில் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. அதாவது 2012ம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார் இறக்குமதியில் நுழைவு வரி ஏய்ப்பு, 2017ம் ஆண்டு ரெய்டில் பணம் பறிமுதல், 2020ம் ஆண்டு புலி பட வருமானத்தில் 15 கோடி ரூபாய் மறைத்ததாக குற்றச்சாட்டு. இந்த நிலையில் இன்று புலி திரைப்படம் குறித்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதாவது, 2015-ம் ஆண்டு வெளியான ‘புலி’ […]
ஜோதிமணிக்கு பயப்படுகிறாரா பிரதமர் மோடி…? வெட்கக்கேடு

பிரதமர் பாதுகாப்பாக வரமுடியாத அளவுக்கு இந்திய நாடாளுமன்றம் இருக்கிறது என்று பாஜகவினரே பதறுவதைப் பார்க்கையில், நாட்டு மக்களுக்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழுகிறது. அதேநேரம், நம்மூர் ஜோதிமணியைப் பார்த்து பிரதமர் அஞ்சுகிறார் என்றால், அவருக்கும் பாஜகவுக்கும் இம்புட்டுத்தான் வலிமையா என்ற கேள்வி எழுகிறது. இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘’போட்டியிடும் இடங்களில் எல்லாம் தொடர் தோல்வியைச் சந்தித்ததன் விளைவாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, பாராளுமன்றத்திற்குள் அதற்குப் பழி தீர்க்க முயன்ற […]

