News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அமித் ஷா வேட்டை ஆரம்பம்…. ஓபிஎஸ் வெயிட்டிங்… இபிஎஸ் எஸ்கேப்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 4ம் தேதி புதுக்கோட்டைக்கு வருவதை ஓ.பன்னீர்செல்வம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறார். அதேநேரம், இபிஎஸ் கூட்டணி பேச்சுவார்த்தையை பொங்கலுக்குப் பிறகே தொடர நினைக்கிறார். எனவே, அமித் ஷா பயணம் பயன் தருவது உறுதியில்லை என்றே தெரிகிறது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தி வரும், “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” என்ற யாத்திரைக்கு புதுக்கோட்டையில் நடைபெறும் நிறைவு விழாவில் அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் சுமார் […]

கூட்டணிக்கு மாணிக்கம் தாகூர் வேட்டு. திமுக ரெட் நோட்டீஸ்..?

பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம் சிறப்பாக உள்ளது. திமுக ஆளும் தமிழ்நாடு மோசமாக உள்ளது என்று சொன்ன காங்கிரஸ் பிரவீன் சக்கரவத்திக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைக் கண்டித்த மாணிக்கம் தாகூரை திமுக ரெட் மார்க் செய்துள்ளது. விஜய் கூட்டணிக்காக திமுக கூட்டணியை உடைக்கப் பார்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. பிரவீன் சக்கரவர்த்திக்கு ஆதரவாக மாணிக்கம் தாகூர், ‘’காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது? […]

பொங்கலுக்கு ஸ்டாலின் அல்வா…? எக்கச்சக்க எதிர்பார்ப்பில் தமிழக மக்கள்

இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வருவதால் தைப் பொங்கலுக்கு கண்டிப்பாக ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. இதற்கிடையில், பொங்கல் பரிசை 5 ஆயிரமாகத் தர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழகம் முழுக்க போஸ்டர் ஒட்டி கேட்கத் தொடங்கியும் இருக்கிறார்கள். இந்நிலையில் ரொக்கப்பரிசு பற்றிய தகவல் இல்லாமல் பொங்கல் தொகுப்பு மட்டும் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக அரிசி, சர்க்கரை, முழு […]

தைப் பொங்கலுக்கு 5 ஆயிரம் ரூபாய்..? அதிமுக போஸ்டர் அதிரடி

அதிமுக ஆட்சியில் இருந்தபோது டாஸ்மாக் மூட வேண்டும் என்று ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். அதேபோன்று எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, ‘தைப் பொங்கலுக்கு அரசு 5 ஆயிரம் ரூபாய் தரவேண்டும்’ என்று போர்க்கொடி எழுப்பினார். இப்போது ஆட்சியில் இருக்கும் நிலையில்,  திமுக அரசு பொங்கல் பரிசு பணம் கொடுப்பது குறித்து இன்னமும் வாய் திறக்கவே இல்லை. கப்சிப் என்று அமைதியாக இருக்கிறது. ஸ்டாலின் வைத்த வேண்டுகோளை இப்போது அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவரது […]

ஒரே நாளில் வெட்டுப்பட்டவர் டிஸ்சார்ஜ்… இது திராவிட மாடலா ஸ்டாலின்..?

திருத்தணி ரயில்வே ஸ்டேஷனில் காட்டுத்தனமாக வெட்டுப்பட்ட வடமாநில இளைஞர் சிராஜ் ஒரே நாள்ல டிஸ்சார்ஜ் ஆகி சொந்த ஊருக்கு அனுப்பப்பட்ட விவகாரம் தமிழகம் முழுக்க அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக அரசின் சிகிச்சை மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டாரா அல்லது போலீஸ் தரப்பில் அழுத்தம் கொடுத்து அனுப்பப்பட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அதிமுகவினர், ‘’திருத்தணியில் 17 வயது கஞ்சா போதைச் சிறார்களால் கொடூரமாக தாக்கப்பட்ட வடமாநில இளைஞர் சூரஜ், சிகிச்சை முடிந்து சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாக திமுக […]

பெருகும் ரீல்ஸ் ரவுடிகள்… போதை அரசு என்ன செய்யவேண்டும்..?

கையில் அரிவாள், கத்தியைத் தூக்குவதற்கே சிறுவர்கள் அச்சப்பட்ட காலம் போயே விட்டது. பிறந்த நாள் கேக் வெட்டுவதற்கே பட்டாக்கத்தியைக் கையில் எடுக்கிறார்கள். இப்போது 18 வயதை கூட ஆகாத டிபன் பாக்ஸ் ஹேர் கட்டிங் புள்ளீங்கோ எல்லாம் பைக்கில் ட்ரிபிள்ஸ் செல்கின்றன. ஹெல்மெட் போடுவதில்லை. பொதுமக்களை அச்சுறுத்தும்படி அதீத ஹாரன் ஒலி எழுப்பி வேகமாக வண்டி ஓட்டுகின்றன. இந்த மைனர் குஞ்சுகள்தான் கும்பலாக சேர்ந்து ரயில் போன்ற பொதுப்போக்குவரத்து வாகனங்களில் அரிவாள்களை தூக்கி வெட்டும் அளவுக்கு வளர்ந்து […]

சம ஊதியம் வாக்குறுதியை மறக்கலாமா ஸ்டாலின்..? மூன்றாவது நாளாக ஆசிரியர் போராட்டம்

ஊதிய முரண்பாடுகளைக் களைந்து சம ஊதியம் வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் நடத்திவரும் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் நீடித்தது.  இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அடக்குமுறையில் கைது செய்ததை அடுத்து பெரும் பரபரப்பு நிலவியது. ஏன் இந்த போராட்டம் சமவேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் மூன்றாவது நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இடைநிலை ஆசிரியர்கள். அதாவது 2009 மே 31-க்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 11,700 ரூபாய் ஊதியம் பெற்று வந்தனர். […]

சோழிங்கநல்லூர் தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன்..? இபிஎஸ் சூசக அறிவிப்பு

நேற்றைய தினம் சோழிங்கநல்லூரில் நடைபெற்ற எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார். அதோடு அவர் இபிஎஸ்க்கு தங்க முலாம் பூசப்பட செங்கோல் வழங்கினார். இதையடுத்து இந்த தொகுதியில் தமிழிசை நிற்பதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் இபிஎஸ் கடந்த 5 கட்டங்களில் 175 தொகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். ஆறாவது கட்டமாக நேற்று திருப்போரூர் மற்றும் சோழிங்கநல்லூர் தொகுதிகளில் எழுச்சியுரை […]

காங்கிரஸ் கட்சியை உடைக்குமா திமுக..? கூட்டணி ஆட்சி கோஷம்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு அவசியம் என்ற கிரிஷ் சோடங்கரின் கருத்து தமிழ்நாடு காங்கிரஸின் கருத்து தான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ள விவகாரம் திமுகவினரை கோபமூட்டியுள்ளது. கடந்த 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 25 இடங்களில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தோற்றூப்போன 7 தொகுதிகளிலும் காங்கிரசை அதிமுக வெற்றி வென்றது. ஆகவே, இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு 20 சீட் கொடுத்தால் போதும் என்று திமுக […]

பெரியாருக்கும் சீமானுக்கும்தான் போட்டி…! திருமாவுக்கும் அட்டாக்

வரும் 2026 தேர்தலில் விஜய்க்கும் ஸ்டாலினுக்கும்தான் போட்டி என்பது போன்று ஒவ்வொரு மேடையிலும் பேசிவருகிறார் நடிகர் விஜய். அதே பாணியில் இப்போது பெரியாருக்கும் சீமானுக்கும் போட்டி என்று நாம் தமிழர் பொதுக்குழுவில் பேசியது பரபரப்பாகியுள்ளது. சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய  சீமான், ‘’எங்களுக்குத் தேவை இலவசப் பேருந்து பயணம் அல்ல… உலகத் தரமான இலவசக் கல்வி! சாராயம் விற்பது அரசு வேலையா? ஆடு மாடு மேய்த்து பால் விற்பது அரசு […]