News

ஸ்டாலினுக்கு 5 வியூக வகுப்பாளர்கள்..? குழப்பத்தில் அமைச்சர்கள்.

Follow Us

மகா கும்பமேளாவில் சிதறிய உடல்கள்… நீராடப் போகாதீங்க

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா இம்மாதம் ஜனவரி 13ம் தேதி தொடங்கியது. மொத்தம் 45 நாட்கள் நடக்கும் இந்த கும்பமேளாவின் போது பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் அமைப்பின் கும்பமேளாவுக்கான நீராடும் தேதிகள் மற்றும் நல்ல நேரங்கள் ஜோதிடர்களால் தீர்மானிக்கப்படுகின்றன. அதன்படி, நடப்பு கும்பமேளாவில் புனித நீராட 6 நாட்கள் மிகவும் புனிதமானவை என்றாலும் ஜனவரி 29 மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. இன்றைய தினம் சுமார் […]

அல்லக்கை காளியம்மாள்… சீமான் திரும்பவும் கடிச்சிட்டாரு.

நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமாக அறியப்பட்ட காளியம்மாளை, பிசிறு என்றும் அவரை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் சீமான் பேசியதாக ஓர் ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவை உட்கட்சி விவகாரம் என்று சொன்னாரே தவிர, பொய்யான ஆடியோ என்று மறுக்கவில்லை. அதன் பிறகு சீமானும் காளியம்மாளும் பல இடங்களில் சந்தித்துக்கொண்டாலும் இன்னமும் அவர்கள் உறவு சீராகவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அதோடு, பிரபாகரனை சில நிமிடங்கள் மட்டுமே சந்தித்தார் சீமான் என்று சீமானை மேடையில் […]

அடேங்கப்பா…. பா.ஜ.க. மலைக்க வைக்கும் வசூல் வேட்டை

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய அமைப்புகளைக் கொண்டு பெரும் புள்ளிகளை மிரட்டுவதாக எதிர்க் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் பா.ஜ.க.வுக்கு தேர்தல் பத்திரம் மூலம் ஒரே ஆண்டில் கூடுதலாக 1,800 கோடிக்கும் அதிகமாக கிடைத்திருக்கும் செய்தி அதிர வைக்கிறது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில்,, ஆளும் பா.ஜ.க.வுக்கு தன்னார்வ பங்களிப்புகள் 2022-2023 ஆண்டில் ரூ.2,120.06 கோடியிலிருந்து 2023-2024 ஆண்டில் ரூ.3,967.14 கோடியாக அதிகரித்துள்ளதாகக் காட்டுகிறது. இதில், […]

முழு சங்கியா ஸ்டாலின்..? முருகன் சிலைக்கு கடும் எதிர்ப்பு

ராமர் கோயிலைக் கட்டி அதையே தேர்தல் பிரசாரத்துக்கு பிரதமர் மோடி பயன்படுத்தியதை கடுமையாக விமர்சனம் செய்தார் ஸ்டாலின். இப்போது கோவை மருதமலையில் 160 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்க அரசு முடிவு செய்திருப்பதாக வந்திருக்கும் செய்தி திராவிட சிந்தனையாளர்களை கொதிக்க வைத்திருக்கிறது. கோவை மருதமலை முருகன் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட பிறகு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், ‘’திமுக ஆட்சியில் இதுவரை 2,400 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. முதல்கட்டமாக 7 முருகன் கோயில்கள் பெருந்திட்ட […]

எம்.ஜி.ஆர். சவுக்குடன் விஜய் ஆணையிட்டால்..? இன்று நிர்வாகிகள் சந்திப்பு கேன்சல்

  ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் ஏழைகள் வேதனைப்பட மாட்டார்’ என்று எம்.ஜி.ஆர். பாடிய ஸ்டைலில் விஜய் அடுத்த படமான, ‘ஜன நாயகன்’ அறிவிப்பு வெளியானது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இந்நிலையில், இன்று நடப்பதாக இருந்த நிர்வாகிகள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அரசியல் கட்சி தொடங்கிய விஜய் தன்னுடைய 69 ஆவது திரைப்படம் தான் கடைசி திரைப்படம் என்பதை அறிவித்து விட்டார். ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்துக்கு ‘ஜனநாயகன்’ என தலைப்பு வைத்ததுடன் […]

கஜானா காலியா ஸ்டாலின்..? தனியாருக்குப் போகும் காலை சத்துணவு

காலையில் மாணவர்கள் சாப்பிடாமல் வருவதால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது என்று காலை நேர சத்துணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தார் முதல்வர் ஸ்டாலின். இதையொட்டி ஸ்டாலினுக்கு ஏகப்பட்ட பாராட்டு விழாக்கள் நடத்தப்பட்டன. ஆனால், இப்போது பள்ளியில் இதனை நடத்துவதற்கு செலவழிக்க முடியாமல் தனியார் வசம் ஒப்படைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. இது குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், ‘’சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களுக்கு பரிமாறப்படும் காலை உணவை தயாரித்து வழங்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி […]

தமிழகத்தில் சாலை விபத்து மரணம் மளமள குறைவு… செல்போன் பேசிய 4.20 லட்சம் பேர் மீது வழக்கு… சங்கர் ஜிவால் ஆக்ஷன் ரிப்போர்ட்

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2024ம் ஆண்டு சாலை விபத்து மரணங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. திட்டமிட்டு செயலாற்றி வருவதால், வரும் ஆண்டுகளில் விபத்துகள் இல்லாத தமிழகம் என்ற இலக்கை நோக்கி நகர்வதாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உறுதி அளித்திருக்கிறார். இதுதொடர்பாக டி.ஜி.பி சங்கர் ஜிவால் விடுத்திருக்கும் அறிக்கையில், “மக்கள் தொகை அதிகரிப்பு, வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற சவால்கள் தொடர்ந்து இருந்தாலும் தமிழகம் முழுவதும் விபத்துகளை குறைப்பதற்காக பல்வேறு ஆக்கபூர்வ நடவக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. […]

ஸ்டாலினுக்கும் ஷகிலாவுக்கும் நன்றி. எல்லை மீறும் டங்க்ஸ்டன் நையாண்டி

டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ததற்கு அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் இன்று ஸ்டாலினுக்கு மதுரையில் விழா நடக்கிறது. இதில் பங்கேற்கச் செல்லும் ஸ்டாலினுக்கு கடுமையான கண்டனங்களை பா.ஜ.க.வினர் செய்துவருவதும் கிண்டலாகவும் பதவு போடுகிறார்கள். அரிட்டாபட்டி டங்ஸ்டன் விவகாரத்தில் சுரங்கத்தை ரத்து செய்த ஷகிலாவுக்கு நன்றி என்று போஸ்ட் போட்டு, ஷகிலா என்ன செஞ்சாங்க? எதுக்கு நன்றி என்று கேட்டால், ‘ஸ்டாலின் மட்டும் என்ன செஞ்சாரு? அவருக்கு நன்றி சொல்வீங்க, ஷகிலாவுக்குச் சொல்ல மாட்டீங்களா?’ என்று கேட்கிறார்கள். இதையொட்டி பா.ஜ.க. […]

சீமானின் பிக்காலிப்பயல் விமர்சனம்… அடுத்து பிரபாகரனை என்ன சொல்வார்..?

முன்பு பெரியாரை தங்கள் வழிகாட்டி என்று பெருமைப்படுத்திய சீமான் இப்போது பெரியாரை கடுமையாக அவமதித்து வருகிறார். இந்த விவகாரத்தில் சீமானுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வெளியாகின. பிரபாகரன் உறவினரை சீமான் விமர்சனம் செய்தது வைரலாகிவருகிறது. பெரியார் எதிர்ப்பு நிலையைச் சீமான் எடுத்த பிறகு கடும் விமர்சனத்துக்கு ஆளானார். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தது தான் தான் என இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கூறியது கடும் சர்ச்சையை உருவாக்கியது. அதேநேரம், […]

வேங்கைவயல் டீட்டெய்ல்டு போலீஸ் ரிப்போர்ட். கூட்டணியை உடைப்பாரா திருமா..?

வேங்கைவயல் வழக்கு சவால் நிறைந்தது. கத்தி மீது நடப்பது போன்று காவல் துறை கையாண்டதாகச் சொல்கிறார்கள். ஏனென்றால், ரத்த மாதிரி தராதது, டிஎன்ஏ டெஸ்ட்களுக்கு ஒத்துழைக்காமை மற்றும் உள்ளுர் ஊர் கட்டுக்கோப்பு ஊர் கட்டுப்பாடு என எக்கச்சக்க கட்டுப்பாடுகளைத் தாண்டி காவல் துறை குற்றவாளிகளை அடையாளம் காட்டியிருக்கிறது. இதற்காக 87 செல்போன் டவர்களுக்கு உட்பட்ட 1லட்சத்துக்கும் மேற்பட்ட செல்போன் அழைப்புகளை ஆராய்ந்து, 293 சாட்சிகளிடம் விசாரித்து, இதில் சந்தேகத்திற்குரிய மூன்று நபர்களின் மொபைல்களில் இருந்து அழிக்கப்பட்ட புகைப்படங்கள் […]