News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

லியோ’ இசை வெளியீட்டு விழா ரத்து! முக்கிய பின்னணி!

நடிகர் விஜய்யின் ‘லியோ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு இவ்விழா செப்.30ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய்தத், கவுதம்வாசுதேவ் […]

ரஜினிகாந்த் -ராகவா லாரன்ஸ் திடீர் சந்திப்பு! முக்கிய பின்னணி!

சந்திரமுகி-2 படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ஆஸ்தான குருவான நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். நாளை மறுநாள் (செப்.28) சந்திரமுகி-2 வெளியாக உள்ளது. பி.வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், மகிமா நம்பியார், வடிவேலு, ராதிகா, லட்சுமி மேனன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இது பி.வாசுவின் 65வது படமாகும். இத்திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். கடந்த 2005ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் […]

அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு முக்கிய எச்சரிக்கை! பின்னணி தகவல்கள்!!

அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி முறிவைத் தொடர்ந்து முதல் முறையாக அ.தி.மு.க. தலைமை அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று (செப்.25) மாலை 3.45 மணிக்கு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதன்படி கூட்டத்தில் தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி நடத்தப்பட்ட கூட்டத்தில் […]

அ.தி.மு.க.& பா.ஜ.க. கூட்டணி முறிவு! அமைச்சர் துரைமுருகன் என்ன சொன்னார் தெரியுமா?

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் இன்று நிருபர்களிடம் காவிரி விவகாரம் குறித்தும் பா.ஜ.க.& அ.தி.மு.க. கூட்டணி முறிவு குறித்தும் பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். சென்னையில் இன்று நிருபர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ‘‘உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டமும், ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடத்த ஆரம்பித்தால் உச்சநீதிமன்றத்தில் தனி அதிகாரம் என்னவாகும் என்பதை கர்நாடக அரசு சிந்திக்க வேண்டும். அதேபோல் இந்த விவகாரத்தை எப்படி கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும் […]

பெங்களூருவில் 144 தடை உத்தரவு! விஸ்வரூபம் எடுக்கும் காவிரி விவகாரம்!

பெங்களூருவில் இன்று முழு அடைப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அசம்பாவிதங்களை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு& கர்நாடகம் இடையே பலத்த மோதல் நிலவி வருகிறது. தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கடந்த 18ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை கண்டுகொள்ளாத கர்நாடக அரசு, தங்களிடம் […]

நான் உண்மையாகவே ஜெயலலிதாவின் மகள்! யார் இந்த ஜெயலட்சுமி!

மறைந்த ஜெயலலிதா எனது அம்மா என்று ஜெயலட்சுமி என்ற பெண் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதோடு புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளேன் என்று பகிரங்கமாக தெரிவித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. மறைந்த அ.தி.மு.க.முதல்வர் ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் தன்னை செல்வி.ஜெயலலிதா என்றே அடையாளப்படுத்திக் கொண்டார். இருப்பினும் தமிழக மக்களால் அன்புடன் அம்மா என்று அழைக்கப்பட்டார். திரைத்துறையைத் தாண்டி தனி ஒரு பெண்ணாக அ.தி.மு.க.வை கட்டுக்கோப்புடன் கண் அசைவில் கட்டிவைத்திருந்த பெருமை என்றென்றுமே ஜெயலலிதாவையே சாரும். […]

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி தொடருமா? இன்று முக்கிய முடிவு எடுக்கும் எடப்பாடி!

பா.ஜ.க.வுடனான கூட்டணி தொடருமா? என்பது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தி முடிவுகளை அறிவிக்க உள்ளார். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து மறைந்த தலைவர்களான அண்ணாதுரை, ஜெயலலிதா உள்ளிட்டோர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர்ராஜூ உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து தக்க பதிலடி கொடுத்தனர். இதில் ஜெயக்குமார் மட்டும் கொதித்தெழுந்து இனி […]

மறைந்த ராமஜெயத்தின் 62வது பிறந்தநாள் இன்று! கொலை வழக்கு கடந்து வந்த பாதை!

தமிழகத்தையே உலுக்கிய அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்தின் பிறந்தநாள் இன்று. அவரது மர்ம கொலை குறித்தும் எந்த முன்னேற்றமும் இல்லாத ராமஜெயத்தின் கொலை வழக்கு கடந்த வந்த பாதை குறித்தும் இந்த சிறப்பு தொகுப்பில் பார்க்கலாம். கடந்த 2012ம் ஆண்டு திமுக முதன்மைச்செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டார். நடைபயிற்சி மேற்கொண்டிருந்த காலை நேரத்தில் ராமஜெயம் படுகொலை செய்யப்பட்ட  நிலையில், அவரது உடல் திருவளர்சோலை அருகே கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை […]

சபாநாயகர் அப்பாவு – அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு! பின்னணி தகவல்கள்!

துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாபுவிடம் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை மனு அளித்தனர். வருகிற அக்டோபர் மாதம் 9ம் தேதி சட்டசமன்ற கூட உள்ளது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எல்.ஏ.க்கள் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. மேலும் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை வழங்கப்பட வேண்டும் என்று […]

திருப்பதி பிரம்மோற்சவம்! கருட சேவையில் சமர்ப்பிக்கப்பட்ட திருக்குடைகள்!

திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 9 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு பல்வேறு அலங்கார, ஆராதனைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இதனை காண ஒவ்வொரு நாளும் திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் கருட சேவையின் போது உற்சவமூர்த்திகளுக்கு அலங்காரம் செய்ய சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற குடைகள் சமர்ப்பிக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவத்தின் போது சென்னையில் இருந்து புறப்படும் குடைகள் கருட […]