News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

2028 ஒலிம்பிக் தொடரில் இணைந்த கிரிக்கெட்! ரசிகர்கள் உற்சாகம்!

2028ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டி என்றால் அது ஒலிம்பிக்தான். இப்போட்டித் தொடரில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்பது பல ஆண்டு கோரிக்கையாகவே இருந்து வந்தது. ஆனால் 1900ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டித் தொடர் ஒன்றில் மட்டுமே கிரிக்கெட் இடம்பெற்றிருந்தது. அதன் பிறகு கிரிக்கெட் போட்டியை ஒலிம்பிக்கில் இருந்து நீக்கிவிட்ட நிலையில் கிட்டத்தட்ட123 ஆண்டுகள் கழித்து தற்போது கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. […]

சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்கள் மாற்றம்! டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அதிரடி!

சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்களை தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் இடமாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த வாரத்தில் தமிழகத்தில் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகளும், 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து இன்று தமிழக டி.ஜி.பி.சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி 12 காவல் உதவி ஆணையர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 1.வேப்பேரி காவல் உதவி ஆணையராக பணியாற்றி வந்த கண்ணன், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் […]

ஆசிய விளையாட்டு போட்டி: தமிழக வீரர்களுக்கு ரூ.9.40 கோடி ஊக்கத்தொகை!

  ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.9.40 கோடி ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.   சென்னையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டனர்.   சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை வாங்கி குவித்து […]

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் மாற்றம்! தமிழக அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு நேற்று ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்றம் செய்த நிலையில் இன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்துள்ளது. இதற்கான உத்தரவை தலைமை செயலாளர்  சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ளார். அதன்படி சுற்றுலாத்துறை மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வந்த சந்தீப் நந்தூரி தற்போது தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். வணிக வரி முதன்மை செயலாளர் தீரஜ்குமார் தற்போது தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் […]

அமித்ஷா- சந்திரபாபு நாயுடு மகன் திடீர் சந்திப்பு! முக்கிய பின்னணி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் திடீரென்று சந்தித்து பேசியுள்ளார். ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கும் மேல் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு தற்போது ராஜமஹேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தெலுங்கு தேசம் கட்சியின் […]

16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் திடீர் மாற்றம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மொத்தம் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   1. சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த கே.வன்னியபெருமாள் ஐ.பி.எஸ்., சிவில்பாதுகாப்பு மற்றும் ஊர்காவல் படை கமாண்டன்ட்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   2.காவல் பயிற்சி கல்லூரியின் ஐ.ஜி.யாக பணியாற்றிவந்த ஆர்.தமிழ்சந்திரன் ஐ.பி.எஸ்., சீருடை பணியாளர் தேர்வாணையத்துடைய உறுப்பினர் செயலாளர் ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   3. சீருடை பணியாளர் தேர்வாணையத்துடைய ஐ.ஜி.யாக இருந்த […]

செந்தில் பாலாஜி ஜாமீன்? அமலாக்கத்துறை பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடுத்த ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அந்தவேளையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு செந்தில் பாலாஜிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை […]

‘லியோ’ சிறப்புக்காட்சிக்கு தமிழக அரசு அனுமதி! ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இம்மாதம் 19ம் தேதி உலகளவில் வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்தான போது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதைத்தொடர்ந்து டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் லியோ திரைப்படத்திற்கான சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்குமாறு படக்குழு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தது. அதை ஏற்றுக் […]

முதலமைச்சர் ஏமாற்றம் அளித்துவிட்டார்! டி.டி.வி. தினகரன் வேதனை!

பல ஆண்டுகளாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பான தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்தவித உத்தரவாதமும் அளிக்காதது ஏமாற்றத்தை தருவதாக அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாளையொட்டி 20 இஸ்லாமியர்கள் உட்பட 49 ஆயுள் தண்டனை சிறைவாசிகளை நல்லெண்ண அடிப்படையில் முன்விடுதலை […]

பேரவையில் இருந்து எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு! முக்கிய பின்னணி!

தமிழக சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டத்தொடரில் இருந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க.பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தார்.   தமிழக சட்டப்பேரவை இன்று 3வது நாளாக கூடியது. அப்போது கேள்வி, பதில் நேரத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.   அப்போது அவர் பேசும்போது, ‘‘துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தை மரபை மாற்ற வேண்டாம். ஏற்கனவே இது […]