C.S.K. ரசிகர்களுக்கு குட்நியூஸ் சொன்ன எம்.எஸ்.தோனி!

2024ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி விளையாட உள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனியை பிடிக்காத நபர்களே இருக்க முடியாது என்று கூறலாம். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இந்நிலையில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் […]
அவதூறு பேச்சு! பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணைம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அங்கு காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பரப்புரையாற்றினார். அதன் கடந்த 20ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடி தேவ்நாராயண் கோவிலுக்கு சென்ற போது நன்கொடை […]
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர்! எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மனு!

எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனுதாக்கல செய்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டு பின்னர் ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி வகித்தார். சண்டை, சமாதான பேச்சுவார்த்தை என பல்வேறு கட்டங்களை தொடர்ந்து முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும் பொறுப்பு வகித்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 66 இடங்களை கைப்பற்றிய […]
பாரா ஆசிய விளையாட்டு போட்டி! பதக்கங்களை குவிக்கும் இந்தியா!

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா பதக்கங்களை குவித்து வரும் நிலையில் மேலும் 2 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான 4வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று 5வது நாள் போட்டியில் இந்தியா பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகிறது. அதன்படி பாரா ஆசிய விளையாட்டு போட்டித் தொடரில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன. பெண்கள் காம்பவுண்ட் ஓபன் வில்வித்தை மற்றும் ஆண்கள் 1,500 மீட்டர் […]
இஸ்ரேல்- ஹமாஸ் போர்! 8 ஆயிரத்தை கடந்த பலி!

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரால் இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி போருக்கு பிள்ளையார் சுழிபோட்டு தொடங்கி வைத்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவமும் போர் நிலையை அறிவித்து தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. அதன்படி காசாவில் மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகள் என அனைத்து இடங்களில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி […]
பா.ஜ.க. நிர்வாகி அமர்பிரசாத் மேலும் 2 வழக்குகளில் கைது!

கொடிக்கம்பம் அகற்றப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பாக கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. கொடிக்கம்பம் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து சில தினங்களுக்கு முன்பு அக்கொடிக்கம்பம் போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது. இதற்கு பா.ஜ.க.வினர் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஜே.சி.பி. வாகனத்தை […]
மருது பாண்டியர்களின் நினைவுநாள்! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

மருது பாண்டியர்களின் நினைவுநாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மருதுபாண்டியர்களின் 222வது நினைவுநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று சிவகங்கை மாவட்டம் சிவகங்கை, திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, தேவகோட்டை ஆகிய பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் இது குறித்து கூறும்போது, ‘‘சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் மருது பாண்டியர்களின் நினைவுநாள் விழா மற்றும் […]
நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம்! தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு வருகிற நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் முகாம் நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிக்கையில் கூறியுள்ளார். தலைமை தேர்தல் அதிகாரி சத்யரபிரதா சாகு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘தமிழகம் முழுவதும் நாளை (அக்.27) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. இதில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக உரிய விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு தேர்தல்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வருகிற டிசம்பர் 9ம் தேதி […]
இந்த 3 நாட்களில் பேருந்துகள் இயங்குமா? முக்கிய தகவல்கள்!

தீபாவளிக்கு 20 சதவீத போனஸ் கேட்டு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 3 நாட்கள் காத்திருப்பு போராட்ட அறிவிப்பால் போக்குவரத்து சேவை முடங்கும் அபாயத்தால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். கடந்த கொரோனா காலமான 2020ம் ஆண்டு 10 சதவீதம் மட்டுமே போனஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் சி.ஐ.டி.யு.சி. சார்பில், […]
பெட்ரோல் குண்டுவீச்சுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் சம்பந்தம் இல்லை! – அமைச்சர் ரகுபதி!

பெட்ரோல் குண்டுவீச்சுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், பெட்ரோல் குண்டு வீச வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு கிடையாது என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி காட்டமாக தெரிவித்துள்ளார். நேற்று (அக்.25) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட பிரபல ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையில் கருக்கா வினோத்திடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்தும் போலீசார் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, […]

