News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இஸ்ரேல்- ஹமாஸ் போர்! இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கான உடல்கள்!

உச்சத்தை எட்டியுள்ள இஸ்ரேல் -ஹமாஸ் போர் எதிரொலியாக காஸாவின் இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கான உடல்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் (அக்டோபர்) 7ம் தேதி ஆரம்பமான இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினருக்கு இடையேயான போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். வான்வழி தாக்குதல், தரைவழி தாக்குதல் என இஸ்ரேல் ராணுவம், காஸாவை தரைமட்டமாக்கிவிட்டது. இதுவரையில் 8,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக ஐ.நா. அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் உருகுலைந்து போயுள்ள காஸாவில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு […]

ஆளுநர் ஆர்.என்.ரவி மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு! தமிழக அரசு அதிரடி!

தமிழக அரசு கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதால், உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது. தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் என்னவென்றே தெரியவில்லை ஆரம்பத்தில் இருந்தே ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. அந்த வகையில் துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளிட்ட 13 மசோதாக்கள் இன்றளவும் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. மசோதாக்கள் குறித்த எந்த  நகர்வையும் ஆளுநர் மேற்கொள்ள […]

நீங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவரா? மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சமீப காலமாக அதிகரித்து வரும் இளம் வயதினரின் மாரடைப்புக்கு காரணம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதுதான் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த 2020ம் ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பரவி பல லட்சம் உயிர்களை பலி கொண்டது. இருப்பினும் பலர் நோய் தொற்றில் இருந்து மீண்டு இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.     […]

சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை! தெலுங்கானாவில் பரபரப்பு!

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என்று தெலுங்கு தேசம் கட்சியினர் பின் வாங்கி இருப்பது கட்சியினர் மற்றும் தோழமை கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன்கல்யாண், சந்திரபாபு நாயுடுவுடன் இணைவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.   இந்த சமயத்தில் தான் […]

கேரள ஜெபக்கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு! பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

கேரளாவில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்த கோர சம்பவத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் ஜம்ரா என்ற சர்வதேச மாநாட்டு மையத்தில் ‘யெகோவாவின் சாட்சிகள்’ என்ற கிறிஸ்தவ சபையினரின் 3 நாள் ஜெபக்கூட்டம் கடந்த 27ம் தேதி தொடங்கி நேற்று கடைசிநாள் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. காலை 9.45 மணியளவில் தொடங்கிய இந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொள்வதற்காக எர்ணாகுளம், ஆலுவா, அங்கமாலி, […]

ஆந்திரா ரெயில் விபத்து! பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

ஆந்திராவில் நின்று கொண்டிருந்த ரெயில் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதிய விபத்தில் பலியான பயணிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்ட கண்டகப்பள்ளி ரெயில் நிலையத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று (அக்.29) ராயகடா நோக்கி சென்ற பாசஞ்சர் ரெயில் கேபிள் பிரச்சினை காரணமாக இயக்கப்படாமல் நின்று கொண்டிருந்தது. அப்போது ரெயில்வே  ஊழியர்கள் பிரச்சினையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த வழியாக […]

மதுரையில் மேம்பால கட்டுமான பணிகள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

  மதுரையில் கோரிப்பாளையம் மற்றும் அப்போலோ சந்திப்பு ஆகிய இடங்களில் உயர்மட்ட மேம்பால கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.   பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி விழா இன்று (அக்.30) கொண்டாடப்படுவதை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை சென்றுள்ளார். அங்கு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் முழு உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் சிலைக்கு கீழ் வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்துமராமலிங்கத் தேவரின் […]

மரணதண்டடைனயில் இருந்து முன்னாள் வீரர்களை காப்பாற்றுவோம்! பா.ஜ.க. உறுதி!

கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்திய கடற்படை முன்னாள் வீரர்களையும் காப்பாற்றுவோம் என்று பா.ஜ.க. உறுதி அளித்துள்ளது. கத்தார் நாட்டில், அல் தஹ்ரா என்ற நிறுவனத்தில் இந்திய கடற்பனை முன்னாள் வீரர்கள் 8 பேர் பணியாற்றி வந்தனர். இவர்கள் 8 பேரையும் கடந்த 2022ம் ஆண்டு கத்தார் நாட்டின் ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததாக குற்றம்சாட்டி கைது செய்தனர். மேலும் அந்நாட்டு நீதிமன்றம் 8 பேருக்கும் நேற்று முன்தினம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. […]

ஆளுநரை சந்தித்த பா.ஜ.க. மேலிடக் குழு! என்ன பேசினார்கள் தெரியுமா?

ஆளுநர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க. மேலிடக்குழுவினர் இன்று சந்தித்த போது பல்வேறு குற்றச்சாட்டுகளும் வேண்டுகோள்களும் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் பா.ஜ.க.வினர் தொடர்ந்து பழிவாங்கப்பட்டு வருவதாக தி.மு.க.வினர் மீது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. அண்மையில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பனையூர் வீட்டு முன்பாக பா.ஜ.க. கட்சிக் கொடி அகற்றப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 7 பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.க.வுக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் தாக்குதல் குறித்து […]

கேரளாவில் பெண் பத்திரிகையாளரிடம் அத்துமீறல்! முன்னாள் பா.ஜ.க. எம்.பி. மீது வழக்கு!

கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளரின் தோள் மீது கை போட்டு இழுத்து அநாகரீகமாக நடந்து கொண்ட நடிகரும், பா.ஜ.க. முன்னாள் எம்.பி. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று (அக்.27) பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யும் நடிகருமான சுரேஷ்கோபி பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு அருகில் நின்று கொண்டிருந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் சுரேஷ்கோபியிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார். அப்போது அந்த பெண் பத்திரிகையாளரின் தோளை […]