Share via:

திமுக இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததே இல்லை என்ற சரித்திரத்தை
மாற்றி எழுதவேண்டும் என்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார். மாணவர்கள்,
பெண்கள் ஆகியோருக்கு புதுப்புது திட்டம் போட்டுவரும் நேரத்தில், மகளிர் சுய உதவிக்
குழுக்களை தேர்தலுக்குப் பயன்படுத்தும் வகையில் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இப்போது. சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இருக்கும் ஒருவருக்கு
அதிகபட்சமாக ரூ. 1.25 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆண்டு
வட்டி விகிதம் மொத்தமாக 6 சதவீதம். இந்த கடன்களை திரும்ப செலுத்துவதற்கு இரண்டரை ஆண்டுகள்
காலக்கெடுவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கடனை பெறுவதற்கு சில நிபந்தனைகள் உள்ளது. அதன்படி சுய உதவிக்குழு
துவங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். அத்துடன் அதிகபட்சமாக 20 உறுப்பினர்கள்
மட்டும் குழுவில் இருக்க வேண்டும். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்
கழகம் சார்பாக வழங்கப்படும் ரூ.15 லட்சம் குழுக்கடனை பெறுவதற்கு 18-60 வரை வயது உடையவராக
இருக்க வேண்டும். அத்துடன் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டியது
அவசியம்.
அதேபோல் தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு விதமான திட்டங்களை
ஒன்றிய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. சிறு தொழில் செய்வதற்காகவும், ஏற்கனவே
செய்யும் தொழிலை விரிவுப்படுத்தும் விதமாகவும் அரசு சார்பாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சுய உதவிக் குழுக்களுக்கான சிறு கடன் திட்டம் குறித்து புதிய அறிவிப்பு
ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தமிழ்நாடு
சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் (TAMCO) சார்பில் சிறு கடன் திட்டம்
சுய உதவிக் குழுக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒருவருக்கு
ஒன்றரை லட்சம் வரை கடன் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அதேபோல் தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை
நலத் துறை சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் நடப்பு நிதியாண்டுக்கு (2025-2026) சிறு கடன் திட்டம்
சுய உதவி குழுக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையின பெண்கள்/ஆண்கள் சுயஉதவிக்
குழுக்களை அமைத்து, தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ தொழில் துவங்க கடன் பெற முடியும்.
இதன் மூலம் காய்கறி கடை, மீன் மற்று பூ வியாபாரம், தையல் கடை, கைத்தொழில்கள் போன்ற
சிறுவணிகம் செய்யலாம். இந்த கடனை பெறுவதற்கு சிறுபான்மை சுய உதவி குழுவில் உறுப்பினராக
இருக்க வேண்டும்.
மற்றொரு திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ஒன்றரை லட்சம் வரை கடன்
பெறலாம். ஆண்டுக்கு ஆண் பயனாளிகளுக்கு 10%, பெண் பயனாளிகளுக்கு 8% வட்டி விகிதமும்
கணக்கிடப்படும். அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை வட்டியுடன் தவணைத் தொகையை திரும்ப
செலுத்த வேண்டும். தேவையான ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்
உள்ளிட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து கடன் பெறலாம்
என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் தேர்தலுக்கு ஓர் ஆண்டு இருப்பதால் இன்னும் பல சலுகைகள்
வரும் என்றே எதிர்பார்க்கலாம்.