News

Follow Us

தமிழகத்தில் பொங்கல் விழா களை கட்டத் தொடங்கியிருக்கிறது. தமிழக முதல்வர் கொளத்தூர் தொகுதியில் இருக்கும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் சமத்துவப் பொங்கலாக மனைவி துர்காவுடன் இணைந்து கொண்டாடினார்.

அதோடு இந்த பொங்கல் விழாவில் 1000 மாணவிகள் மற்றும் மகளிருக்கு பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்கினார். இந்த விழாவில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மாணவியர்களும் கலந்துகொண்டு கொண்டாடியது சிறம்ப்பம்சமாகும். அதேநேரம், இதற்கு கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்துக்களின் பண்டிகையான பொங்கலில் எப்படி இஸ்லாமியர்களையும் பிற சமயத்தினரையும் இணைத்துக் கொண்டாடலாம் என்று இந்து அமைப்புகள் கேள்வி எழுப்பிவருகிறார்கள். இது, தமிழர்களின் பண்டிகை என்பதால் இதில் சாதி, சமயங்களுக்கு இடமில்லை என்று தி.மு.க.வினர் பதில் கொடுத்துவருகிறார்கள்.

இந்த விழாவில் துர்கா ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சென்னை  மேயர் ஆர். பிரியா, அனிதா அச்சீவர்ஸ் அகாடமி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். எப்படியோ பொங்கல் அமர்க்களாமாக  ஆரம்பமாகியுள்ளது. இந்த விழாவில் கனிமொழி கலந்துகொண்டார் என்றாலும், அவருக்கு முக்கியத்துவம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link